Categories
உலகம் கிரீஸ் தலைப்புச் செய்திகள் துருக்கி

துருக்கி-கிரீக்கில் 6.7 அளவு நிலநடுக்கம், ஆழிப்பேரலை ஏற்பட்டது

துருக்கிய கடற்பகுதியிலும், சில கிரேக்க தீவுகளிலும் 6.7 அளவு நிலநடுக்கமும் அதன் விளைவாக  ஆழிப்பேரலையும் ஏற்பட்டுள்ளது.

கடற்கரை நகரான மர்மைசை ஆழிப்பேரலை தாக்கியதால் வீடுகளும் கட்டிடங்களும் நீரில் மூழ்கின.

கிரேக்கத் தீவான கோஸில் குறைந்தது 2 பேராவது இறந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

வேறு அதிகமான தகவல் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

Share
Categories
உலகம் கிரீஸ்

கிரீஸை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : 10 பேர் படுகாயம்

கிரீஸ் நாட்டின் லெஸ்போஸ் கடற்கரை நகரமான ப்ளோமாரியின் தெற்கில் இருந்து 5 கி.மீ தொலைவில் நேற்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது. சுமார் 2 நிமிடங்கள் தொடர்ந்து நீடித்த நிலநடுக்கத்தால், ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கிய 10 பேர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து, அவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.  துருக்கி நாட்டில் இஸ்தான்புல் மற்றும் ஏதென்சிலும் இந்த நிலநடுக்கம்உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share