Categories
இந்தியா சீனா தலைப்புச் செய்திகள்

சீனா, பூடான், இந்திய எல்லையில் பதற்றம்

பூட்டானிலுள்ள 269 சதுர கி.மீ பரப்பளவிலான ஒரு நிலப்பரப்பு  சீனாவினால் தனது என்று உரிமை கொண்டாடப்படுகிறது.  இவ்விடத்தில் சாலைத் கட்டுமானம் தொடர்பாக சீன மற்றும் இந்தியத் துருப்புக்களுக்கு இடையே மோதல்கள் நிகழ்ந்து வருகிறது.  இதன்விளைவாக, புது டெல்லிக்கும், பெய்ஜிங்கிற்கும் இடையிலான உறவுகளில் மிக மோசமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.  2013-ல் தாவ்லத் பெக் ஓல்டி (Daulat Beg Oldi) -இல் இருநாடுகளுக்கிடையே ஏற்பட்ட நெருக்கடியைப் போல இப்போது மீண்டும் ஏற்பட்டுள்ளது.

சுமி பள்ளத்தாக்கிற்கு எதிரில் இருக்கும் டோக்லம் பீடபூமியில் நிகழும் இம்மோதல்கள், பூடானின் ஆயுதப் படைகளை பயிற்றுவிக்கும் நோக்கத்துடன், அங்கு பணியிலிருக்கும் இந்திய துருப்புக்கள் எதிர்கொள்கின்றனர்.

மற்றொரு அறிவிப்பின்படி, ராணுவ தளபதி ஜெனரல் பிபின் ராவட் வியாழக்கிழமை சிக்மிற்கு வருகை தருவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து, இந்தியாவின் பூட்டான் தூதர் வொட்ஸோப் நியாஜெல், தனது நாட்டிலுள்ள டோக்லமின் பகுதியிலுள்ள ஜோம்பில்ரியில், சீன இராணுவ முகாமை நோக்கி ஒரு சாலையை கட்டியெழுப்பவது குறித்து தமது நாடு நடவடிக்கை எடுத்துள்ளது என்றும், சாலைகட்டும் பணியை உடனடியாக  நிறுத்தம் செய்ய செய்து  நிலைமையை சரியாக்கவும் பீஜிங்கை சீனா கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

இதற்கிடையில், பெய்ஜிங், கைலாஷ் மன்சரோவர் யாத்ரீகர்களுக்கு நாது லா கணவாய் திறக்கப்படுவதற்கு முன்பாக “இந்தியா அதன் பிழைகளை சரி செய்ய” புது தில்லியிடம் கூறியது. மேலும் சாலைக் கட்டுமானம் நடைபெறும் பகுதி  சீனாவின் “எல்லைக்குட்பட்டது” என்றும், இந்தியாவுக்கும் பூட்டானுக்கு சொந்தமானபகுதியல்ல என்றும் கூறியுள்ளது. வேறு எந்த நாட்டிலும் தலையிட இந்தியாவிற்கு உரிமை இல்லை என்றும் சீனா குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து சீனாவின் அரசு நடத்தும் குளோபல் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான ஒரு கருத்துக் கட்டுரையில், இந்த நிலைப்பாடு தொடர்ந்தால், இந்தியாவிற்கு விதிகளைக் கற்பிக்கவேண்டும் என்று எழுதப்பட்டுள்ளது.

 

Share
Categories
இந்தியா உலகம் கைலாச மானசரோவர் சீனா தலைப்புச் செய்திகள் திபெத்

மானசரோவர் திருப்பயணிகளை அனுமதிப்பது குறித்து இந்தியாவுடன் பேச்சு தொடர்கிறது : சீனா

திபெத்திலுள்ள கைலாச மானசரோவர் நோக்கி திருப்பயணம் சென்ற 47 பயணிகளை, சிக்கிமில் உள்ள நாது லா கணவாய் அருகே தடுத்து நிறுத்தியது  குறித்து இந்தியாவுடன் பேச்சு வார்த்தையில் உள்ளதாக  சீனா தெரிவித்துள்ளது.

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜெங் சூங்ஹாங் கூறுகையில், “எனக்குக் கிடைத்த தகவலின் படி, இரண்டு அரசாங்கங்களும் இந்த விடயத்தில் தொடர்பில் இருக்கின்றன”, என்றார். ஆனால், சீன-இந்திய எல்லையில் பயணிகள் சீன அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட, நிலச்சரிவுகள் மற்றும் மழை போன்ற வானிலை தொடர்பான பிரச்சினைகள் காரணமாக இருந்ததா என்பது குறித்து விளக்க மறுத்து விட்டார்.

இதுபற்றி மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கோபால் பாக்லே கருத்து தெரிவிக்கையில், ‘‘நாது லா வழியாக இந்திய ஆன்மிக பயணிகள் செல்வதில் சில சிக்கல்கள் எழுந்துள்ளன. இது பற்றி சீனாவிடம் மத்திய அரசு எடுத்துச்செல்லும்’’ என்று குறிப்பிட்டார்.

மழையினாலும், நிலச்சரிவுகளாலும் சாலைகள் மிகவும் பழுது அடைந்து இருப்பதால்தான், இந்திய ஆன்மிக பயணிகளை தடுத்து நிறுத்தி விட்டதாக சீன அதிகாரிகள் கூறுகின்றனர். வானிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு, சாலை நிலை மேம்பட்டவுடன் சீனா வழியாக இந்திய ஆன்மிகப் பயணிகள் செல்ல அனுமதி வழங்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

 

Share
Categories
உலகம் சீனா தலைப்புச் செய்திகள்

சீனாவில் நிலச்சரிவு : 15 பேர் பலி, 120 பேரை காணவில்லை

சீனாவில் நேற்று காலை ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 15 பேர் பலியாகி இருப்பதாகவும் 120 பேரைக் காணவில்லை.   சீனாவின் மலைப்பகுதிகளில் உள்ள கிராமங்கள் குறிப்பாக மழைக்காலங்களில் நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்படுவது  வழக்கமாகும். தென்மேற்கு மாகாணமான சிச்சுவானில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தது. இதன் எதிரொலியாக மலை அடிவாரத்தில் உள்ள  ஜின்மோ கிராமத்தில் நேற்று காலை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. மண்களும், பாறைகளும் சரிந்து விழுந்தன.

இதில் சுமார் பல வீடுகளுடன்,  140க்கும் மேற்பட்டோரும் உயிருடன் மண்ணில் புதைந்தனர். இவர்களின் நிலை  என்ன என்பது தெரியவில்லை. பெரும்பாலானோர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. திபெத் – அபா பகுதிக்கு இடையே உள்ள மலையின் ஒரு  பகுதி சரிந்து விழுந்ததால் நிலச்சரிவு ஏற்பட்டதாகவும், இவை சுமார் 2 கி.மீ. தொலைவுக்கு ஆற்றின் நீரோட்டத்தை தடுத்துள்ளதோடு, 1.6 கிமீ  தொலைவுக்கு சாலையையும் மூடியுள்ளது. இதனால் சாலை போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் கயிறு கட்டி பாறைகள் அகற்றப்பட்டு, மீட்பு பணிகள் நடந்து வருகிறது. சுமார் 500 பேர் மீட்பு பணியில் ஈடுபட்டு மணல் குவியல்களில் யாரேனும் சிக்கியுள்ளனரா என்று தேடி வருகின்றனர்.

Share
Categories
இந்தியா இலங்கை உலகம் சீனா

இலங்கை அனுமதி மறுப்பு: சீன நீர்மூழ்கி கப்பல் கராச்சி செல்கிறது

பிரதமர் மோடி இலங்கை சென்றிருந்த நிலையில், தங்கள் நீர்மூழ்கி கப்பலை கொழும்பு துறைமுகத்தில் நிறுத்திவைப்பதற்கு சீனா இலங்கையிடம் அனுமதி கோரியிருந்தது. ஆனால் இலங்கை அதனை நிராகரித்துவிட்டது. கடந்த 2014-ம் ஆண்டு சீனா அதன் நீர் மூழ்கி கப்பலை கொழும்பு துறைமுகத்தில் நிறுத்திவைக்க ராஜபக்சே அரசு அதற்கு அனுமதி வழங்கியது. இது குறித்து இந்தியா கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியதுடன் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி கவலை தெரிவித்தது. இந்நிலையில் சீனாவின் நீர்மூழ்கி கப்பலுக்கு இலங்கை அனுமதி வழங்கவில்லை.

இந்நிலையில் சீனாவின் நீர்மூழ்கி கப்பல் பாகிஸ்தானின் கராச்சியை நோக்கி செல்லவிருக்கிறது என தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்திய பெருங்கடல் பகுதியில் தன்னுடைய ஆதிக்கத்தை முன்செலுத்த வேண்டும் என முயற்சிக்கும் சீனாவின் நகர்வுக்கு இந்தியா முற்றுப்புள்ளி வைக்கிறது. சீன நீர்மூழ்கி கப்பலை இந்திய பாதுகாப்பு முகமைகள் உன்னிப்பாக கவனித்து வருகிறது.

Share