Categories
கன்யாகுமரி குற்றம் தமிழகம் மாவட்டம்

இரட்டை பெண் குழந்தைகளை கொன்று புதைத்த தாய்

பிறந்து 15 நாட்களே ஆன பச்சிளம் இரட்டை பெண் குழந்தைகளை தாயே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா. இவருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. இவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு இவருக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. மீண்டும் பெண் குழந்தைகள் பிறந்ததால் விரக்தியடைந்த திவ்யா குழந்தைகளை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் இரண்டு பச்சிளம் குழந்தைகளையும் திவ்யா கொலை செய்துள்ளார். பின்னர் குழந்தைகள் தானாகவே இறந்துவிட்டதாக கூறியுள்ளார். மேலும் கொலை செய்த குழந்தைகளை அவசரஅவசரமாக மண்ணில் புதைத்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் குழந்தைகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் குழந்தைகள் இயற்கையாக உயிரிழக்கவில்லை, கொல்லப்பட்டிருப்பது தெரியவந்தது.  இதையடுத்து திவ்யாவை கைது செய்த போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் இரட்டை குழந்தைகளை கொன்றதை ஒப்புக்கொண்டார்.  ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருப்பதால், பிறந்த 2 பச்சிளம் குழந்தைகளை கொன்று புதைத்ததாக அவர் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து குழந்தைகளை கொன்றதாக தாய் திவ்யாவை கோட்டார் போலீசார் கைது செய்தனர். பெற்ற குழந்தைகளை தாயே கொன்று புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Share
Categories
இந்தியா குற்றம் கேரளா மாநிலங்கள்

பாலியல் கொடுமை தாங்க முடியாமல் சாமியாரின் ஆணுறுப்பை வெட்டிய இளம்பெண்

இந்தியாவின் கேரள மாநிலத்தில், பல ஆண்டுகளாக இந்துமத சாமியார் ஒருவர் தன்னை பாலியல் வல்லுறவு செய்ததாகக் கூறி, அவரது ஆணுறுப்பை வெட்டினார் ஆத்திரமடைந்த 23 வயது இளம் பெண்.

பாதிப்புக்குள்ளான பெண்ணின் நடவடிக்கையைப் பாராட்டியுள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆணுறுப்பை வெட்டியது என்பது ஓர் அசாத்தியமான மற்றும் தைரியமான செயல் என்று கூறியுள்ளார்.

குற்றச்சாட்டுகளுக்கு ஆளான சந்தேக நபரின் பெயர் கங்கேஷானந்தா தீர்த்தபடா என்றும், அவர் உடல்நலமின்றி அவதிப்பட்டு வரும் அப்பெண்ணின் தந்தைக்கு பிரார்த்தனை சடங்குகளை செய்ய அடிக்கடி வீட்டிற்கு வருவார் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

குடும்பத்தில் ஏற்பட்டுள்ள துயரங்களிலிருந்து தன்னுடைய பூஜையின் மூலம் இந்த புனித மனிதர் தங்களை காப்பாற்றுவார் என்று அப்பெண்ணின் தாயார் நம்பியிருந்தார்.

ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை இரவு, இளம்பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த தீர்த்தபடா முயற்சித்த போது அப்பெண் கத்தி ஒன்றை எடுத்து தாக்கியுள்ளார். அதன்பின், போலீஸாருக்கும் அவரே தகவல் கொடுத்துவிட்டார்.

பாலியல் வல்லுறவுக்கு முயற்சித்ததாக கூறப்படும் நபர் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவ கல்லூரியில் அவசர அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

 

Share
Categories
குற்றம் தமிழகம்

முகநூல் தோழியைக் கொன்ற தீயணைப்பு வீரர் சிறையில் தற்கொலை

தன்னுடைய முகநூல் தோழி மீது காரை ஏற்றிக் கொலை செய்த தீயணைப்பு வீரர் இளையராஜா, சிறையில் தற்கொலை செய்துகொண்டார்.

வேறொரு நபருடன் நட்பு ஏற்பட்டதால், முகநூல் தோழியும் அரசுப் பள்ளி ஆசிரியருமான நிவேதா மீது காரை ஏற்றிக் கொலை செய்த வழக்கில் தீயணைப்பு வீரர் இளையராஜா புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவர் இன்று (புதன்கிழமை) சிறையில் உள்ள கழிவறை ஜன்னலில் கைலியால் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

என்ன நடந்தது?

கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் நிவேதா(47). அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணி செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

நிவேதா கருத்து வேறுபாட்டால் 20 வருடங்களுக்கு முன்னர் கணவரை பிரிந்துள்ளார். இந்நிலையில், நிவேதாவுக்கும் கோவை கிணத்துக்கடவைச் சேர்ந்த தீயணைப்பு வீரரான இளையராஜா(28) என்பவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், சென்னை கொளத்தூரைச் சேர்ந்த பி.இ பட்டதாரியான கணபதி (33) என்பவருடனும் நிவேதாவுக்கு முகநூலில் கூடா நட்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், திங்கட்கிழமை இரவு அண்ணா நகரில் கணபதியும், நிவேதாவும் ஒரே பைக்கில் செல்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்த இளையராஜா, காரில் மோதியதாக கூறப்படுகிறது. இதில், நிவேதா கொலை செய்யப்பட, காயமடைந்த கணபதி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த அண்ணா நகர் போலீஸார், இளையராஜாவை கைது செய்தனர். இளையராஜா அளித்த வாக்குமூலத்தில், ”நிவேதாவுக்கும் எனக்கும் 6 ஆண்டுகளுக்கு முன் நட்பு ஏற்பட்டது. அவரது வயது முதிர்ந்த தாயார் கோவை சிங்காநல்லூர் குடியிருப்பில் வசித்தார். நான் அருகில் உள்ள வீட்டில் தங்கி இருந்தேன். அப்போது தாயாரை பார்க்க வரும் நிவேதாவுக்கும், எனக்கும் அறிமுகம் ஏற்பட்டது.

இந்நிலையில் நிவேதாவின் முகநூல் நண்பர் கணபதி, தானும் மனைவியை பிரிந்தவர் என்று சொல்லி நிவேதாவை திருமணம் செய்வதாக கூறி பணம் பெற்று வந்தார். ஆனால் அவர் தனது முகவரியை தெரிவிக்க மறுத்து வந்தார். ஏற்கெனவே நானும் நிவேதாவும் சென்னை வந்து கணபதியின் முகவரியை 3 நாட்களாக தேடினோம். ஆனால் அவர் எங்களை அலைக்கழித்தார்.

அதன் பிறகு மீண்டும் சென்னை வந்தோம். கணபதியை அண்ணாநகர் 3-வது அவென்யூ அருகே வரச்சொல்லி பேசினோம். அப்போது தனது வீட்டு முகவரியை காட்ட சம்மதித்தார். ஆனால் என்னை வரக்கூடாது என்று இருவரும் சொல்லி விட்டனர். நிவேதாவின் நடவடிக்கையிலும் மாற்றம் தெரிந்தது.

கூடவே இருந்த என்னை உதறி விட்டு கணபதியுடன் நெருக்கம் காட்டி சென்றதை என் மனம் ஏற்கவில்லை. எனவே இருவரையும் தீர்த்துக் கட்ட கார் மூலம் மோதினேன்” என்று கூறியதாகத் தகவல் வெளியானது.

இந்நிலையில் இளையராஜா சிறையில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

Share