Categories
அமெரிக்கா அமெரிக்கா உலகம் உள்நாட்டு புலனாய்வுத் துறை தலைப்புச் செய்திகள்

எஃப்.பி.ஐ.யின் புதிய இயக்குநராக கிறிஸ்டோபர் வ்ரே : செனட் அங்கீகரித்தது

அமெரிக்காவின் உள்நாட்டு புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ. -யின் புதிய இயக்குநராக கிறிஸ்டோபர் வ்ரே நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு  செனட் சபை  ஒப்புதல் அளித்துள்ளது.

அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பு எஃப்.பி.ஐ.யின் இயக்குநராக இருந்த ஜேம்ஸ் கோமி பதவி வகித்தார். கடந்த 2016-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில், ரஷ்யாவுக்கும் தேர்தலில் போட்டியிட்ட டொனால்டு ட்ரம்ப் பிரச்சாரக் குழுவுக்கும் இடையில் ரகசிய தொடர்பு இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக ஜேம்ஸ் கோமி தீவிர விசாரணையில் இறங்கினார்.

இந்நிலையில், கடந்த மாதம் 10-ம் தேதி ஜேம்ஸ் கோமியை அதிபர் டொனால்டு ட்ரம்ப் திடீரென பதவியிலிருந்து நீக்கினார். இதையடுத்து எஃப்.பி.ஐ.யின் புதிய இயக்குநராக கிறிஸ்டோபர் வ்ரே நியமிக்கப்பட்டார்.

வ்ரே நியமனம் குறித்து நாடாளுமன்ற செனட் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டபின் வாக்களிப்பில் அவருக்கு ஆதரவு அதிகமாக இருந்தது. இதையடுத்து எஃப்.பி.ஐ. இயக்குநராக கிறிஸ்டோபர் வ்ரேவின் நியமனம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Share
Categories
உலகம் தலைப்புச் செய்திகள் பிலிப்பைன்ஸ் வட கொரியா

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் வெறிபிடித்தவர் : ஃபிலிப்பைன்ஸ் அதிபர்

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் ஒரு வெறிபிடித்த முட்டாள் என ஃபிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடேர்டே விமர்சித்துள்ளார்.

மணிலாவில் நடைபெற்ற பிராந்திய உச்சி மாநாட்டுக்கு முன்னதாக வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்ற பிலிப்பைன்ஸ் அதிபர் இவ்வாறு தெரிவித்தார்.

இதுகுறித்து மேலும் பேசுகையில், அணு ஆயுதம் போன்ற ஆபத்தான பொம்மைகளுடன் கிம் ஜோங் உன் விளையாடுவதாகவும் அவரின் அணுஆயுத சோதனைகள் ஆசியாவை அழிக்க போகிறது என்றும்  தெரிவித்துள்ளார்.

கொழுகொழுவென அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு அந்த முட்டாள், அணு ஆயுதப் போரால் பூமியைப் பாழ்படுத்தப் போவதைத் தடுத்தாக வேண்டும். இந்த இந்த அணுசக்தி யுத்தம் முடிவுக்கு வர வேண்டும். ஏனென்றால் இந்த அழிவால் மண் வளங்கள் வீழ்ச்சியடையும். இதனால் நாம் எதையும் உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்படும் என்றும் கிம் ஜோங் உன்னை குறிப்பிட்டு, ரோட்ரிகோ டுடெர்டே விமர்சித்துள்ளார்.

Share
Categories
அமெரிக்கா உலகம் தலைப்புச் செய்திகள் வட கொரியா

அமெரிக்கா, வட கொரியாவிற்கு எதிரியல்ல – ரெக்ஸ் டில்லர்சன்

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் அமெரிக்கா, வட கொரியாவிற்கு எதிரியல்ல என்று கூறினார்.

வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில், “நாங்கள் வட கொரியாவின் எதிரிகள் அல்ல… ஆனால் எங்களால் ஒப்புக்கொள்ள முடியாத அச்சுறுத்தல் ஒன்றை எங்கள் முன் வைக்கிறீர்கள்; அதற்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டியுள்ளது.  அவர்கள் (வட கொரியா) ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் எங்களை புரிந்து கொண்டு எங்களுடன் பேசுவதற்கு முன் வருவார்கள் என்று நம்புகிறோம்” என்றார் டில்லர்சன்.

மேலும் அவர் கூறுகையில் அமெரிக்கா, வட கொரிய அரசை கவிழ்க்க நினைக்கவில்லை என்றார்.

Share
Categories
உலகம் தலைப்புச் செய்திகள் பாக்கிஸ்தான்

பாகிஸ்தானில் புதிய பிரதமராக ஷாகித் ககான் அப்பாஸி தேர்வு

ஊழல் குற்றச்சாட்டு காரணமாக, பாகிஸ்தான் நாட்டு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி  பிரதமர் பதவியிலிருந்து நவாஸ் ஷெரீஃப் விலகினார். அவருக்குப் பதிலாக, பாகிஸ்தானின் புதிய இடைக்கால பிரதமராக ஷாகித் காகான் அப்பாஸி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நவாஸ் ஷெரீஃபின் தம்பியும்  பஞ்சாப் மாகாண முதல்வருமான ஷாபாஸ் ஷெரீஃப்பை பிரதமராக்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு முன்னதாக இருந்தது. ஷாபாஸ் ஷெரீஃப் தற்போது பாராளுமன்ர உறுப்பினராக இல்லையென்பதால் அவர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.ஆக வேண்டும். ஆகவே, அதுவரை இடைக்கால பிரதமராக ஷாகித் ககான் அப்பாஸி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நேற்று, இதற்கென நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், மொத்தமுள்ள 341 உறுப்பினர்களில் இவர் 221 வாக்குகளைச் சேகரித்து வெற்றி பெற்றார்.  எதிர்க்கட்சியினர் 3 வேட்பாளர்களைக் களமிறக்கினர், அவர்கள் அனைவரும் சேர்ந்து 84 வாக்குகளையே பெற்றனர்.

புதிய பிரதமர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. பெட்ரோலிய அமைச்சராக இருந்த போது இயற்கை எரிவாயு இறக்குமதிக்கான ஒப்பந்தத்தில் ரூ.20,000 கோடி அளவுக்கு முறைகேட்டில் இவர் ஈடுபட்டிருப்பதாக பாகிஸ்தான் தேசிய பொறுப்புடைமைக் குழு 2015-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்துள்ளது.

ஆனால் அந்த வழக்கு விசாரணை மட்டத்திலேயே இருந்து வருகிறது. இந்நிலையில் ஷாகித் ககான் அப்பாஸி பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Share
Categories
அமெரிக்கா அமெரிக்கா உலகம் குடியரசு கட்சி தலைப்புச் செய்திகள்

வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு இயக்குநராக 11 நாட்கள் பதவி வகித்த அந்தோனி ஸ்காரமுக்கி பணிநீக்கம்

வெள்ளை மாளிகையின் மேற்குப் பகுதியில் நிகழும் உள்கட்சி மோதல்களைத் தவிர்த்து, ஒழுங்கு முறையைக் கொண்டு வருவதற்காக, புதிதாக அலுவலர்களின் மேலாளராக பொறுப்பேற்றுக்கொண்ட ஜான் கெல்லி, கடந்த 11 நாட்களாக தகவல் தொடர்பு இயக்குநராக  பதவி வகிக்கையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டுக்கொண்டிருந்த அந்தோனி ஸ்காரமுக்கியை பணிநீக்கம் செய்துள்ளார். இது ஒழுங்கு முறையைக் கொண்டு வருவதற்கான அவரது முயற்சியின் முதல் வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

வெள்ளை மாளிகையின் ஊடகவியல் செயலாளரான சாரா ஹக்கபீ சாண்டர்ஸ், கெல்லிதான் ஸ்காரமுக்கியை பணி நீக்கம் செய்யக் கோரினார் என்பதை உறுதி செய்யவில்லை. எனினும், தற்போது  ஸ்காரமுக்கி வெளியேறியபின், ஜான் கெல்லியிடம் முழுப் பொறுப்பும் கிடைத்திருக்கிறது என்பதை ஒப்புக் கொண்டார்.

“ஜெனரல் கெல்லி வெள்ளை மாளிகையில் முழுமையாக செயல்பட  அதிகாரம் கிடைத்துள்ளது , மேலும் அனைத்து ஊழியர்களும் அவரது அதிகாரத்தின் கீழ் வேலை செய்ய வேண்டும்”, என்று கூறிய சாரா ஹக்கபீ, மேலும் வேறு ஊழியர்கள் மாற்றப் படும் நிலை இல்லை என்று தெரிவித்தார்.

 

 

 

Share
Categories
இந்தியா உலகம் சீனா தலைப்புச் செய்திகள்

உத்தரகண்ட் – பரகோட்டில் எல்லை தாண்டி 1 கி.மீ உள்ளே புகுந்து சீன ராணுவம் அத்துமீறியது

உத்தரகண்ட் – சமோலி மாவட்டத்திலுள்ள பரகோட்டில் எல்லை தாண்டி 1 கி.மீ உள்ளே புகுந்து சீன ராணுவம் அத்துமீறியுள்ளது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால், சீன அதிபர் க்ஸி ஜின்பிங்-கை  இன்னும் 3 நாட்களில் சந்தித்துப் பேசுவதாக இருக்கும் நிலையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

10லிருந்து 12 சீன ராணுவ வீரர்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.

சென்ற ஆண்டு ஜூலை மாதத்திலும், சீன ராணுவத்தினர் 200 மீட்டர்கள் பரகோட்டில் எல்லை கோட்டைத் தாண்டி வந்துள்ளனர். அச்சமயத்தில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த மனோகர் பரிக்கர் , எல்லை சரியாக குறிக்கப்படாததால் இரு தரப்பினருக்கும் தமது எல்லை எதுவரை என்று தெரியாமல் இருந்திருப்பதால் அச்சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்று கூறியிருந்தார்.

உத்தரகண்டில் இந்திய-சீன எல்லை 350 கி.மீ. தொலைவு வரை இருக்கிறது. இது போன்ற சம்பவங்கள் முன்பும் நிகழ்ந்திருப்பதாக தெரிய வருகிறது.

இதற்கு சில நாட்களுக்கு முன்னர், வட கிழக்கு மாநிலமான சிக்கிம் எல்லையை ஒட்டிய, டோகோலாம் பகுதியை சொந்தம் கொண்டாடிய சீனா, அப்பகுதியில், சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டது. இதை தடுத்து நிறுத்தச் சென்ற நம் வீரர்களுடன் கை கலப்பில் ஈடுபட்ட சீன வீரர்கள், நம் நாட்டு எல்லையில் அத்துமீறி நுழைந்தனர். பின், நம் வீரர்களால் விரட்டியடிக்கப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு, மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. இந்தியா – சீனா – பூடான் நாடுகளுக்கு இடைப்பட்ட பொது இடத்தை, சீனா தனக்கு சொந்தம் கொண்டாடியதுடன், இந்தியா, பூடான் எல்லையையும், சீனாவுடன் சேர்த்து, சர்ச்சைக்குரிய வரைபடத்தை வெளியிட்டது.

இதன் பின்னணியில், தற்போதைய சீன ராணுவத்தின் அத்துமீறல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share
Categories
அதிபர் டிரம்ப் அமெரிக்கா உலகம் தலைப்புச் செய்திகள் ரஷ்யா

அமெரிக்காவின் 755 தூதரக அதிகாரிகளை ரஷ்யாவிலிருந்து வெளியேற்ற புடின் முடிவு

ரஷ்யா மீது புதிய பொருளாதார தடைகளை விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டு, அதிபர் டிரம்பின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில், இதற்கு பதிலடியாக, அமெரிக்காவின் 755 தூதரக அதிகாரிகளை ரஷ்யாவிலிருந்து வெளியேற்ற ரஷ்யாவின் அதிபர் புடின் முடிவு செய்துள்ளார்.

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில், ரஷியா நேரடியாக தலையிட்டதாகவும், உக்ரைன், சிரியா ஆகிய நாடுகளில் தனது ராணுவத்தின் மூலம் ஆக்கிரமிப்பு செய்ததாகவும் கூறி அந்த நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஜனநாயகக் கட்சியினராலும், ஊடகங்களாலும், சில குடியரசு கட்சியினராலும்  எழுப்பப் பட்டிருந்தது.

மேலும், அமெரிக்காவின் நலனுக்கு எதிராக செயல்பட்டதாகவும், அபாயகரமானதாக விளங்குவதாகவும், அமெரிக்காவையும், அதன் நட்பு நாடுகளையும் பலவீனப்படுத்துவதாகவும்  ஈரான், வடகொரியா ஆகிய 3 நாடுகள் மீதும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.

இதினிமித்தம், மேற்கண்ட நாடுகள் மீதான பொருளாதார தடை விதிப்பதற்கான மசோதா அமெரிக்க பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அதிபர் டிரம்ப்பின் கையெழுத்திற்காக அனுப்பப்பட்டுள்ளன. அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கையால் கோபமடைந்துள்ள ரஷ்யா, இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதன் விளைவாக, ரஷ்யாவில் இருக்கும் அமெரிக்க தூதரக அதிகாரிகளில் 755 பேர் செப்டம்பர் 1-ம் தேதிக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ரஷ்ய வெளியுறவுத் துறை, அங்குள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கை 455-ஐ தாண்டக்கூடாது என அமெரிக்கத் தூதரகத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.

தற்போது இந்த விவகாரம் இரு நாடுகளுக்கிடையேயான பனிப்போரை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share
Categories
அதிபர் டிரம்ப் அமெரிக்கா உலகம் சீனா தலைப்புச் செய்திகள் ரஷ்யா வட கொரியா

வடகொரிய ஏவுகணைச் சோதனைகளை ஊக்குவிப்பவர்கள் சீனாவும், ரஷ்யாவுமே : அமெரிக்கா

வடகொரிய ஏவுகணைச் சோதனைகளை பொருளாதார ரீதியாக  சீனாவும், ரஷ்யாவுமே ஊக்குவிக்கின்றன என அமெரிக்க வெளியுறவு செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் கூறியுள்ளார்.

நேற்று டில்லர்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனாவும் ரஷ்யாவும் வட கொரியாவில் இருந்து வளர்ந்துவரும் அணுசக்தி அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும் என்று  அழைப்பு விடுத்தார்.

வெள்ளிக்கிழமை வடகொரியா  நடத்திய ஹுவாசாங்-14 ஏவுகணையை சோதித்தது. இந்த ஏவுகணை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ், சிகாகோ போன்ற பெரிய நகரங்களை தாக்க வல்லது என்று வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமீபத்திய வடகொரியாவின் ஏவுகணை சோதனைகள் குறித்து கூறுகையில்,  “வடகொரியாவின் இந்த நடவடிக்கை பொறுப்பற்றது, ஆபத்தானது. உலக நாடுகளைத் தொடர்ந்து அச்சுறுத்தி வரும் வடகொரியாவின் இந்த ஏவுகணை நடவடிக்கைகள் அந்நாட்டை தனிமைப்படுத்தும், அதன் பொருளாதாரத்தை வலுவிழக்கச் செய்யும்” என்று கூறிப்பிட்டிருந்தார்.

அமெரிக்க செனட் சபை வடகொரியா மீதான பொருளாதார தடைகளை  நிறைவேற்றிய சில மணி நேரங்களில் வடகொரியா இந்த புதிய ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
Categories
அமெரிக்கா உலகம் தலைப்புச் செய்திகள்

உலக பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸை சிறிது நேரம் முந்திய அமேசான் நிறுவனர்

நேற்று (வியாழக்கிழமை) சிறிது நேரத்திற்கு அமேசான் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியான ஜெஃப் பெசோஸ்  உலகின் மிகப்பெரிய பணக்காரர் என்ற பெருமையை பெற்றிருந்தார். பின்னர், பில்கேட்ஸ் மீண்டும் மிகப்பெரிய பணக்காரர் என்ற நிலையை தக்கவைத்துக் கொண்டார்.

ஜெஃப் பெசோஸின்  சொத்து மதிப்பு சுமார் 91.4 பில்லியன் டாலர்களாக இருந்தது. பின்னர், அமேசான் நிறுவனத்தின் பங்குகளின் விலை சரிவை சந்தித்த காரணத்தால் உலக பணக்காரர்கள் பட்டியலில் அவர் வகித்த முதல் இடம் பறிபோனது. தொடர்ந்து, அந்த இடத்தை மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் மீண்டும் தக்கவைத்து கொண்டார்.

அமேசான் நிறுவனத்தின் சுமார் 17 சதவீத பங்குகளை பெஸோஸ் தன் வசம் வைத்துள்ளார். அதன் மதிப்பு சுமார் 500 பில்லியன் டாலர்களாகும். வாஷிங்டன் போஸ்ட் என்ற நாளிதழை வாங்கியுள்ள பெஸோஸ், விண்வெளி ராக்கெட் தொழில் ஒன்றையும் அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
Categories
உலகம் தலைப்புச் செய்திகள் பாக்கிஸ்தான்

பனாமா பேப்பர்ஸ் விவகாரம்: பாகிஸ்தான் பிரதமர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்

வெளிநாட்டு வங்கிகளில் சட்டவிரோதமாக பணம் பதுக்கியது குறித்த பனாமா பேப்பர்ஸ் என்ற பெயரில் தகவல்கள் அம்பலமானதையடுத்து, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் மீது அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் நவாஷ் ஷெரீஃப்பை தகுதி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

பனாமா பேப்பர்ஸ் என்ற பெயரில் உலகளவில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்கள் செய்துள்ள ஊழல் குறித்த தகவல் அம்பலமானது. இதில் லண்டனில் சட்டவிரோதமாக சொத்துக்களை குவித்துள்ளதாக பனாமா ஆவணங்களில் தகவல் வெளியானது. சர்ச்சயைில் சிக்கிய நவாஸ் ஷெரீப்பிற்கு எதிராக அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பனாமா ஊழல் தொடர்பாக நவாஸ் ஷெரீப் மீது 8 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தியது. இவ்விசாரணையில் நவாஸ் மீதான குற்றச்சாட்டுக்கள் உண்மை என கண்டறியப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கபட்டது. வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு தற்போது அவரை அதிரடியாக தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் நவாஸ் குடும்பத்தினர் மீதான புகார் குறித்தும் வழக்கு தொடர உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற தீர்ப்பை அடுத்து, நவாஸ் ஷெரீஃப் பதவி விலகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கறுப்பு பணம் சேர்த்தார் என்றும் அவர் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

நவாஸ் ஷெரீஃப் தவிர அவரது மகள் மற்றும் மருமகனும் தவறிழைத்திருப்பதாக நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

 

Share