Categories
ஆரோக்கியம் உடல்நலம் காணொளி சிறப்புச்செய்தி மூலிகைகள்

புற்றுநோயைக் குணமாக்கும் தாவரங்கள்: 2

புற்றுநோய் நோயாளிகள் பல சமயங்களில் அலோபதியைத் தவிர்த்து, மாற்று சிகிச்சைகளைத் தேடுகின்றனர். குறிப்பாக மூலிகை வைத்தியத்தில்  இதற்கான மருந்துகள் உள்ளனவா என்று நோக்குகின்றனர்.

எஸ்ஸியக் தேநீர் (ESSIAC Tea) என்பது கனடாவில் உருவான, புற்றுநோய் சிகிச்சைக்கான ஒரு பிரபல மூலிகை சூத்திரம். இதனை உருவாக்கியவரின் பெயர் ரெனெ கெய்ஸ் (Rene Caisse).   ரெனெ கெய்ஸ் 1920-களில் நர்ஸ்-ஆக பணிபுரியும் சமயத்தில், ஒரு செவ்விந்திய பழங்குடி மருத்துவரிடமிருந்து புற்றுநோயைக் குணமாக்கும் மருந்தைப் பற்றி அறியவந்ததாக கூறியுள்ளார்.

எஸ்ஸியக் தேநீர் நான்கு தாவர பொருட்களின் கலவையை கொண்டுள்ளது:

1) ஷீப் சோறெல் (sheep sorrel) பொடி

ஷீப் சொறல்

2) பொடிசெய்யப்பட்ட வழுக்கும் எல்ம் மரப் பட்டை (slippery elm bark)

எல்ம் மரப் பட்டை

3) பர்டோக் வேர் (Burdock root)

பர்டோக் வேர்

4) வான்கோழி ரூபார்ப் (turkey rhubarb) பொடி.

டுர்கி ரூபார்ப்

இவற்றில் டுர்கி ரூபார்ப் மற்றும் வழுக்கும் எல்ம் மரப்பட்டை ஆகியன முக்கியமான பாரம்பரிய மூலிகை மருந்துகளாகும்.

ஏஸ்ஸியக் தேநீர் தயாரிக்க தேவையானவை

செய்முறை

6 ½ கப் பர்டோக் வேர் (பொடி) (மேல் இடது)

1 பவுண்டு ஷீப் சோறெல் (sheep sorrel) பொடி (மேல் வலது)

1/4 பவுண்டு, பொடிசெய்யப்பட்ட வழுக்கும் எல்ம் மரப் பட்டை (கீழ் இடது)

1 அவுன்ஸ் வான்கோழி ருபார்ப் வேரின் தூள் (கீழ் வலது)

 

இந்த பொருள்களை முழுமையாக கலந்து, இருண்ட உலர் அலமாரியில் கண்ணாடி குடுவைகளில் சேமித்து வைக்கவும்.

ஒரு அளவிடும் கப் எடுத்து, நீங்கள் செய்ய வேண்டிய அளவைப் பொறுத்து,  32 அவுன்ஸ் தண்ணீருக்கு 1 அவுன்ஸ்  மூலிகை கலவை என்ற விகிதத்தில் அளந்து பயன்படுத்த வேண்டும்.

பொதுவாக 1 கப் மூலிகைக் கலவையுடன் 8 x 32 = 256 அவுன்ஸ் தண்ணீர் பயன்படுத்தலாம். 10 நிமிடங்கள் (மூடி) கடினமாக கொதிக்க வைத்து, பின் வெப்பத்தை அணைக்கவும். பின்னர் அந்த சூடான தட்டைல் அடுத்த நாள் காலை வரை அப்படியே மூடி வைத்திருக்கவும்.

காலையில் மீண்டும் ஆவி வரும்வரை சூடாக்கிய பின் ஒரு சில நிமிடங்கள் ஆறவிட்டு, பின்னர் சூடான சுத்திகரிக்கப்பட்ட பாட்டில்களில் நன்றாக வடிகட்டி ஆறவைக்கவும். இருண்ட குளிர் அலமாரியில் சேமிக்கவும். இந்த பாட்டிலை உபயோகிக்கத் திறந்தால், பின்னர்  குளிரூட்டப்பட (refrigerated) வேண்டும். இறுதியாக இருப்பவற்றை ஒரு பெரிய ஜாடியில்  ஊற்றி, இரவு முழுவதும் ஒரு குளிர்சாதன பெட்டியில் வைத்தபின்,  படிவுகள் ஏதும் இல்லாத திரவத்தை தனித்தனி பாட்டில்களில் ஊற்றவும்.

 

எஸ்ஸியாக் தேநீர் பல்வேறு வகையான நாள்பட்ட புற்றுநோய் மற்றும் வேறு நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கும், சிறந்த இயற்கைமுறை நச்சுநீக்கத்திற்கும்  பயன்படுகிறது.

ஆயினும், ரெனே கெய்ஸின் எஸ்ஸியாக் தேநீர் மருந்து இதுவரை எந்த FDA- அங்கீகாரம் பெற்ற மருத்துவ ஆய்வுகளில் இடம் பெறவில்லை. இது புற்று நோய் அல்லது நிலைமையைத் தணிக்கிறது அல்லது தடுக்கிறது என்று முழுமையாக நிருபிக்கப் படவில்லை. ஆனால் பலரும், இதனை உபயோகித்தபின்னர் குணமடைந்திருப்பதாக கூறியுள்லனர். ஆகவே இந்த மாற்று மூலிகை மருந்தை எடுப்பதற்கு முன் உங்கள் டாக்டரிடம் ஆலோசித்து செய்வது நல்லது.

 

 

Share
Categories
ஆரோக்கியம் காணொளி

சத்தில்லாத பழங்களா ?

சீட்லெஸ் பழங்கள் சத்தில்லாத பழங்களா ?

Share
Categories
ஆரோக்கியம் காணொளி

நாய் கடித்துவிட்டதா ?

Share
Categories
ஆரோக்கியம் காணொளி

உடல் எடையை குறைக்க உதவும் நெல்லிக்காய்

Share