Categories
சினிமா தமிழகம் தமிழ் சினிமா தலைப்புச் செய்திகள்

நடிகர் சிவாஜி கணேசனின் சிலை அகற்றப்பட்டு வெறு இடத்திற்கு மாற்றப்படும்

சென்னை கடற்கரையிலுள்ள காமராஜர் சாலையிலிருந்து நடிகர் சிவாஜி கணேசனின் சிலை அகற்றப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலினால் இந்த சிலை அகற்றப்பட்டதாகவும், விரைவில் அடையாறில் கட்டப்படும் சிவாஜி மணிமண்டபத்திற்கு மாற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், புதிதாக மெரினா கடற்கரையில் ஒரு சிலை நிறுவ வேண்டும் என சிவாஜி மகன்களான ராம்குமாரும் பிரபுவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து ராம்குமார் மற்றும் பிரபு கூறியதாவது:

நீதிமன்ற உத்தரவை ஏற்று, அரசு சிலையை அகற்றுகிறது. அரசுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக உள்ளோம். கோர்ட்டை மதிக்க வேண்டியது நமது கடமை. எனவே அரசு நடவடிக்கையை ஏற்கிறோம். மெரீனா கடற்கரையில் தலைவர்கள், புலவர்கள், அறிஞர்கள் சிலைகள், கண்ணகி சிலை, உழைப்பாளர் சிலைகள் உள்ளன. எனவே நடிப்புக்கு பெருமை சேர்த்த தமிழர் சிவாஜி கணேசனுக்கு கடற்கரையில் சிலை அமைக்க வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவாஜி ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்களும் இந்த வேண்டுகோளை வைத்து இருக்கிறார்கள். பெருந்தலைவர் காமராஜரின் தொண்டராக இருந்தவர் சிவாஜி. எனவே கடற்கரையில் உள்ள தேசத் தந்தை காந்தி, பெருந்தலைவர் காமராஜர் சிலைகளுக்கு இடையே, சிவாஜிக்கு புதிய சிலை அமைக்கும் முயற்சியை சிவாஜி ரசிகர் மன்றம் மூலம் நாங்கள் செய்வோம். இதற்கான அனுமதியை சட்டப்பூர்வமாக அரசிடம் பெற வற்புறுத்துவோம். எங்கள் குடும்பத்தினரும் சேர்ந்து இதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுப்போம்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Share
Categories
எடப்பாடி பழனிசாமி சினிமா தமிழகம் தமிழ் சினிமா தலைப்புச் செய்திகள்

திரைப்படத்துறை மீதான கேளிக்கை வரி : பேச்சுவார்த்தை தோல்வி

திரைத்துறை மீதும் 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இத்துடன் கேளிக்கை வரி 30 சதவீதம் சேர்த்து வசூலிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஜூலை 3ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 1000 தியேட்டர்கள் மூடப்பட்டன. அதன் பின்னர் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வேலை நிறுத்தம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.

 

இதுதொடர்பாக, முதல்வர், அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் சுமுக தீர்வு ஏற்படாதநிலையில், இன்று மூன்றாம் கட்ட இறுதிப் பேச்சு வார்த்தை சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இதில், தொழிற்துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, நிதித்துறை செயலாளர் சண்முகம் மற்றும் திரைத்துறையினர் சார்பில் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சங்கத்தைச் சேர்ந்த விஷால், அபிராமி ராமநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதிலும், சுமுக உடன்பாடு எட்டப்படாததால், பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாக திரைத்துறையினர் கூறியுள்ளனர்.

 

Share
Categories
கமல்ஹாசன் சினிமா தமிழகம் தலைப்புச் செய்திகள்

முடிவெடுத்தால் யாம் முதல்வர்…விரைவில் ஒரு விளி கேட்கும் : கமல்ஹாசன்

தமிழக அரசியலில் ஊழல் நிறைந்துள்ளது என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்திற்கு தமிழக அமைச்சர்கள்  பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். பல அமைச்சர்கள் கமல்ஹாசனை விமர்சித்து காரசாரமாக பேசினர். ஆயினும், நடிகர் கமல்ஹாசனுக்கு ஆதரவாகவும் பல்வேறு தரப்பில் இருந்து கருத்துக்கள் வெளியாயின.

தன் மீது வசை பாடியவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக டுவிட்டரில்  இன்று சில கருத்துக்களை கமல்ஹாசன் பதிவு செய்துள்ளார்.

அதில், ”அமையாது அலைபவர்க்கும் அமைந்த என் தோழர்க்கும், விரைவில் ஒரு விளி கேட்கும். கேட்டு அமைதி காப்பீர். உண்மை வெயிலில் காயும் நேற்றைய மழைக்காளான்” என்று முதலில் ஒரு ட்வீட்டை பதிவிட்டுள்ளார்.

மேலுமொரு ட்வீட்டில் ஒரு கவிதையை எழுதியுள்ளார்.

இடித்துரைப்போம் யாருமினி மன்னரில்லை
துடித்தெழுவோம் மனதளவில் உம்போல் யாம் மன்னரில்லை
தோற்றிறந்தால் போராளி
முடிவெடுத்தால் யாம் முதல்வர்
அடிபணிவோர் அடிமையரோ?
முடிதுறந்தோர் தோற்றவரோ?
போடா மூடா எனலாம் அது தவறு
தேடாப் பாதைகள் தென்படா
வாடா தோழா என்னுடன்
மூடமை தவிர்க்க முனைவரே தலைவர்

அன்புடன் நான்

என்று ஒரு கவிதையையும் அவர் பதிவிட்டுள்ளார். மேலும் கவிதை புரியாதவர்களுக்கு நாளை ஆங்கிலப் பத்திரிகையில் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறியுள்ளார். இதனால், விரைவில் கமலஹாசன் அரசியல் பிரவேசம் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share
Categories
இந்திய சினிமா சினிமா சினிமா இசை தமிழ் சினிமா தலைப்புச் செய்திகள்

ஏ.ஆர். ரகுமானின் லண்டன் இசைக் கச்சேரியால் ஹிந்தி ரசிகர்கள் விரக்தி

ஏ.ஆர்.ரகுமான் தனது 25 வருட இசைப் பயணத்தையொட்டி இலண்டனில் தனது இசை நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறார்.

 

இந்நிகழ்ச்சிகளைப் பற்றி ஏ.ஆர்.ரகுமான் கூறுகையில்,  “கடந்த 25 வருடங்களாக தொடரும் இசைப் பயணம் உண்மையிலேயே மறக்க முடியாதது. ஆச்சரியமானது. இந்த இசை சுற்றுப் பயணம் முழுக்க இசையும் நினைவுகளும்தான் முன் நிற்கின்றன. என் ரசிகர்களின் அன்பைப் பெற நான் ஆசிர்வதிக்கப்பட்டு உள்ளேன். அவர்களுடைய ஆதரவு எனக்கு ஊக்கம் தருகிறது. ‘ரோஜா’ முதல் ‘காற்று வெளியிடை’ படங்கள் வரைக்குமான என் இசைப் பயணத்தை கொண்டாடும் லண்டன் நிகழ்ச்சியை மிகவும் எதிர்பார்க்கிறேன்”, என்று தெரிவித்து இருந்தார்.

 

இந்த இசை நிகழ்ச்சிகளில் பென்னி தயால், நீத்தி மோகன், ஹரிசரன், ஜொனிடா காந்தி, ஜாவத் அலி போன்ற பிரபல பாடகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

 

“நேற்று இன்று நாளை” என்கிற இந்த இசை சுற்றுப் பயணத்தின் முதல் நிகழ்ச்சி ஜுலை 8-ம் தேதி லண்டனில் நடைப்பெற்றது. லண்டனில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ஏராளமான ரசிகர்கள் குவிந்து இருந்தனர். வழக்கமாக இசை நிகழ்ச்சிகளில் ஏ.ஆர். ரகுமான் இந்தி பாடல்களை பாடுவது வழக்கமானது. ஆனால் இந்த இசை நிகழ்ச்சியில் அவர் தமிழ் பாடல்களை மட்டும் பாடி தங்களை ஏமாற்றிவிட்டதாகவும், இதனால் நிகழ்ச்சியை புறக்கணித்து அரங்கத்தை விட்டு வெளியேறிவிட்டதாகவும் டுவிட்டரில் ரசிகர்கள் தகவல்களை வெளியிட்டு உள்ளனர்.

 

இந்தி பாடல்களை அவர் பாடாததை குறிப்பிட்டு தங்களுடைய கோபத்தை டுவிட்டரில் வார்த்தைகளில் பதிவிட்டு உள்ளனர்.

 

இதற்கு தமிழ் ரசிகர்கள் பதிலடியை கொடுத்ததால் டுவிட்டரில் மோதல் ஏற்பட்டு உள்ளது. அர்சனா சவந்த் என்ற ரசிகை வெளியிட்டு உள்ள டுவிட் செய்தியில், உங்களுடைய இன்றைய இசை நிகழ்ச்சியினால் மிகவும் ஏமாற்றம் அடைந்துவிட்டேன். இதற்காக மிகவும் நீண்ட காலம் நான் காத்து இருந்தேன். இதனை எதிர்பார்க்கவில்லை, என குறிப்பிட்டு உள்ளார். இந்தியில் பாடாததால் ஏமாற்றம் அடைந்துவிட்டதாகவும், இதனால் இசை நிகழ்ச்சியை விட்டு வெளியேறிவிட்டதாகவும் ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு உள்ளனர். சிலர் இசை நிகழ்ச்சிக்கு செலுத்திய கட்டணத்தை திருப்பி தாருங்கள், எங்களை மகிழ்விக்கவில்லை, இந்தியில் பாடவில்லை என்று எல்லாம் பதிவிட்டு உள்ளனர்.

 

இதற்கு பதிலடியாக தமிழ் ரசிகர்கள் டுவிட்டர்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். வெளிநாட்டில் உங்களால் ஒரு மணிநேரம் மற்றொரு மொழி பாடலை கேட்கமுடியவில்லை, இந்தி திணிப்பை எதிர்க்கொள்ளும் தென் இந்தியர்களின் நிலையின் உண்மை குறித்து நினைத்து பாருங்கள் என ஹர்சா என்ற டுவிட்டர்வாசி பதிலடியை கொடுத்து உள்ளார். இந்தி பாடல்களை எங்கே? என கேள்வி எழுப்பியவர்களுக்கு இந்த நிகழ்ச்சியானது பிரத்யேகமாக தமிழ் பாடல்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டது, நாங்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்து உள்ளோம். நிகழ்ச்சியின் பெயரே “நேற்று, இன்று, நாளை” தான் என தமிழர்கள் பதிலிட்டு உள்ளனர்.

 

இந்தி திணிப்பு என்றால் என்ன என்பதை தனது பாடல்கள் மூலம் புரியசெய்த ஏ.ஆர். ரகுமானுக்கு பாராட்டுக்கள் என அவரது ரசிகர்கள் டுவிட்டரில் வாழ்த்துக்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்தி பாடல்கள் மூலம் அவர் உலக அளவில் பிரபலம் ஆனார் என பதிவிட்டவர்களுக்கும் பதிலடி கொடுக்கப்பட்டு உள்ளது. இது தமிழ் இசை நிகழ்ச்சி. தமிழ் சினிமாதான் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. பிறகெப்படி அவர் இந்தி பாடல்களை பாடுவார்? என்றும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

Share
Categories
சினிமா தமிழ் சினிமா

காயத்ரி ரகுராம் பேச்சுக்கு தாயார் மன்னிப்பு கேட்டார்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிக சர்ச்சையில் சிக்கியிருக்கும் நடிகை காயத்ரி ரகுராம்,   நடிகை ஓவியாவை திட்டும் போது ‘சேரி பிகேவியர்’ என்று கூறியதால், சேரிமக்களை இழிவுபடுத்தியுள்ளார் என கூறப்பட்டது.   சேரி என்ற வார்த்தையை கூறியதால் பொதுமக்களின் அதிக எதிர்ப்புக்கு ஆளாகியுள்ளார்.

ஆனால், எனது மகளை தவிர அந்த நிகழ்ச்சியில் உள்ள அனைவரும் நடிக்கின்றனர் என காயத்ரியின் தாய் கிரிஜா கூறியுள்ளார். சேரி தொடர்பாக காயத்ரி ரகுராம் பேசிய வார்த்தைகள் மக்களை பாதித்திருந்தால் மன்னிப்பு கேட்கிறேன். காயத்ரி ரகுராமை கேவலபடுத்த வேண்டாம் என கேட்டுகொண்டார்.

Share
Categories
இந்திய சினிமா சினிமா தலைப்புச் செய்திகள்

கலாபவன் மணி மரணத்தில் நடிகர் திலீபுக்கு தொடர்பா ?

நடிகர் கலாபவன் மணி மரணத்தில் நடிகர் திலீபுக்கு தொடர்பு இருப்பதாக பிரபல இயக்குனர் பைஜூ இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டார்.

நடிகை பாவனா கடத்தல் விவகாரம் தொடர்பாக நடிகர் திலீப்  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டு உள்ளார்.  இந்நிலையில் மலையாள திரைப்பட இயக்குநர் பைஜூ வெளியிட்ட அறிக்கையில், நடிகர் கலாபவன் மணியின் மரணத்திற்கு திலீப் தான் காரணம் என்றும், அதற்கு முறையான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

கொச்சி மாவட்டத்தில் கொட்டாரகரையில் அமைந்துள்ள சி.பி.ஐ. அலுவலத்தில் இயக்குநர் பைஜூவும் இன்று புகார் அளித்தார். இதனால் மலையாள பட உலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  கலாபவன் மணி மரணத்தில் திலீப்புக்கு தொடர்பு இருப்பதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Share
Categories
இந்திய சினிமா சினிமா தலைப்புச் செய்திகள்

நடிகை பாவனா கடத்தல் விவகாரத்தில் நடிகர் திலீப் கைது

நடிகை பாவனா கடத்தல் விவகாரத்தில்  பிரபல நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார்.

சென்ற பிப்ரவரி மாதம் 17–ந் தேதி, நடிகை பாவனா கேரள மாநிலம் கொச்சியில் காரில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு மர்ம கும்பலால் வழிமறித்து கடத்தப்பட்டு, காரிலேயே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். கேரளாவையே உலுக்கிய இச்சம்பவம் நடந்த ஓரிரு நாளில், சம்பவம் நடந்த காரின் டிரைவர் மார்ட்டின் அந்தோணி என்பவன் கைதானான். அவன் பல்சர் சுனில் என்பவனை பற்றியும், அவனுடைய கூட்டாளிகளை பற்றியும் தெரிவித்தான். இதையடுத்து, பல்சர் சுனில் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இச்சம்பவத்தின் சதி பின்னணியை கண்டறிய ஐ.ஜி. தினேந்திர காஷ்யப் தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது. கூடுதல் டி.ஜி.பி. சந்தியா, வழக்கின் மேற்பார்வை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

இச்சம்பவத்தில், பிரபல மலையாள நடிகர் திலீப்புக்கு தொடர்பு இருப்பதாக ஆரம்பத்தில் இருந்தே கூறப்பட்டு வந்தது. இருப்பினும், அவர் அதை மறுத்து,  பல்சர் சுனிலை தனக்கு தெரியாது என்றார்.

இந்நிலையில்,  நடிகர் திலீப் நேற்று காலை கைது செய்யப்பட்டார். நடிகை பாவனாவை கடத்துவதற்கும், பாலியல் பலாத்காரம் செய்வதற்கும் சதித்திட்டம் தீட்டியதற்காக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

திலீப்பின் சதித்திட்டத்துக்கு காரணம் பாவனா மீது கொண்ட தனிப்பட்ட பகையே என்று பொலிசார் கூறினர்.  பல்சர் சுனில் தன்னிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக திலீப், கடந்த மாதம் போலீசில் புகார் தெரிவித்து இருந்தார். அதன் அடிப்படையில், அவரிடம் 2 வாரங்களுக்கு முன்பு போலீசார் 13 மணி நேரம் விசாரணை நடத்தினர். அதையடுத்து, திலீப்புக்கு எதிரான ஆதாரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகின. பல்சர் சுனில், திலீப்புக்கு எழுதிய கடிதம் மற்றும்  பல்சர் சுனிலுக்கும், திலீப்பின் மேலாளர் அப்புன்னிக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் அடங்கிய ஆடியோ ஆகியவை வெளியானது. கடந்த நவம்பர் மாதம் திலீப் நடித்த ஒரு படத்தின் படப்பிடிப்பு தளத்தில் பல்சர் சுனில் நிற்பது போன்ற புகைப்படமும் வெளியானது.

ரூ.50 லட்சம் கூலிக்காக, நடிகை பாவனாவை கடத்தியதாகவும்,  பாவனாவை பாலியல் பலாத்காரம் செய்தபோது எடுத்த வீடியோவை திலீப்பின் இரண்டாவது மனைவியான நடிகை காவ்யா மாதவன் நடத்தும் கடையின் ஊழியரிடம் கொடுத்து வைத்திருப்பதாகவும் பல்சர் சுனில் தெரிவித்தான். இதனால், காவ்யா மாதவன் மீதும் சந்தேகம் உருவாகி அவரது கடையில் போலீசார் சோதனை நடத்தினர்.

திலீப்பை கைது செய்யும் முடிவு, ஒரு வாரத்துக்கு முன்பே, போலீஸ் டி.ஜி.பி. லோகநாத் பெகரா தலைமையில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டது. அதற்காக, சிறப்பு விசாரணை குழு தலைவர் தினேந்திர காஷ்யப்பை கொச்சியிலேயே தங்கி இருக்குமாறு டி.ஜி.பி. உத்தரவிட்டார். இதையடுத்து, நடிகர் திலீப் நேற்று கைது செய்யப்பட்டார்.

சதித்திட்டத்திற்கான பின்னணி குறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது:

நடிகர் திலீப், அவருடைய முதல் மனைவியான நடிகை மஞ்சு வாரியர், நடிகை பாவனா ஆகியோர் இணைந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தனர். ஒருகட்டத்தில், காவ்யா மாதவன் மீது திலீப் காதல்வயப்பட்டார். இதை மஞ்சு வாரியரிடம் பாவனா தெரிவிக்கவே, பாவனா மீது திலீப் ஆத்திரம் அடைந்தார். பின்னர், மஞ்சு வாரியரை விவாகரத்து செய்த திலீப், காவ்யா மாதவனை 2–வது திருமணம் செய்து கொண்டார். முன்பு, கூட்டாக ரியல் எஸ்டேட் வர்த்தகம் செய்தபோது வாங்கிய சில நிலங்களை பெயர் மாற்றம் செய்ய கையெழுத்து போடுமாறு திலீப் கேட்டபோது, பாவனா மறுத்து விட்டதாக தெரிகிறது. இதற்கிடையே, பாவனாவுக்கு திருமணம் நிச்சயம் ஆனது. அந்த திருமணத்தை கெடுக்கும் நோக்கத்தில், பாவனாவை பாலியல் பலாத்காரம் செய்து, அந்த வீடியோவை அவருடைய வருங்கால கணவருக்கு அனுப்பி வைக்க பல்சர் சுனிலுடன் இணைந்து திலீப் சதித்திட்டம் தீட்டியிருக்கிறார். தற்போது சதித்திட்டம் அம்பலம் ஆனதால், திலீப் கைது செய்யப்பட்டார்.

Share
Categories
சினிமா தமிழ் சினிமா வடிவேலு விஜய்

மெர்சல் படப்பிடிப்பில் வடிவேலு படுகாயம் என்று வதந்தி

அட்லீ இயக்கத்தில் விஜய் மெர்சல் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தில் வைகைப் புயல் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய்யுடன் இணைந்து நடித்து வருகிறார். அப்போது மெர்சல் செட்டில் நடித்துக் கொண்டிருந்த போது வடிவேலு படுகாயம் அடைந்ததாக தகவல் பரவியது. உண்மையில், வடிவேலு நன்றாக இருப்பதாகவும், இது வெறும் வதந்தி என்றும் அவருக்கு நெருக்கான வட்டாரத்தில் கூறப்படுகிறது.

 

Share
Categories
சினிமா தமிழ் சினிமா

ஆங்கில படத்துக்கான ஒலிப்பதிவு விருதுக்கு ஏ.ஆர்.ரகுமான் பெயர்

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், ஏற்கனவே ஆஸ்கார் விருது பெற்றவர். இந்நிலையில், ‘வைஸ்ராய் ஹவுஸ்’ என்ற ஆங்கில படத்தின் ஒலிப்பதிவுக்காக அவர் உலக ஒலிப்பதிவு விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். பொதுமக்கள் விருப்பத்தின் அடிப்படையில், அவர் போட்டியாளர்களில் ஒருவராக இடம்பிடித்துள்ளார்.
இந்த படம் இந்திய வம்சாவளி இங்கிலாந்து இயக்குனர் குரிந்தர் சத்தா இயக்கி உள்ளார். ஹுமா குரேஷி, ஹுக் போனிவில்லே, கில்லியன் ஆண்டர்சன், மறைந்த நடிகர் ஓம்புரி ஆகியோர் நடித்துள்ளனர். ஏற்கனவே இங்கிலாந்தில் வெளியான இப்படம், ‘பார்ட்டிசன்-1947’ என்ற பெயரில் ஆகஸ்டு 18-ந் தேதி இந்தியாவில் வெளியாகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தின் இறுதி நாட்களில், வைஸ்ராய் இல்லத்தில் (தற்போதைய ஜனாதிபதி மாளிகை) நடைபெற்ற நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளது.
Share
Categories
இந்திய சினிமா சினிமா

லூமியர் சகோதரர்களின் சலனப்படத் தொகுப்பு புனேயில் திரையிடப்பட்டது

முதன் முதலாக சலனப்படங்களை எடுத்து உலகம் முழுவதும் எடுத்துச் சென்று சினிமா எனும் கலைவடிவம் தோன்றிப் பரவக் காரணமானவர்கள் லூமியர் சகோதரர்கள் ஆவர். இவர்களது திரைப்படங்களின் காட்சித் தொகுப்புக்களை புனேவில் திரையிட்ட நிகழ்சிக்கு மும்பையிலிருந்து ஏராளமானோர் வந்திருந்தனர். இதில் சிறுவர்கள் முதல் அனைத்து வயதினரும் காணப்பட்டனர்.
லூமியர் சகோதரர்களின் தி கார்ட்டெனர் அல்லது ஜம்பிங் தி பிளாங்கெட் போன்ற திரைக்காட்சித் தொகுப்புகளை அவர்கள் ரசித்துப் பார்த்தனர். முக்கியமாக ரசிகர்கள் அதிகம் பாராட்டியது அரிதான காட்சிகளின் தொகுப்பான வித் அவர் கிங் அண்ட் குயின் த்ரூக் இந்தியா (1912) எனும் படத்தின் காட்சிகளையாகும். இது 1911 ஆம் ஆண்டின் டெல்லி தர்பார் சமயத்தில் எடுக்கப்பட்டதாகும்.
Share