Categories
உலகம் கிரீஸ் தலைப்புச் செய்திகள் துருக்கி

துருக்கி-கிரீக்கில் 6.7 அளவு நிலநடுக்கம், ஆழிப்பேரலை ஏற்பட்டது

துருக்கிய கடற்பகுதியிலும், சில கிரேக்க தீவுகளிலும் 6.7 அளவு நிலநடுக்கமும் அதன் விளைவாக  ஆழிப்பேரலையும் ஏற்பட்டுள்ளது.

கடற்கரை நகரான மர்மைசை ஆழிப்பேரலை தாக்கியதால் வீடுகளும் கட்டிடங்களும் நீரில் மூழ்கின.

கிரேக்கத் தீவான கோஸில் குறைந்தது 2 பேராவது இறந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

வேறு அதிகமான தகவல் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

Share
Categories
உலகம் தலைப்புச் செய்திகள் துருக்கி

துருக்கி: வான்தாக்குதலில் குர்திஷ் இன பயங்கரவாதிகள் 11 பேர் பலி

துருக்கியில் வான்தாக்குதலில் குர்திஷ் இன பயங்கரவாதிகள் 11 பேர் பலியாகினர்.

குர்திஷ் இன பயங்கரவாதிகளின் கொட்டத்தை ஒடுக்க துருக்கி ராணுவம் தரைவழியாகவும், வான்வழியாகவும் அதிரடி தாக்குதலை நடத்தி வருகிறது. குர்திஷ் இன பயங்கரவாதிகள் துருக்கிய ராணுவவீரர்கள் மற்றும் போலீசாரை குறிவைத்து தொடர் தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு சிரியா எல்லையையொட்டி உள்ள டார்கெசிட் மாவட்டத்தில் குர்திஷ் இன பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து துருக்கி போர் விமானம் குண்டு மழை பொழிந்தது.

இதில் குர்திஷ் இன பயங்கரவாதிகள் 8 பேர் கொல்லப்பட்டனர். மேலும் அவர்களது ஆயுதகிடங்குகள் நிர்மூலமாக்கப்பட்டன.

அதே போல் ஹக்காரி மாகாணத்தில் ஈராக் மற்றும் ஈரான் எல்லையையொட்டி அமைந்து உள்ள நகரில் குர்திஷ் இன பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகளின் மீது துருக்கி போர் விமானம் குண்டுகளை வீசியது. இதில் பயங்கரவாதிகள் 3 பேர் பலியாகினர். அவர்களுடைய பதுங்கு குழிகளும் அழிக்கப்பட்டன.

Share