Categories
உலகம் தலைப்புச் செய்திகள் பாக்கிஸ்தான்

பாகிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர் அமைச்சராக நியமனம்

பாகிஸ்தானின் புதிய பிரதமரான ஷாகித் ககான் அப்பாஸியின் 47 பேர் கொண்ட அமைச்சரவையில்  65 வயதான தர்ஷன் லால் என்பவர் அமைச்சராக இடம்பெற்றுள்ளார்.  இவர் இந்து மதத்தை சேர்ந்தவர். 20 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் ஒரு இந்து அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிந்து மாகாணத்தில் மிர்புர் மாதெல்லோ எனும் மாவட்டத்தைச் சேர்ந்தவர்  தர்ஷன் லால். இவர்  மருத்துவராக பணியாற்றியவர். 2013 ஆம் ஆண்டில் சிறுபான்மையிருக்காக ஒதுக்கப்பட்ட தொகுதியிலிருந்து பாகிஸ்தானின் தேசிய சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அவர் நவாஸ் ஷெரீஃப் கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கின் சார்பாக போட்டியிட்டார். இப்போது அவருக்கு மாகாணங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு அமைச்சகத்தின் காபினட் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் ராணா சந்தேர் சிங் எனும் பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் (பெனாசிர் பூட்டோவின் கட்சி) காபினட் அந்தஸ்தில் அமைச்சர் பதவி வகித்திருந்தார். அவர் உமேர்கோட் எனும் தொகுதியிலிருந்து 1977 முதல் 1999 வரை ஏழுமுறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.

 

Share
Categories
உலகம் தலைப்புச் செய்திகள் பாக்கிஸ்தான்

பாகிஸ்தானில் புதிய பிரதமராக ஷாகித் ககான் அப்பாஸி தேர்வு

ஊழல் குற்றச்சாட்டு காரணமாக, பாகிஸ்தான் நாட்டு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி  பிரதமர் பதவியிலிருந்து நவாஸ் ஷெரீஃப் விலகினார். அவருக்குப் பதிலாக, பாகிஸ்தானின் புதிய இடைக்கால பிரதமராக ஷாகித் காகான் அப்பாஸி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நவாஸ் ஷெரீஃபின் தம்பியும்  பஞ்சாப் மாகாண முதல்வருமான ஷாபாஸ் ஷெரீஃப்பை பிரதமராக்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு முன்னதாக இருந்தது. ஷாபாஸ் ஷெரீஃப் தற்போது பாராளுமன்ர உறுப்பினராக இல்லையென்பதால் அவர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.ஆக வேண்டும். ஆகவே, அதுவரை இடைக்கால பிரதமராக ஷாகித் ககான் அப்பாஸி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நேற்று, இதற்கென நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், மொத்தமுள்ள 341 உறுப்பினர்களில் இவர் 221 வாக்குகளைச் சேகரித்து வெற்றி பெற்றார்.  எதிர்க்கட்சியினர் 3 வேட்பாளர்களைக் களமிறக்கினர், அவர்கள் அனைவரும் சேர்ந்து 84 வாக்குகளையே பெற்றனர்.

புதிய பிரதமர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. பெட்ரோலிய அமைச்சராக இருந்த போது இயற்கை எரிவாயு இறக்குமதிக்கான ஒப்பந்தத்தில் ரூ.20,000 கோடி அளவுக்கு முறைகேட்டில் இவர் ஈடுபட்டிருப்பதாக பாகிஸ்தான் தேசிய பொறுப்புடைமைக் குழு 2015-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்துள்ளது.

ஆனால் அந்த வழக்கு விசாரணை மட்டத்திலேயே இருந்து வருகிறது. இந்நிலையில் ஷாகித் ககான் அப்பாஸி பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Share
Categories
உலகம் தலைப்புச் செய்திகள் பாக்கிஸ்தான்

பனாமா பேப்பர்ஸ் விவகாரம்: பாகிஸ்தான் பிரதமர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்

வெளிநாட்டு வங்கிகளில் சட்டவிரோதமாக பணம் பதுக்கியது குறித்த பனாமா பேப்பர்ஸ் என்ற பெயரில் தகவல்கள் அம்பலமானதையடுத்து, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் மீது அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் நவாஷ் ஷெரீஃப்பை தகுதி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

பனாமா பேப்பர்ஸ் என்ற பெயரில் உலகளவில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்கள் செய்துள்ள ஊழல் குறித்த தகவல் அம்பலமானது. இதில் லண்டனில் சட்டவிரோதமாக சொத்துக்களை குவித்துள்ளதாக பனாமா ஆவணங்களில் தகவல் வெளியானது. சர்ச்சயைில் சிக்கிய நவாஸ் ஷெரீப்பிற்கு எதிராக அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பனாமா ஊழல் தொடர்பாக நவாஸ் ஷெரீப் மீது 8 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தியது. இவ்விசாரணையில் நவாஸ் மீதான குற்றச்சாட்டுக்கள் உண்மை என கண்டறியப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கபட்டது. வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு தற்போது அவரை அதிரடியாக தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் நவாஸ் குடும்பத்தினர் மீதான புகார் குறித்தும் வழக்கு தொடர உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற தீர்ப்பை அடுத்து, நவாஸ் ஷெரீஃப் பதவி விலகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கறுப்பு பணம் சேர்த்தார் என்றும் அவர் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

நவாஸ் ஷெரீஃப் தவிர அவரது மகள் மற்றும் மருமகனும் தவறிழைத்திருப்பதாக நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

 

Share
Categories
அமெரிக்கா உலகம் தலைப்புச் செய்திகள் பாக்கிஸ்தான்

பாகிஸ்தானுக்கு கடும் நிபந்தனைகளுடனேயே அமெரிக்க நிதி வழங்கப்படும்

பாகிஸ்தானுக்கு கடும் நிபந்தனைகளுடனேயே அமெரிக்க நிதி வழங்கப்படும் என்று அமெரிக்க பாராளுமன்ற குழு ஓட்டெடுப்பு நடத்தி முடிவு செய்துள்ளது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்காக அமெரிக்கா நிதி உதவி அளித்து வருகிறது. இந்த நிலையில், இது தொடர்பாக முடிவு எடுப்பதற்காக அமெரிக்க பாராளுமன்றத்தின், ஒதுக்கீட்டுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.

இந்த கூட்டத்தில், 2018-ம் ஆண்டுக்கான மாகாணம் மற்றும் வெளிநாட்டு நடவடிக்கைகள் ஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஓட்டெடுப்பு நடத்தி ஒப்புதல் வழங்கப்பட்டது. இம்மசோதவின்படி அவர் பாகிஸ்தானுக்கு நிதி உதவி வழங்க வேண்டுமானால், அங்கு இயங்கி வருகிற அனைத்து விதமான பயங்கரவாத குழுக்கள் மீதும் பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கவும் வழி வகுத்துத்தந்துள்ளது.

இனி இந்த மசோதா அமெரிக்க பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.

இந்த மசோதாவின்படி அமெரிக்கா வழக்கமான சீர்திருத்த மற்றும் வெளிநாட்டு தற்செயல் நடவடிக்கைகள் நிதியாக 47 பில்லியன் அமெரிக்க டாலர்களை (சுமார் ரூ.3 லட்சத்து 5 ஆயிரத்து 500 கோடி) உலக நாடுகளுக்கு வழங்க முடியும். இந்தத் தொகை, 2017-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 10 பில்லியன் டாலர் (சுமார் ரூ.65 ஆயிரம் கோடி) குறைவு ஆகும்.

 

Share
Categories
உலகம் தலைப்புச் செய்திகள் பாக்கிஸ்தான்

பாகிஸ்தானில் எண்ணெய் லாரி கவிழ்ந்து தீ பிடித்து எரிந்ததில் 148 பேர் பலி

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் பகாவல்பூரில்,  நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பெட்ரோல் டேங்கர் லாரி கவிழ்ந்து தீப்பற்றி எரிந்தத்தில் 148 பேர் மரணமடைந்தனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் கவிழ்ந்த டேங்கர் லாரியிலிருந்து எண்ணெய் சேகரிக்க வந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

டேங்கர் லாரி வேகமாக நெடுஞ்சாலையில் ஒரு வளைவில் ஓடியபோது, டயர் ஒன்று தீ பிடித்ததால் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதனைப் பார்ப்பதற்கும் கவிழ்ந்த லாரியிலிருந்து எண்ணெய் சேகரிக்கவும் பெருங்கூட்டமாக அருகிலிருந்து வந்த மக்கள் கூடினர். கவிழ்ந்த 45 நிமிடங்களுக்குப் பின்  டேங்கர் லாரி வெடித்து தீப் பிழம்புகளால் சூழ்ந்து கூடியிருந்தவர்களில் பெரும்பாலான மக்கள் மீதும் பரவியது. 80 பேருக்கும் மேலானவர்கள் படுகாயம் அடைந்ததாக நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் கூறினர். இறந்தவர்களில் 20 பேர் சிறுவர்கள் என்றும் கூறப்படுகிறது.

ஈத் – உல்- பித்ர் திருநாளைக் கொண்டாட உள்ளநிலையில் பாகிஸ்தானில் பெரும் துயர சம்பவம் நடைபெற்று உள்ளது, அந்நாட்டு மக்களை பெரும் கவலையில் ஆழ்த்தி உள்ளது.

Share
Categories
இந்தியா உலகம் காஷ்மீர் பாக்கிஸ்தான்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர் தாக்குதல் காஷ்மீர் மக்கள் பீதி

காஷ்மீரில் எல்லையில் விதிமுறைகளை மதிக்காமல் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் நேற்று 2 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை காலி செய்து வெளியேறி வருகின்றனர்.  பாகிஸ்தான்  ராணுவம் அத்துமீறல் இன்றும் தொடர்வதால் ரஜோரி மாவட்டத்தில் உள்ள மஞ்சகோட் உள்ளிட்ட 7 கிராமங்களை சேர்ந்த மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.பாகிஸ்தான் ராணுவத்தில் தொடர் தாக்குததால் எல்லையோர கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.

Share
Categories
இந்தியா உலகம் உள்துறை அமைச்சகம் பாக்கிஸ்தான்

பாகிஸ்தான் 2 ஆண்டுகளில் பல முறை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியது

போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் பலமுறை மீறியதாக  உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டில் 405 முறையும், 2016-ம் ஆண்டில் 449 முறையும் பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை பாகிஸ்தான் தரப்பில் இருந்து 1142 தீவிரவாத சம்பவங்கள் நடத்தப்பட்டதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவங்களில் பாதுகாப்பு படை வீரர்கள் 236 பேரும், பொதுமக்கள் 90 பேரும் உயிரிழந்தன.

இந்திய பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 507 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பாகிஸ்தான் அத்துமீறல்களை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. காஷ்மீரில் தீவிரவாதிகள் சுற்றி வளைக்கப்படும் போது சமூக ஊடகங்களில் தகவல் பரவி பாதுகாப்பு படையினரை பொதுமக்கள் சூழும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. இதனால் தீவிரவாதிகளை வேட்டையாடும் பணி பெருமளவில் பாதிக்கப்படுவதாகவும் உள்துறை அமைச்சகம் தனது பதிலில் தெரிவித்துள்ளது.

Share