Categories
சினிமா சுந்தர். சி தமிழ் சினிமா

‘சங்கமித்ரா’ படத்தை சர்வதேச அளவில் பேச வைக்கப்போகிறேன் : சுந்தர். சி

‘சங்கமித்ரா’ சர்வதேச அளவில் பேசப்படும். அதுதான் எங்கள் குறிக்கோள் என்று இயக்குநர் சுந்தர்.சி தெரிவித்துள்ளார்.

பிரான்ஸில் கான் திரைப்பட விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ள ‘சங்கமித்ரா’ படம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் அறிமுக விழாவில் இயக்குநர் சுந்தர்.சி, ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன், கலை இயக்குநர் சாபுசிரில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய படக்குழுவினருடன் தயாரிப்பாளர் முரளி ராமசாமியும் பங்கேற்றுள்ளனர்.

கான் திரைப்பட விழாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘சங்கமித்ரா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை இணையத்தில் வெளியிடப்பட்டும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

‘சங்கமித்ரா’ குறித்து முதன் முறையாக இயக்குநர் சுந்தர்.சி பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “‘சங்கமித்ரா’ பிரம்மாண்டமான பொழுதுபோக்கு படமாக இருக்கும். நான் எப்போதும் எடுக்க நினைத்த வகை படம் இது. கடந்த 10 வருடங்களாக இதற்கான யோசனை என்னிடம் இருந்தது. சரியான பட்ஜெட் மற்றும் தொழில்நுட்பத்துக்காக காத்திருந்தேன். இப்போது நேரம் கனிந்துவிட்டது. ஆரம்பிப்பதற்கு முன் அந்த கதைக்குத் தேவையானதை தர முடியுமா என்பதை உறுதி செய்ய விரும்பினேன்.

‘பாகுபலி’ தென்னிந்திய சினிமாவை தேசிய அளவில் பேச வைத்தது. ‘சங்கமித்ரா’ சர்வதேச அளவில் பேச வைக்கும். அதுதான் எங்கள் குறிக்கோள். அதனால்தான் படத்தை நாங்கள் கான் திரைப்பட விழாவில் துவக்கினோம். ’சங்கமித்ரா’ எந்த ஒரு மேற்கத்திய சாயலும் இல்லாமல் மொத்தமாக இந்தியப் படமாக இருக்கும் என்றாலும், சர்வதேச ரசிகர்களையும் மனதில் வைத்துள்ளோம்

இந்திய வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் சாதனைகளையும், வளத்தையும் உலகத்தின் பார்வைக்கு எடுத்து வர வேண்டும் என்பதே நோக்கம். இந்தியாவில் படம்பிடிக்கப்பட்ட மேற்கத்திய படங்கள் எல்லாம் சேரிகளையும், ஏழ்மையையும் மட்டுமே பேசின. அது இந்தியாவின் 5 சதவீதம் மட்டுமே. இந்தியாவின் மறுபக்கத்தை என் படம் கொண்டாடும்.

இதுவரை எனது வெற்றிகள் எல்லாமே இந்தப் படத்துக்கான ஏணிப்படிகள் தான். ‘சங்கமித்ரா’ தான் எனது இயக்குநர் வாழ்க்கையில் முக்கியப் படமாக இருக்கும்.” என்று தெரிவித்துள்ளார் சுந்தர்.சி

Share
Categories
இந்திய சினிமா சினிமா

காதலரை மிரட்டி கைக்குள் வைத்திருக்கும் ஆலியா பட்

பாலிவுட் நடிகை ஆலியா பட்டும், நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவும் காதலித்து வருகிறார்கள்.
இந்நிலையில் சித்தார்த் மல்ஹோத்ராவும், ஜாக்குலின் பெர்ணான்டஸும் சேர்ந்து ரீலோடட் என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார்கள்.
சித்தார்த் மற்றும் ஜாக்குலின் இடையே தற்போது நெருக்கம் ஏற்பட்டுள்ளதாக ஆலியா பட்டுக்கு தெரிய இனி ஜாக்குலின் பெர்ணான்டஸுடன் சேர்ந்து பார்த்தேன் அவ்வளவு தான் என தனது காதலரை எச்சரித்துள்ளாராம்.
காதலியின் பேச்சை கேட்டு சித்தார்த்தும் ஜாக்குலினுடன் ஊர் சுற்றுவதை நிறுத்தியுள்ளாராம்.
Share
Categories
இந்திய சினிமா சினிமா

பாகுபலி-2: உலக அளவில் மாபெரும் வசூல் சாதனை

பாகுபலி 2-ம் பாகம் உலக அளவில் இந்திய  சினிமா கண்டிராத மாபெரும் வசூல் சாதனை புரிந்துள்ளது.

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த மாதம் 28-ம் தேதிக்கு திரைக்கு வந்த இந்த படம் இதுவரை 1000 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இந்தியா முழுவதும் அரங்கு நிறைந்த காட்சிகளாக தினமும் 4000 திரையரங்குகளில் பாகுபலி ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் இந்த படம் வெளியாகி உள்ளது. பாகுபலி வெளியான முதல் வாரத்தில் இந்தியாவில் மட்டும் 680 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

இதனிடையே பாகுபலி திரைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. பிரபாஸ். ராடா, அனுஷ்கா, தமணா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ள பாகுபலி திரைப்படம் இந்திய திரைப்பட துறையில் சாதனையாக கருதப்படுகிறது.  4 ஆண்டுகள் கடுமையாக உழைத்து உருவாக்கிய  படத்தை சட்டவிரோதமாக வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திரை துறையினர் கருதுகின்றனர்.

Share
Categories
இந்திய சினிமா சினிமா தெலுங்கு சினிமா

ரசிகர்களுக்கு நடிகர் பிரபாஸ் நன்றி

அன்பு மழையில் நனைய வைத்த ரசிகர்களுக்கு நடிகர் பிரபாஸ் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், இதற்கு நன்றிக்கடனாக முழுத்திறமையையும் வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்விக்க முயன்றுள்ளேன் என்றார். பாகுபலி பட தயாரிப்பாளர்கள், இயக்குநர், நடிகர்கள் மற்றும் வாழ்நாள் முழுவதும் நோடிக்கு நொடி நினைத்துப் பெருமைப்படும் வாய்ப்பு தந்த ராஜமௌலிக்கும் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் பாகுபலி-2 திரைப்படம் வெளியாகி 9 நாட்களில் ரூ1,000 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

Share