Categories
இந்தியா சீனா தலைப்புச் செய்திகள்

லடாக் பகுதியில் இந்திய – சீன ராணுவ வீரர்களுக்கு இடையே கை கலப்பு குறித்து தெரியாது: சீனா

இந்திய சுதந்திர தினத்தன்று, லடாக் பாங்கோங் ஏரிப் பகுதியில் சீன ராணுவம் ஊடுருவ முயன்றதால் இந்தியா மற்றும் சீன ராணுவ வீரர்களுக்கும் இடையே லேசான கை கலப்பு ஏற்பட்டது. இது குறித்து சீன அரசுக்குத் புகார் அளிக்கப் பட்டபோது, தமக்கு எதுவும் தெரியாது என சீனா தெரிவித்துள்ளது.

நேற்று காலை 6 மணிக்கு, மீண்டும் 9 மணிக்கு என இரண்டு தடவை சீன ராணுவ வீரர்கள் இந்தியாவுக்குள் வர முயன்றனர். இந்திய ராணுவ வீரர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தி தக்க பதிலடி கொடுத்தனர். மனித சங்கிலி அமைத்து அரண்போல நின்று கொண்டு இந்திய வீரர்கள், சீன வீரர்களை இந்தியாவுக்குள் ஊடுருவ விடாமல் தடுத்தனர்.

இதையடுத்து இந்திய வீரர்களுக்கும், சீன ராணுவ வீரர்களுக்கும் இடையே லேசான கை கலப்பு ஏற்பட்டது.  சிறிது நேரம் கழித்து தங்கள் பகுதிக்கு திரும்பிச் சென்ற சீன வீரர்கள், தங்கள் பகுதியில் பதுங்கி இருந்து கொண்டு சீன வீரர்கள் கல் வீச்சில் ஈடுபட்டனர். இதில் இந்திய வீரர்கள் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதற்குப் பதிலடியாக, இந்திய வீரர்களும் கல் வீசியதில்  சீன வீரர்களுக்கும் காயம் ஏற்பட்டது. நீண்ட நேரத்துக்கு பிறகு சீன வீரர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

சீனாவின் இந்த செயலுக்கு இந்திய அரசு தரப்பிலிருந்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்ட போது, தமக்கு இதுபற்றி எதுவும் தெரியாது என்றும், எல்லையில் அமைதி நிலவ வேண்டும் என்பதில் சீனா உறுதியாக இருப்பதாகவும் சீன அரசு தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் பற்றி கருத்து தெரிவிக்க கேட்கப்பட்டபோது, சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங் (Hua Chunying) கூறுகையில், “இந்த தகவல் பற்றி எனக்குத் தெரியாது. சீன எல்லைப் படைகள் இந்திய-சீன எல்லையில் சமாதானத்தையும் அமைதியையும் தக்கவைத்துக் கொள்ள உறுதிபூண்டிருப்பதை நான் உங்களுக்கு சொல்ல முடியும். ”

“நாங்கள் எப்போதும் சீனக் கட்டுப்பாட்டின் கீழ் உண்மையான கட்டுப்பாட்டின் (LAC) வரிசையில் ரோந்து செய்கிறோம். எல்.ஏ.சி. மற்றும் இரு தரப்புக்கும் இடையே உள்ள உடன்படிக்கைகளுக்கு இணங்க இந்திய தரப்பை  நாங்கள் கேட்டுக்கொள்கிறோம், “என அவர் கூறினார்.

Share
Categories
உலகம் சீனா தலைப்புச் செய்திகள்

சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 19 பேர் பலி; 247 பேர் காயம்

சீனாவின் தென்மேற்கு – சிசுவான் மாகாணத்தில் ஏற்பட்ட 7.0 ரிச்டர் அளவிலான கடுமையான நிலநடுக்கத்தினால் இதுவரை வந்த தகவல்களின்படி 19 பேர் இறந்திருப்பதாகவும், 247 பேர் காயமடைந்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

சீனாவின் சிசுவான் மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை இரவு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.0-ஆக பதிவாகியதாக சீன நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்தது. இதனால் சுமார் 106 அதிர்வுகள் உணரப்பட்டதாகவும், 1.3 லட்ச வீடுகள் சேதமடைந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலநடுகத்தில் பலியானவர்களில் சிலர் வெளிநாட்டு பயணிகளும் உள்ளனர். மேலும் 100 பயணிகள் இன்னும் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். நில நடுக்கம் ஏற்பட்டுள்ள பகுதியில் மின்சார கம்பங்கள் மற்றும் தண்ணீர் குழாய்கள் புதுப்பிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

முன்னதாக சிசுவான் மாகாணத்தில் 2008 ஆம் ஆண்டு ரிக்டர் அளவில் 8,0ஆக ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு 80 ஆயிரம்  பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
Categories
இந்தியா உலகம் சீனா தலைப்புச் செய்திகள்

உத்தரகண்ட் – பரகோட்டில் எல்லை தாண்டி 1 கி.மீ உள்ளே புகுந்து சீன ராணுவம் அத்துமீறியது

உத்தரகண்ட் – சமோலி மாவட்டத்திலுள்ள பரகோட்டில் எல்லை தாண்டி 1 கி.மீ உள்ளே புகுந்து சீன ராணுவம் அத்துமீறியுள்ளது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால், சீன அதிபர் க்ஸி ஜின்பிங்-கை  இன்னும் 3 நாட்களில் சந்தித்துப் பேசுவதாக இருக்கும் நிலையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

10லிருந்து 12 சீன ராணுவ வீரர்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.

சென்ற ஆண்டு ஜூலை மாதத்திலும், சீன ராணுவத்தினர் 200 மீட்டர்கள் பரகோட்டில் எல்லை கோட்டைத் தாண்டி வந்துள்ளனர். அச்சமயத்தில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த மனோகர் பரிக்கர் , எல்லை சரியாக குறிக்கப்படாததால் இரு தரப்பினருக்கும் தமது எல்லை எதுவரை என்று தெரியாமல் இருந்திருப்பதால் அச்சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்று கூறியிருந்தார்.

உத்தரகண்டில் இந்திய-சீன எல்லை 350 கி.மீ. தொலைவு வரை இருக்கிறது. இது போன்ற சம்பவங்கள் முன்பும் நிகழ்ந்திருப்பதாக தெரிய வருகிறது.

இதற்கு சில நாட்களுக்கு முன்னர், வட கிழக்கு மாநிலமான சிக்கிம் எல்லையை ஒட்டிய, டோகோலாம் பகுதியை சொந்தம் கொண்டாடிய சீனா, அப்பகுதியில், சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டது. இதை தடுத்து நிறுத்தச் சென்ற நம் வீரர்களுடன் கை கலப்பில் ஈடுபட்ட சீன வீரர்கள், நம் நாட்டு எல்லையில் அத்துமீறி நுழைந்தனர். பின், நம் வீரர்களால் விரட்டியடிக்கப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு, மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. இந்தியா – சீனா – பூடான் நாடுகளுக்கு இடைப்பட்ட பொது இடத்தை, சீனா தனக்கு சொந்தம் கொண்டாடியதுடன், இந்தியா, பூடான் எல்லையையும், சீனாவுடன் சேர்த்து, சர்ச்சைக்குரிய வரைபடத்தை வெளியிட்டது.

இதன் பின்னணியில், தற்போதைய சீன ராணுவத்தின் அத்துமீறல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share
Categories
அதிபர் டிரம்ப் அமெரிக்கா உலகம் சீனா தலைப்புச் செய்திகள் ரஷ்யா வட கொரியா

வடகொரிய ஏவுகணைச் சோதனைகளை ஊக்குவிப்பவர்கள் சீனாவும், ரஷ்யாவுமே : அமெரிக்கா

வடகொரிய ஏவுகணைச் சோதனைகளை பொருளாதார ரீதியாக  சீனாவும், ரஷ்யாவுமே ஊக்குவிக்கின்றன என அமெரிக்க வெளியுறவு செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் கூறியுள்ளார்.

நேற்று டில்லர்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனாவும் ரஷ்யாவும் வட கொரியாவில் இருந்து வளர்ந்துவரும் அணுசக்தி அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும் என்று  அழைப்பு விடுத்தார்.

வெள்ளிக்கிழமை வடகொரியா  நடத்திய ஹுவாசாங்-14 ஏவுகணையை சோதித்தது. இந்த ஏவுகணை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ், சிகாகோ போன்ற பெரிய நகரங்களை தாக்க வல்லது என்று வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமீபத்திய வடகொரியாவின் ஏவுகணை சோதனைகள் குறித்து கூறுகையில்,  “வடகொரியாவின் இந்த நடவடிக்கை பொறுப்பற்றது, ஆபத்தானது. உலக நாடுகளைத் தொடர்ந்து அச்சுறுத்தி வரும் வடகொரியாவின் இந்த ஏவுகணை நடவடிக்கைகள் அந்நாட்டை தனிமைப்படுத்தும், அதன் பொருளாதாரத்தை வலுவிழக்கச் செய்யும்” என்று கூறிப்பிட்டிருந்தார்.

அமெரிக்க செனட் சபை வடகொரியா மீதான பொருளாதார தடைகளை  நிறைவேற்றிய சில மணி நேரங்களில் வடகொரியா இந்த புதிய ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
Categories
உலகம் சீனா தலைப்புச் செய்திகள்

நோபல் பரிசுப் பெற்றவரான லியு சியாவ்போ உடல் அடக்கம்

சமாதானத்திற்கான நோபல் பரிசுப் பெற்றவரான லியு சியாவ்போ உடல் அடக்கம் செய்யப்பட்டது.

சீன அரசின் பிரபலமான விமர்சகராகவும்,   மனித உரிமைச் செயற்பாட்டளரும் இருந்த அவரை சீன அரசு 11 ஆண்டுகளாக சிறையில் அடைத்து இருந்தது.  கல்லீரல் புற்றுநோய் காரணமாக வியாழக்கிழமையன்று சிகிச்சைகள் பலனின்றி அவர் இறந்தார்.

லியு சியாவ்போவுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதில் இருந்து, அவருடைய மனைவி லியு சியா சீன அரசால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஆனால், லியு சியாவ்போவுக்கு புற்றுநோய்க்கு சிகிச்சை வழங்கப்பட்ட நகரான ஷென்யாங்கில் நடைபெற்ற இறுதிச் சடங்கில், அவருடைய மனைவி கலந்து கொண்டார். அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் லியு-விற்கு பிரியாவிடை அளித்தனர்.

“உள்ளூர் பழக்கவழக்கப்படியும், குடும்பத்தினரின் விருப்பப்படியும்” லியு சியாவ்போவின் உடல் எரியூட்டப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார். மொஸாட்டின் இரங்கற்பாட்டு லியு சியாவ்போவின் இறுதிச் சடங்கில் இசைக்கப்பட்டது.

 

 

Share
Categories
இந்தியா காஷ்மீர் சீனா தலைப்புச் செய்திகள்

காஷ்மீர் பிரச்னையில் சீனாவின் மத்தியஸ்தம் ஏற்க முடியாதது : இந்தியா

காஷ்மீர் பிரச்னையில் மூன்றாம் நாடான சீனாவின் மத்தியஸ்தத்தை ஏற்க முடியாது என்று இந்தியா நிராகரித்துள்ளது.

காஷ்மீர் விவகாரத்தில் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்கத் தயாராக இருப்பதாக சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கெங் ஷுவாங் சமீபத்தில் கூறியிருந்தார்.

இந்திய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் கோபால் பாக்லே, இதற்கு பதில் அளித்துப் பேசுகையில், காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நாட்டின் மத்தியஸ்தை ஏற்க முடியாது என்றும், அது இருநாடுகள் இடையிலான பிரச்னை மட்டுமே என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் காஷ்மீர் விவகாரம் என்பது அந்த மாநில மக்கள் சம்பந்தப்பட்டது என்றும், இதில் எல்லை தாண்டிய தீவிரவாதம் உள்ளிட்ட பிரச்னைகள் இருப்பதாகவும் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார். இருநாடுகளின் பிரச்னை என்ற அடிப்படையில் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும், அவர் தெரிவித்தார்.

மேலும், காஷ்மீரில் ரசாயன ஆயுதங்கள் எதையும் இந்தியா பயன்படுத்தவில்லை என்றும், இதுதொடர்பான பாகிஸ்தானின் புகார்கள் முற்றிலும் பொய்யானவை என்றும், வெளியுறவு செய்தித் தொடர்பாளர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

டோக்லாம் பிரச்சனை

டோக்லாம் பிரச்சனை குறித்து சீனா தெரிவித்த கருத்து எதுவாக இருப்பினும், இந்தியாவைப் பொறுத்தவரையில் இப்பிரச்சனை தூதரக தரப்புகளினால் தீர்த்து வைக்கப்படும்.  கடந்த காலங்களில் பெய்ஜிங் உடனான பல விவகாரங்களையும் தூதரக தரப்புகள் தீர்த்து வைத்திருக்கிறார்கள் என்று கோபால் பாக்லே தெரிவித்தார்.

Share
Categories
அமெரிக்கா உலகம் சீனா

வடகொரியா விவகாரம்: அமெரிக்காவுடன் இணைந்து செயல்படபோவதாக சீனா சொல்கிறது

வடகொரிய அணு ஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுடன் இணைந்து செயல்படப் போவதாக சீனா அறிவித்துள்ளது.

ஆசிய நாடான வடகொரியா தனது எதிரியான தென்கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும் அணு ஆயுத சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் ஜெர்மனியில் உள்ள ஹம்பர்க் நகரில் ஜி 20 நாடுகளின் தலைவர்கள் மாநாடு 2 நாட்கள் நடந்தது. இந்த மாநாட்டின் நிகழ்ச்சிகளுக்கு இடையே நேற்று முன்தினம் இரவு ஜனாதிபதி டிரம்ப், சீன அதிபர் ஜின்பிங் இருவரும் சந்தித்து பேசினர்.அப்போது அண்மைக்காலமாக வடகொரியா விடுத்து வரும் அணு ஆயுத சோதனை மிரட்டல் மற்றும் அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தக உறவில் காணப்படும் சீரற்ற நிலைமை குறித்து விரிவாக விவாதித்தனர்.ஏற்கனவே, அமெரிக்கா- சீனா இடையே அவ்வளவாக நட்புறவு இல்லாத நிலையில் ஹம்பர்க் நகர சந்திப்பு இரு தலைவர்களையும் அமைதிப்படுத்துவதாக இருந்தது.பின்னர், டிரம்ப் நிருபர்களிடம் பேசுகையில், “வடகொரியாவின் அணுஆயுத விவகாரத்தில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும்” என்றார்.டிரம்பை சந்தித்த பிறகு ஜின்பிங்கும், அமெரிக்காவை  பாராட்டி பேசினார்.அவர் கூறும்போது, “அணு ஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்காவும், சீனாவும் ஒத்துழைத்து செயல்பட முடிவு செய்துள்ளன. அதேநேரம், வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவேண்டியதன் அவசியம் குறித்தும் டிரம்பிடம் எடுத்துக் கூறினேன்” என்றார்.

Share
Categories
இந்தியா உலகம் சீனா தலைப்புச் செய்திகள்

காஷ்மீரில் சீன துருப்புக்கள் நுழையலாம் : சீன நிபுணர் சொல்கிறார்

சீனா – பூட்டான் நாடுகளிடையேயுள்ள தர்க்கத்தின் அடிப்படையில் இந்திய ராணுவம் டோக்லாமில் நுழைந்த வாதத்தை முன்வைத்து காஷ்மீர் இந்திய எல்லைக்குள் தனது நாட்டின் துருப்புக்கள் நுழைய முடியும்  என்ற தலைப்பில் ஒரு சீன நிபுணர் வாதிட்டார். சீன அரசின் பத்திரிகையான குளோபல் டைம்ஸில் அவர் மேற்படி வாதத்தைக் கொண்டுள்ள கட்டுரையை எழுதியுள்ளார்.

இந்தியா டோக்லாம் பகுதிக்கு ராணுவத்தைக் கண்டித்து அவர் வெளியிட்ட பல வாதங்களில் மேற்படி வாதமும் ஒன்றாகும். இந்தியா இதுகுறித்தான தனது நிலையை முன்பே தெரிவித்திருந்தது.

சீனாவின் மேற்கு சாதாரண பல்கலைக்கழகத்தில் இந்திய ஆய்வு மையத்தின் இயக்குனர் லோங் ஜிங்சுங், குளோபல் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான தனது கட்டுரையில் கூறியதாவது:

சீனாவைப் பொறுத்தவரையில் மேற்கு நாடுகளைப் பற்றி கவலைப்படாமல், பெய்ஜிங், டோக்லாம் சர்ச்சைகளை சர்வதேசமயமாக்க முடியும்; ஏனென்றால் மேற்கத்திய நாடுகள் சீனாவுடன் அதிக அளவில் தொழில் முறை நட்புறவைக் கொண்டுள்ளன

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், தைவானுக்கு ஆயுதங்கள் விற்பனை மற்றும் வட கொரிய பிரச்சினையில் சீனா மீது அழுத்தம் கொடுப்பது உள்ளிட்ட பிரச்சனைகளில் , அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் சமீபத்திய நடவடிக்கைகள் சீனாவின் வணிக திறன்களால் மேற்கத்திய நாடுகள் (சீனாவுக்குச் சார்பாக) இறங்கி வரவில்லை என்பதை எளிதாகக்  காண முடிகிறது.

 

 

Share
Categories
இந்தியா உலகம் சீனா தலைப்புச் செய்திகள்

இந்தியா ராணுவத்தை திரும்ப பெறவில்லை என்றால் சிக்கிம்மை பிரிப்போம்: சீன அரசு மீடியா

இந்தியா- பூடான் – சீனாவின் முச்சந்திப்பான டோகாலம் பகுதியை ஆக்கிரமிக்க சீனா முயற்சிகளை மேற்கொள்கிறது. பூடான் மற்றும் இந்திய பகுதிக்குள் சீன ராணுவம் அத்துமீறியபோது , இந்திய ராணுவம் அதனை தடுத்து நிறுத்தி உள்ளது. இதனால் பெரும் ஆத்திரம் அடைந்து உள்ள சீனா அடாவடியான அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. இந்தியா தன்னுடைய படையை திரும்ப அழைக்க வேண்டும் என கூறி வருகிறது. இந்தியா, அமைதியான பேச்சுவார்த்தைக்கு தயார் ஆனால் படைகளை திரும்ப பெற மாட்டோம் என கூறிவிட்டது.

இதனால் அங்கு போர் பதற்றம் நிலவி வருகிறது. சிக்கிம் செக்டாரில் இருநாட்டு ராணுவத்திற்கு இடையே கடும் பதட்டம் நிலவி வரும் நிலையில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவது போன்று சீனாவின் அரசு மீடியாவான குளோபல் டைம்ஸ் எழுதி வருகிறது.

 

இந்தியா தன்னுடைய ராணுவத்தை திரும்ப பெறவில்லை என்றால் சிக்கிம் மாநிலத்தை இந்தியாவிடம் இருந்து பிரிப்போம் என கூறிஉள்ளது குளோபல் டைம்ஸ். “சிக்கிம் விவகாரத்தில் சீனா தன்னுடைய நிலைப்பாட்டை மறு ஆய்வு செய்யும். 2003-ம் ஆண்டைய ஒப்பந்தத்தின் போது சிக்கிம்மை இந்தியாவின் ஒரு மாநிலமாக எற்றுக் கொண்டந்தை சீன மறு பரிசீலனை செய்யும். சிக்கிம் தனிநாடு என்ற எண்ணம் கொண்டவர்கள் உள்ளனர், சிக்கிம் விவகாரத்தில் உலக நாடுகளின் பார்வை எப்படியிருக்கும் என உணர்ச்சிப்பூர்வமாக உள்ளனர்.

 

சுதந்திர சிக்கிம் என்பதற்கு சீன சமூதாயத்திலும் ஆதரவு உள்ளது, அவர்களுடைய கோரிக்கையானது விரிவடையும். சிக்கிமில் சுதந்திர போராட்டத்திற்கு வழிவகைசெய்யும்,” என சீன மீடியாவான குளோபல் டைம்ஸ் குறிப்பிட்டு உள்ளது. பூடான் – இந்தியாவுடன் ஏற்படுத்திக் கொண்டுள்ள ஒப்பந்தப்படி பூடானின் எல்லையைப் பாதுகாக்கும் பொறுப்பு இந்தியாவுக்கு உள்ளது. இதனால்தான் பூடான் எல்லையில் இந்தியா ராணுவத்தை நிறுத்தி உள்ளது. இதனை விமர்சனம் செய்து உள்ள குளோபல் டைம்ஸ், சமமற்ற ஒப்பந்தங்கள் மூலம் சீனா பூடானின் இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்பை இந்தியா பாதிக்கிறது, என குறிப்பிட்டு உள்ளது.

 

பூடான் மற்றும் சிக்கிமில் இந்தியாவிற்கு எதிரான இயக்கங்கள் காணப்படும், இந்தியாவிற்கு இது எதிர்மறையாக பாதிப்பை ஏற்படுத்தும் தெற்கு இமாலைய புவிசார் அரசியலை மாற்றி எழுதும் என கூறிஉள்ளது சீன மீடியா.

Share
Categories
இந்தியா உலகம் சீனா தலைப்புச் செய்திகள்

பண்டைய வரைபடத்தைக் காண்பித்து இந்தியப் பகுதிக்குச் சொந்தம் கொண்டாடும் சீனா

எல்லையில் இந்தியா ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு உள்ளதாக குற்றம் சாட்டியுள்ள சீனா 127 ஆண்டுகளுக்கு முந்தைய மேப்பை வெளியிட்டு இந்தியப் பகுதிக்குச் சொந்தம் கொண்டாட முயல்கிறது.

இந்திய, திபெத், பூட்டான் முச்சந்திப்பிலுள்ள 269 சதுர கி.மீ பரப்பளவிலான ஒரு நிலப்பரப்பு சீனாவினால் தனது என்று உரிமை கொண்டாடப்படுகிறது. இவ்விடத்தில் சாலைத் கட்டுமானம் தொடர்பாக சீன மற்றும் இந்தியத் துருப்புக்களுக்கு இடையே மோதல்கள் நிகழ்ந்து வருகிறது. சீனா அடாவடியாக இங்கு புதிதாக ராணுவச் சாலையை உருவாக்க முயலுவதால்,  புது டெல்லிக்கும், பெய்ஜிங்கிற்கும் இடையிலான உறவுகளில் மிக மோசமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 2013-ல் தாவ்லத் பெக் ஓல்டி (Daulat Beg Oldi) -இல் இருநாடுகளுக்கிடையே ஏற்பட்ட நெருக்கடியைப் போல இப்போது மீண்டும் ஏற்பட்டுள்ளது.

 

தற்போது அங்கு சீனாவின் சாலை அமைக்கும் பணியையும் தடுத்து நிறுத்தி உள்ளது. இந்தியா தனது 3 ஆயிரம் ராணுவ வீரர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தி உள்ளது.

 

இந்நிலையில் சீனா, பேச்சுவார்த்தைக்கு எல்லையில் இருந்து ராணுவத்தை இந்தியா திரும்ப பெற வேண்டும் என்றும் 1962 போரை குறிப்பிட்டு இந்திய ராணுவம் வரலாற்றில் இருந்து பாடத்தை கற்றுக் கொள்ளவேண்டும் என்றும் எச்சரிக்கையை விடுத்தது. இதனையடுத்து இந்திய அரசு  எல்லையில் அடாவடியாக சாலை அமைக்கும் திட்டம் விவகாரத்தில் சீனாவிற்கும் இந்தியா எச்சரிக்கையை விடுத்தது. டோக்லாம் பகுதியில் சீனாவின் நடவடிக்கைகள் மிகவும் கவலையை அளிக்கிறது என இந்தியா தெரிவித்தது. எங்களுடைய ராணுவ நிலைப்பாட்டில் மாற்றம் கிடையாது என இந்தியா தெரிவித்துவிட்டது.

 

1962–ல் இருந்த அன்றைய இந்தியாவின் நிலையும், இன்றைய 2017–ம் ஆண்டின் இந்தியாவின் நிலையும் வேறானவை என்பதை சுட்டிக்காட்ட விரும்புவதாக சீனாவிற்கு இந்தியா பதிலடி கொடுத்தது. இது சீனாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. டோங் லாங்  சீனாவின் பகுதி. அதை இந்தியா ஆக்கிரமித்துள்ளது என புகார் கூறியுள்ளது. மேலும் 1890-ம் ஆண்டு அதாவது 127 ஆண்டுக்கு முந்தைய  ‘மேப்’ (வரை படத்தை) சீனா வெளியிட்டுள்ளது. இங்கிலாந்து – சீனா இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தில் சிக்கிம் மற்றும் திபெத் சம்பந்தப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இந்த ஒப்பந்தத்தில் இங்கிலாந்து கவர்னர் லாங்ஸ்டவுன் பிரபுவும், சீனாவின் லெப்டினென்ட் கவர்னர் செங்தாயும் கையெழுத்திட்டுள்ளனர். மேலும் ஒரு போட்டோவையும் சீனா வெளியிட்டுள்ளது. சீன எல்லையில் இந்திய ராணுவத்தின் 2 புல்டோசர்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதையும் சிவப்பு கோடிட்டு காட்டியுள்ளது. இதற்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. டோங் லாங் பகுதியில் சீனா சாலை அமைக்கும் பணியில் ஏற்பட்டுள்ள பதட்டத்தை தொடர்ந்து பாதுகாப்பு கருதி எல்லையில் இந்திய ராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

Share