Categories
இந்திய வம்சாவளி இந்தியா உலகம் கனடா தலைப்புச் செய்திகள்

கனேடிய இந்திய வம்சாவளியினரான லில்லி சிங் யுனிசெஃப் நல்லெண்ணத் தூதுவராக நியமனம்

கனேடிய இந்திய வம்சாவளியினரான லில்லி சிங் யுனிசெஃப் நல்லெண்ணத் தூதுவராக நியமிக்கப் பட்டார்.

யூ டியூப் வட்டாரத்தில் ‘சூப்பர் உமன்’ என்ற பெயரில் பிரபல நட்சத்திரமான இவர் ஹிந்தியில் சில காணொலிகளை வெளியிட்டும், அதே போல ஆங்கில காணொலிகளில் ஹிந்தி சப்-டைட்டில்களை இடுவதன் மூலம் தனது வலைப்பதிவும், சேனலும் ஏராளமானவர்களை சென்றடைய செய்யப்போவதாக கூறினார்.

யூ டியூப்பில் 11.9 மில்லியன் சந்தாதாரர்களை வைத்துள்ள இவர் இந்த ஐநா அமைப்பின் பணிகளை விளக்கி தன்னைப் பின் தொடர்பவர்களை குழந்தைகளின் நலனுக்கு வேலை செய்ய வலியுறுத்தவுள்ளார்.  ஓரு புதிய முயற்சியாக சமூக வலைதளங்களில் #பெண் குழந்தைகளின் மீது அன்பு எனும் ஹேஷ்டேக்கில் பெண் குழந்தைகளின் மீதான வெறுப்பை தடுத்து நிறுத்தும் நோக்கோடு பிரச்சாரத்தை துவங்கியிருக்கிறார். இவர் டெல்லியில் முகாமிட்டு யுனிசெஃப்பின் யூத் ஃபார் சேஞ்ச் எனும் முயற்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.  இம்முயற்சி உடல்நலம், சுகாதாரம், சிறார் தொழிலாளர் மற்றும் பாலியல் சமத்துவம் ஆகியவற்றின் தொடர்பில் இயங்கி வருகிறது. “குழந்தைகளின் நலனுக்கு  ஆதரவளிக்க எனது குரலை அளிக்க கிடைத்த வாய்ப்பினால் கௌரவிக்கப்படுகிறேன். சமூகத்திற்காக அல்லாமல் சிறார்களுக்காக குரல் கொடுப்பதற்கான நேரம்” என்றார் லில்லி.
Share
Categories
இந்திய வம்சாவளி உலகத் தமிழர் உலகம் சிங்கப்பூர் தலைப்புச் செய்திகள் மலேசியா

இந்திய வம்சாவளி இளைஞருக்கு சிங்கபூரில் மரண தண்டனை நிறைவேற்றம்

மலேசியாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி இளைஞர் பிரபாகரன் ஸ்ரீவிஜயன்(வயது 27). இவர் பெட்ரோல் நிலையத்தில் வேலை பார்த்து வந்தார்.   கடந்த 2012 ம் ஆண்டு சிங்கப்பூர் குடி நுழைவு மையத்தில், இவர் ஓட்டி வந்த காரில் இருந்து 22.24 கிராம் போதைப் பொருளை சிங்கப்பூர் போலிஸ் அதிகாரிகள் கைப்பற்றியிருந்தனர்.

எனினும், அந்தக் கார் தன்னுடையது இல்லை என்றும், நாதன் என்பவரிடம் இருந்தே அந்த  காரை பெற்றதாகவும், அதில் போதைப்பொருள் இருப்பது தனக்குத் தெரியாது என்றும் பிரபாகரன் தொடர்ந்து முறையிட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 2014ம் ஆண்டு ஜூலை 22ம் தேதி மருந்துகளை தவறாக பயன்படுத்தும் சட்டத்தின் கீழ் சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தில் பிரபாகரனுக்கு மரண தண்டனை விதித்திருந்தது. கோலாலம்பூரின் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் பிரபாகரனின் வழக்கு விசாரணை நடைபெற விருந்த நிலையில் பிரபாகரனின் மரண தண்டனையை ஒத்திவைக்க அவரது வழக்கறிஞர் கடந்த செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் நேற்று நிராகரித்ததுடன், பிரபாகரனின் தண்டனையை அவ்வாறு நிறுத்த முயல்வது முறையற்றது என்றும் கண்டித்திருந்தனர்.

இந்த நிலையில்   பிரபாகரன் ஸ்ரீவிஜயனுக்கு சாங்கி சிறைச்சாலையில் இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

Share