Categories
இந்திய சினிமா சினிமா சினிமா இசை தமிழ் சினிமா தலைப்புச் செய்திகள்

ஏ.ஆர். ரகுமானின் லண்டன் இசைக் கச்சேரியால் ஹிந்தி ரசிகர்கள் விரக்தி

ஏ.ஆர்.ரகுமான் தனது 25 வருட இசைப் பயணத்தையொட்டி இலண்டனில் தனது இசை நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறார்.

 

இந்நிகழ்ச்சிகளைப் பற்றி ஏ.ஆர்.ரகுமான் கூறுகையில்,  “கடந்த 25 வருடங்களாக தொடரும் இசைப் பயணம் உண்மையிலேயே மறக்க முடியாதது. ஆச்சரியமானது. இந்த இசை சுற்றுப் பயணம் முழுக்க இசையும் நினைவுகளும்தான் முன் நிற்கின்றன. என் ரசிகர்களின் அன்பைப் பெற நான் ஆசிர்வதிக்கப்பட்டு உள்ளேன். அவர்களுடைய ஆதரவு எனக்கு ஊக்கம் தருகிறது. ‘ரோஜா’ முதல் ‘காற்று வெளியிடை’ படங்கள் வரைக்குமான என் இசைப் பயணத்தை கொண்டாடும் லண்டன் நிகழ்ச்சியை மிகவும் எதிர்பார்க்கிறேன்”, என்று தெரிவித்து இருந்தார்.

 

இந்த இசை நிகழ்ச்சிகளில் பென்னி தயால், நீத்தி மோகன், ஹரிசரன், ஜொனிடா காந்தி, ஜாவத் அலி போன்ற பிரபல பாடகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

 

“நேற்று இன்று நாளை” என்கிற இந்த இசை சுற்றுப் பயணத்தின் முதல் நிகழ்ச்சி ஜுலை 8-ம் தேதி லண்டனில் நடைப்பெற்றது. லண்டனில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ஏராளமான ரசிகர்கள் குவிந்து இருந்தனர். வழக்கமாக இசை நிகழ்ச்சிகளில் ஏ.ஆர். ரகுமான் இந்தி பாடல்களை பாடுவது வழக்கமானது. ஆனால் இந்த இசை நிகழ்ச்சியில் அவர் தமிழ் பாடல்களை மட்டும் பாடி தங்களை ஏமாற்றிவிட்டதாகவும், இதனால் நிகழ்ச்சியை புறக்கணித்து அரங்கத்தை விட்டு வெளியேறிவிட்டதாகவும் டுவிட்டரில் ரசிகர்கள் தகவல்களை வெளியிட்டு உள்ளனர்.

 

இந்தி பாடல்களை அவர் பாடாததை குறிப்பிட்டு தங்களுடைய கோபத்தை டுவிட்டரில் வார்த்தைகளில் பதிவிட்டு உள்ளனர்.

 

இதற்கு தமிழ் ரசிகர்கள் பதிலடியை கொடுத்ததால் டுவிட்டரில் மோதல் ஏற்பட்டு உள்ளது. அர்சனா சவந்த் என்ற ரசிகை வெளியிட்டு உள்ள டுவிட் செய்தியில், உங்களுடைய இன்றைய இசை நிகழ்ச்சியினால் மிகவும் ஏமாற்றம் அடைந்துவிட்டேன். இதற்காக மிகவும் நீண்ட காலம் நான் காத்து இருந்தேன். இதனை எதிர்பார்க்கவில்லை, என குறிப்பிட்டு உள்ளார். இந்தியில் பாடாததால் ஏமாற்றம் அடைந்துவிட்டதாகவும், இதனால் இசை நிகழ்ச்சியை விட்டு வெளியேறிவிட்டதாகவும் ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு உள்ளனர். சிலர் இசை நிகழ்ச்சிக்கு செலுத்திய கட்டணத்தை திருப்பி தாருங்கள், எங்களை மகிழ்விக்கவில்லை, இந்தியில் பாடவில்லை என்று எல்லாம் பதிவிட்டு உள்ளனர்.

 

இதற்கு பதிலடியாக தமிழ் ரசிகர்கள் டுவிட்டர்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். வெளிநாட்டில் உங்களால் ஒரு மணிநேரம் மற்றொரு மொழி பாடலை கேட்கமுடியவில்லை, இந்தி திணிப்பை எதிர்க்கொள்ளும் தென் இந்தியர்களின் நிலையின் உண்மை குறித்து நினைத்து பாருங்கள் என ஹர்சா என்ற டுவிட்டர்வாசி பதிலடியை கொடுத்து உள்ளார். இந்தி பாடல்களை எங்கே? என கேள்வி எழுப்பியவர்களுக்கு இந்த நிகழ்ச்சியானது பிரத்யேகமாக தமிழ் பாடல்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டது, நாங்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்து உள்ளோம். நிகழ்ச்சியின் பெயரே “நேற்று, இன்று, நாளை” தான் என தமிழர்கள் பதிலிட்டு உள்ளனர்.

 

இந்தி திணிப்பு என்றால் என்ன என்பதை தனது பாடல்கள் மூலம் புரியசெய்த ஏ.ஆர். ரகுமானுக்கு பாராட்டுக்கள் என அவரது ரசிகர்கள் டுவிட்டரில் வாழ்த்துக்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்தி பாடல்கள் மூலம் அவர் உலக அளவில் பிரபலம் ஆனார் என பதிவிட்டவர்களுக்கும் பதிலடி கொடுக்கப்பட்டு உள்ளது. இது தமிழ் இசை நிகழ்ச்சி. தமிழ் சினிமாதான் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. பிறகெப்படி அவர் இந்தி பாடல்களை பாடுவார்? என்றும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

Share
Categories
இந்திய சினிமா சினிமா தலைப்புச் செய்திகள்

கலாபவன் மணி மரணத்தில் நடிகர் திலீபுக்கு தொடர்பா ?

நடிகர் கலாபவன் மணி மரணத்தில் நடிகர் திலீபுக்கு தொடர்பு இருப்பதாக பிரபல இயக்குனர் பைஜூ இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டார்.

நடிகை பாவனா கடத்தல் விவகாரம் தொடர்பாக நடிகர் திலீப்  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டு உள்ளார்.  இந்நிலையில் மலையாள திரைப்பட இயக்குநர் பைஜூ வெளியிட்ட அறிக்கையில், நடிகர் கலாபவன் மணியின் மரணத்திற்கு திலீப் தான் காரணம் என்றும், அதற்கு முறையான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

கொச்சி மாவட்டத்தில் கொட்டாரகரையில் அமைந்துள்ள சி.பி.ஐ. அலுவலத்தில் இயக்குநர் பைஜூவும் இன்று புகார் அளித்தார். இதனால் மலையாள பட உலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  கலாபவன் மணி மரணத்தில் திலீப்புக்கு தொடர்பு இருப்பதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Share
Categories
இந்திய சினிமா சினிமா தலைப்புச் செய்திகள்

நடிகை பாவனா கடத்தல் விவகாரத்தில் நடிகர் திலீப் கைது

நடிகை பாவனா கடத்தல் விவகாரத்தில்  பிரபல நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார்.

சென்ற பிப்ரவரி மாதம் 17–ந் தேதி, நடிகை பாவனா கேரள மாநிலம் கொச்சியில் காரில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு மர்ம கும்பலால் வழிமறித்து கடத்தப்பட்டு, காரிலேயே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். கேரளாவையே உலுக்கிய இச்சம்பவம் நடந்த ஓரிரு நாளில், சம்பவம் நடந்த காரின் டிரைவர் மார்ட்டின் அந்தோணி என்பவன் கைதானான். அவன் பல்சர் சுனில் என்பவனை பற்றியும், அவனுடைய கூட்டாளிகளை பற்றியும் தெரிவித்தான். இதையடுத்து, பல்சர் சுனில் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இச்சம்பவத்தின் சதி பின்னணியை கண்டறிய ஐ.ஜி. தினேந்திர காஷ்யப் தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது. கூடுதல் டி.ஜி.பி. சந்தியா, வழக்கின் மேற்பார்வை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

இச்சம்பவத்தில், பிரபல மலையாள நடிகர் திலீப்புக்கு தொடர்பு இருப்பதாக ஆரம்பத்தில் இருந்தே கூறப்பட்டு வந்தது. இருப்பினும், அவர் அதை மறுத்து,  பல்சர் சுனிலை தனக்கு தெரியாது என்றார்.

இந்நிலையில்,  நடிகர் திலீப் நேற்று காலை கைது செய்யப்பட்டார். நடிகை பாவனாவை கடத்துவதற்கும், பாலியல் பலாத்காரம் செய்வதற்கும் சதித்திட்டம் தீட்டியதற்காக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

திலீப்பின் சதித்திட்டத்துக்கு காரணம் பாவனா மீது கொண்ட தனிப்பட்ட பகையே என்று பொலிசார் கூறினர்.  பல்சர் சுனில் தன்னிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக திலீப், கடந்த மாதம் போலீசில் புகார் தெரிவித்து இருந்தார். அதன் அடிப்படையில், அவரிடம் 2 வாரங்களுக்கு முன்பு போலீசார் 13 மணி நேரம் விசாரணை நடத்தினர். அதையடுத்து, திலீப்புக்கு எதிரான ஆதாரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகின. பல்சர் சுனில், திலீப்புக்கு எழுதிய கடிதம் மற்றும்  பல்சர் சுனிலுக்கும், திலீப்பின் மேலாளர் அப்புன்னிக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் அடங்கிய ஆடியோ ஆகியவை வெளியானது. கடந்த நவம்பர் மாதம் திலீப் நடித்த ஒரு படத்தின் படப்பிடிப்பு தளத்தில் பல்சர் சுனில் நிற்பது போன்ற புகைப்படமும் வெளியானது.

ரூ.50 லட்சம் கூலிக்காக, நடிகை பாவனாவை கடத்தியதாகவும்,  பாவனாவை பாலியல் பலாத்காரம் செய்தபோது எடுத்த வீடியோவை திலீப்பின் இரண்டாவது மனைவியான நடிகை காவ்யா மாதவன் நடத்தும் கடையின் ஊழியரிடம் கொடுத்து வைத்திருப்பதாகவும் பல்சர் சுனில் தெரிவித்தான். இதனால், காவ்யா மாதவன் மீதும் சந்தேகம் உருவாகி அவரது கடையில் போலீசார் சோதனை நடத்தினர்.

திலீப்பை கைது செய்யும் முடிவு, ஒரு வாரத்துக்கு முன்பே, போலீஸ் டி.ஜி.பி. லோகநாத் பெகரா தலைமையில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டது. அதற்காக, சிறப்பு விசாரணை குழு தலைவர் தினேந்திர காஷ்யப்பை கொச்சியிலேயே தங்கி இருக்குமாறு டி.ஜி.பி. உத்தரவிட்டார். இதையடுத்து, நடிகர் திலீப் நேற்று கைது செய்யப்பட்டார்.

சதித்திட்டத்திற்கான பின்னணி குறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது:

நடிகர் திலீப், அவருடைய முதல் மனைவியான நடிகை மஞ்சு வாரியர், நடிகை பாவனா ஆகியோர் இணைந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தனர். ஒருகட்டத்தில், காவ்யா மாதவன் மீது திலீப் காதல்வயப்பட்டார். இதை மஞ்சு வாரியரிடம் பாவனா தெரிவிக்கவே, பாவனா மீது திலீப் ஆத்திரம் அடைந்தார். பின்னர், மஞ்சு வாரியரை விவாகரத்து செய்த திலீப், காவ்யா மாதவனை 2–வது திருமணம் செய்து கொண்டார். முன்பு, கூட்டாக ரியல் எஸ்டேட் வர்த்தகம் செய்தபோது வாங்கிய சில நிலங்களை பெயர் மாற்றம் செய்ய கையெழுத்து போடுமாறு திலீப் கேட்டபோது, பாவனா மறுத்து விட்டதாக தெரிகிறது. இதற்கிடையே, பாவனாவுக்கு திருமணம் நிச்சயம் ஆனது. அந்த திருமணத்தை கெடுக்கும் நோக்கத்தில், பாவனாவை பாலியல் பலாத்காரம் செய்து, அந்த வீடியோவை அவருடைய வருங்கால கணவருக்கு அனுப்பி வைக்க பல்சர் சுனிலுடன் இணைந்து திலீப் சதித்திட்டம் தீட்டியிருக்கிறார். தற்போது சதித்திட்டம் அம்பலம் ஆனதால், திலீப் கைது செய்யப்பட்டார்.

Share
Categories
இந்திய சினிமா சினிமா

லூமியர் சகோதரர்களின் சலனப்படத் தொகுப்பு புனேயில் திரையிடப்பட்டது

முதன் முதலாக சலனப்படங்களை எடுத்து உலகம் முழுவதும் எடுத்துச் சென்று சினிமா எனும் கலைவடிவம் தோன்றிப் பரவக் காரணமானவர்கள் லூமியர் சகோதரர்கள் ஆவர். இவர்களது திரைப்படங்களின் காட்சித் தொகுப்புக்களை புனேவில் திரையிட்ட நிகழ்சிக்கு மும்பையிலிருந்து ஏராளமானோர் வந்திருந்தனர். இதில் சிறுவர்கள் முதல் அனைத்து வயதினரும் காணப்பட்டனர்.
லூமியர் சகோதரர்களின் தி கார்ட்டெனர் அல்லது ஜம்பிங் தி பிளாங்கெட் போன்ற திரைக்காட்சித் தொகுப்புகளை அவர்கள் ரசித்துப் பார்த்தனர். முக்கியமாக ரசிகர்கள் அதிகம் பாராட்டியது அரிதான காட்சிகளின் தொகுப்பான வித் அவர் கிங் அண்ட் குயின் த்ரூக் இந்தியா (1912) எனும் படத்தின் காட்சிகளையாகும். இது 1911 ஆம் ஆண்டின் டெல்லி தர்பார் சமயத்தில் எடுக்கப்பட்டதாகும்.
Share
Categories
இந்திய சினிமா கேரளா சினிமா

நடிகை பாவனா கடத்தல் : நடிகர் திலீப்பிடம் விசாரணை; காவ்யா மாதவன் நிறுவனத்தில் சோதனை

நடிகை பாவனா கடத்தல் வழக்கை போலீசார் மிகவும் தீவிரமாக நடிகர் திலீப், நதிர்ஷா
ஆகியோரிடம்  விசாரித்து வருகின்றனர். இந்த கடத்தலில் முக்கிய குற்றவாளி என கைது செய்யப்பட்டிருக்கும் பல்சர் சுனிலிடம் இருந்து நடிகர் திலீப்பிற்கு கடிதம் வந்ததையடுத்து போலீசார் நடிகரிடம் 13 மணிநேரம் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் காக்கநாட்டில் நடிகர் திலீப்பின் 2வது மனைவியும், நடிகையுமான காவ்யா மாதவனுக்கு சொந்தமான ஆன்லைன் ஆடை நிறுவனம் இருப்பது தெரியவந்தது. அதனால் அந்த ஆடை நிறுவனத்தை போலீசார் கடந்த சில நாட்களாக ரகசியமாக கண்காணித்தனர்.

பின்னர், போலீசார் அங்கு சுமார் 3 மணி நேரம் சோதனை நடத்தினர். அப்போது சில ஆவணங்களை போலீசார் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. நடிகை பாவனா விவகாரத்தில் காவ்யா மாதவன் நிறுவனத்தில் போலீசார் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

Share
Categories
இந்திய சினிமா ஈஸ்வரி ராவ் சினிமா தமிழ் சினிமா

ரஜினிகாந்தின் ‘காலா’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பது இன்ப அதிர்ச்சி: நடிகை ஈஸ்வரி ராவ்

ரஜினிகாந்தின் ‘காலா’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பது தன்னுடைய குழந்தைகளை அதிரவைத்து இருப்பதாக நடிகை ஈஸ்வரி ராவ் தெரிவித்துள்ளார்.

‘கபாலி’ வெற்றிக்குப் பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கி வருகிறார். இந்தப் படத்துக்கு ‘காலா’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தில் ரஜினி மும்பையைச் சேர்ந்த தாதாவாக நடிக்கிறார். படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த மாத இறுதியில் மும்பையில் தொடங்கியது.

Tamil Actress Eswari Rao Photos
 இந்தப் படத்தில் பாலிவுட் நடிகைகள் அஞ்சலி பாட்டில், ஹூமா குரோஷி, நானா படேகர், சமுத்திரகனி, பங்கஜ் திரிபாதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். படத்தில் நடிகர் தனுஷ் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வரிசையில் தற்போது நடிகை ஈஸ்வரி ராவும் முக்கிய கதாபாத்திரமாக இணைந்துள்ளார். இது குறித்து  நடிகை ஈஸ்வரி ராவ் கூறியதாவது:

ரஜினிகாந்துடன் இணைந்து ‘காலா’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பதால் எனது குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனது ரோல் குறித்து இப்போது எதுவும் கூற முடியாது. இதில் நடிப்பதற்காக மிகவும் ஆர்வமாக உள்ளேன் என்று கூறினார்.

Share
Categories
இந்திய சினிமா சினிமா

சீனாவில் தங்கல் சாதனை: ரூ.1913 கோடி வசூல்

நிதேஷ் திவாரி இயக்கத்தில், அமீர்கான் நடிப்பில் சீனாவில் வெளியான தங்கல் திரைப்படம் சுமார் 1913 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

நிதேஷ் திவாரி இயக்கத்தில், அமீர் கான் நடித்த படம், உண்மை சம்பவத்தை தழுவிய தங்கல். இந்த படம் இந்தி, தமிழ், தெலுங்கு என 3 மொழிகளில் இந்தியா முழுவதும் வெளியிடப்பட்டு வசூலில் சாதனை படைத்தது. இதைத் தொடர்ந்து சீனாவில் மே 5ம் தேதி, வெளியிடப்பட்ட இந்த படத்திற்கு அங்கும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த படம் சீனாவில் தற்போது வரை சுமார் 1130 கோடி ரூபாயும், உலகம் முழுக்க மொத்தம் 1913 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இன்னும் சில நாள்களில் 2000 கோடி வசூலை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் சீனாவில் வெளியான படங்களின் டாப் 20 இடத்தில் தங்கல் படம் இடம் பிடித்துள்ளது.

Share
Categories
அனுஷ்கா இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பாகுபலி படத்தின் விளம்பரத்திற்காக பிரபாஸ், அனுஷ்கா ஜோடியாக சீனா செல்கின்றனர்

வரும் ஜூலை மாதம் பாகுபலி 2 சீனாவில் வெளியாகிறது. இந்நிலையில் படத்தை விளம்பரம் செய்ய பிரபாஸ், அனுஷ்கா ஜோடியாக சீனா செல்கின்றனர். இந்த ஜோடி ரசிகர்கள் பிடித்து போக இவர்கள் நிஜ வாழ்க்கையிலும் ஜோடியாக வேண்டுமென்று ரசிகர்கள் தங்களது கருத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.

பின் இருவரும் காதலிப்பதாகவும், திருமணம் செய்துக்கொள்ள போவதாகவும் வதந்திகள் பரவியது. இதையடுத்து அனுஷ்கா இதற்கு மறுப்பு தெரிவித்தார். மேலும் இதுகுறித்து யாரவது வதந்தி பரப்பினால் வழக்கு தொடருவேன் என எச்சரிக்கையும் விடுத்தார்.

தற்போது சீனாவில் பாகுபலி 2 படத்தை மிக பிரமாண்டமாக வெளியிட திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே தங்கல் திரைப்படம் சீனாவில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது. அதேபோன்று பாகுபலி 2 திரைப்படமும் சீனாவில் வெற்றிப்பெறும் என்ற நம்பிக்கையுடன் உள்ளனர்.

Share
Categories
இந்திய சினிமா சினிமா ஷாருக்கான்

ஷாருக்கான் இறந்ததாக வெளியான போலி செய்தியால் பரபரப்பு

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் விமான விபத்தில் உயிரிழந்துவிட்டதாக, பிரபல ஐரோப்பிய டிவி முக்கிய செய்தி தவறாக வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெட் விமானத்தில் தன்னுடைய உதவியாளர்களுடன் பாரீசுக்கு, ஷாருக்கான் சென்று கொண்டிருந்ததாகவும், மோசமான தட்பவெப்பநிலையால் அந்த விமானம் வெடித்து சிதறியதில் அவர் உள்பட 7 பேர் இறந்து விட்டதாக, ஐரோப்பிய டிவி செய்தி வெளியிட்டுள்ளது.

உடனே இதற்கு மறுப்பு தெரிவித்த ஷாருக்கான், தனது ட்விட்டர் பக்கத்தில் தான் நலமுடன் இருப்பதாக, தனது புகைப்படத்துடன் தகவல் வெளியிட்டார்.

அதே சமயம், சில நாட்களுக்கு முன்பு ஷாருக்கான் நடிக்கும் புதிய படத்துக்காக போடப்பட்ட அரங்கம் திடீரென இடிந்து விழுந்ததில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவத்தை நினைவுப்படுத்தியவர், இந்த வாரம் தனக்கு சோகமான வாரமாகவே அமைந்துவிட்டது, என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Share
Categories
சினிமா சுந்தர். சி தமிழ் சினிமா ஸ்ருதி ஹாசன்

சங்கமித்ரா திரைப்படத்திலிருந்து ஸ்ருதி ஹாசன் விலகல்

இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில், ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பெரும் செலவில் வெளியாகவிருக்கும் சரித்திர பின்னனி கொண்ட படமாக அறிவிக்கப்பட்ட சங்கமித்ராவில், ஜெயம் ரவி, ஆர்யா மற்றும் ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

எட்டாம் நூற்றாண்டில் நடைபெறும் கதையாக அமையவுள்ள இப்படத்தின் முதல் பார்வை கான் திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டது; அதில் ஸ்ருதி ஹாசன் உட்பட ஆர்யா, சுந்தர்.சி மற்றும் ஜெயம் ரவி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இப்படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் விலகியுள்ளதாக படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. தற்போது விலகலுக்கான காரணம் குறித்து ஸ்ருதிஹாசன் தரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“துரதிர்ஷ்டவசமாக சங்கமித்ராவில் பங்காற்ற வேண்டாம் என்ற முடிவை ஸ்ருதிஹாசன் எடுக்கும் நிலையில் உள்ளார். இந்த படம் எவ்வளவு பெரியது, 2 வருடங்கள் படப்பிடிப்புக்கான தேதிகள் என அனைத்தும் தெரிந்தே ஸ்ருதிஹாசன் நடிக்க வந்தார். தனது கதாபாத்திரத்துக்கான பயிற்சி, முழு வடிவ திரைக்கதை மற்றும் முறையான படப்பிடிப்பு தேதிகள் ஆகியவை குறித்த முக்கியத்துவம் அவருக்கு தெரியும்.

படப்பிடிப்புக்கு தயாராக, ஏப்ரல் மாதத்திலிருந்து சிறந்த சண்டைப் பயிற்சியாளரிடம் பயிற்சி பெற ஆரம்பித்துவிட்டார். ஆனல், ‘சங்கமித்ரா’ படத்தின் மீது அவருக்கிருந்த ஆர்வம், அர்ப்பணிப்பு ஆகியவற்றை தாண்டி, இந்த முடிவை எடுக்கவேண்டியிருந்தது. முழுமையான ஸ்கிரிப்ட் அவருக்கு தரப்படவில்லை. படப்பிடிப்பு தேதிகளும் சரியாக முடிவு செய்யப்படவில்லை. இதுவே அவரது முடிவுக்குக் காரணம்.

ஸ்ருதி, தற்போது, அவர் நடித்துள்ள பெஹன் ஹோகி தேரி பாலிவுட் படத்தின் விளம்பர வேலைகளில் இருக்கிறார். தொடர்ந்து ‘சபாஷ் நாயுடு’ படத்துக்காக தயாராகிவருகிறார்” என்று தெரிவித்துள்ளார்கள்.

Share