Categories
அமெரிக்கா அமெரிக்கா உலகம் ஜப்பான் தலைப்புச் செய்திகள்

அமெரிக்க போர்கப்பல் சரக்குக் கப்பலுடன் மோதல் : 7 மாலுமிகளை காணவில்லை

ஜப்பானை அடுத்த கடற்பகுதியில் அமெரிக்க போர்கப்பலான யூ.எஸ்.ஏஸ். பிட்ஸ்ஜெரால்ட்  அதைவிட 4 மடங்கு பெரிய சரக்குக் கப்பலுடன் மோதிய விபத்தில் 7 மாலுமிகளை காணவில்லை. அவர்களைத் தேடும் பணியில் ஜப்பானிய கடற்காவல் படையும் வேறு அமெரிக்க மற்றும் ஜப்பானிய கப்பல்களும் ஈடுபட்டுள்ளன.

யூ.எஸ்.ஏஸ். பிட்ஸ்ஜெரால்ட் ஜப்பானிலுள்ள யோகோஸ்கா கடற்படை தளத்தின் துறைமுகத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது இந்த விபத்து நடந்துள்ளது. காணாமல் போன 7 மாலுமிகளும் சேதமான யூ.எஸ்.ஏஸ். பிட்ஸ்ஜெரால்டின் பகுதிக்குள் சிக்கிக் கொண்டிருக்கக் கூடும் என்று ஜப்பானிய கடற்காவல் படை தெரிவித்தது.

காணாமல் போன மாலுமிகளின் பெயர்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

Share
Categories
அமெரிக்கா அமெரிக்கா உலகம் தலைப்புச் செய்திகள்

அமெரிக்க குடியரசு கட்சி எம்பி உட்பட 4 பேர் மீது துப்பாக்கிச்சூடு; சுட்டவர் கொல்லப்பட்டார்

அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில், குடியரசுக் கட்சியின் மூத்த எம்பி ஸ்டீவ் ஸ்கேலீஸ் மீது  துப்பாக்கிச் சூடு நடத்தப்ப்ட்டது. இந்த சம்பவத்தில் மேலும் 4 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரைச் சுட்டவர் ஜனநாயக கட்சியைச் சார்ந்தவரும், அதிபர் தேர்தல் வேட்பாளராவார் என எதிர்பார்க்கப்பட்ட பெர்னி சாண்டர்ஸின் ஆதரவாளருமான ஜேம்ஸ் ஹாட்கின்சன் என கருதப்படுகிறது. ஜேம்ஸ் ஹாட்கின்ஸன் சம்பவ இடத்திலாயே பாதுகாப்பு போலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

குடியரசுக் கட்சியின் லூசியானா எம்பி ஸ்டீவ் ஸ்கேலீஸ் உள்ளிட்டோர் பேஸ்பால் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் போது இந்த துப்பாக்கிச் சூடு நடந்தது. ஒரு குண்டு குடியரசுக் கட்சியின் எம்.பி.  ஸ்கேலீஸ்  இடுப்பு பகுதியில் பாய்ந்தது.  அவருடன் பேஸ்பால் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மேலும் 4 பேர் காயம் அடைந்தனர்.  இவர்கள் தற்போது மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Share
Categories
அமெரிக்கா அமெரிக்கா உலகம் தலைப்புச் செய்திகள்

ரஷ்யாவுடன் இணக்கம் என்பது பொய்; கோமியின் பதவி நீக்கம் சரிதான்: ஜெஃப் செஷன்ஸ்

அமெரிக்க பெடரல் அட்டார்ணி ஜெனரல் ஜெஃப் செஷன்ஸ் இன்று செனட்டில் சாட்சியம் அளிக்கையில்,  2016 தேர்தலின் போது அவர் ரஷ்யாவுடன் இணக்கமாக செயல்பட்டார் என்று எதிர்கட்சியும் ஊடகங்களும் சொல்வது கொடுரமான, வெறுக்கத்தக்க பொய் என்று கூறினார்.  மேலும், எப்.பி.ஐ. இயக்குநர் ஜேம்ஸ் கோமியை பதவி நீக்கம் செய்த விஷயத்தில் தனது பங்களிப்பு மிகவும் சரியானதே என்றார்.

மேலும் அவர் செனட் புலனாய்வுக் குழுவிடம் கூறியதாவது :

எந்தவொரு ரஷ்யருடனோ அல்லது எந்த வெளிநாட்டு அதிகாரிகளுடனோ நான் தேர்தல் பிரச்சாரத்திலோ அல்லது தேர்தலிலோ  தலையீடு குறித்து எந்த உரையாடலையும் நடத்தவில்லை. டிரம்ப்-ன் பிரச்சாரக் குழுவைச் சார்ந்த எவரும் இது குறித்து ஏதேனும் உரையாடல் நடத்தினார்களா என்றும் எனக்குத் தெரியாது.

Share
Categories
அமெரிக்கா அமெரிக்கா உலகம் தலைப்புச் செய்திகள்

அமெரிக்க முன்னாள் அரசு வழக்கறிஞர் பிரீட் பாராரா டிரம்ப் மீது குற்றச்சாட்டு

அமெரிக்க முன்னாள் முன்னிலை பெடரல் அரசு வழக்கறிஞரான பிரீட் பாராரா, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் இருந்து பல தொலைபேசி அழைப்புகளை பெற்றதாகவும், மூன்றாவது தொலைபேசி அழைப்பு ஒன்றை எடுக்காத பிறகு, தான் பதவி நீக்கம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். இது குறித்து வெள்ளை மாளிகை இன்னும் பதிலளிக்கவில்லை.

நிர்வாக கிளையையும், சுயாதீன குற்றவியல் ஆய்வாளர்களையும் பிரிக்கிற வழக்கமான எல்லைகளை டிரம்ப் தாண்டி விட்டதாக பிரீட் பாராரா தெரிவித்தார்.

பிரீட் பாராரா நியுயார்க்  தெற்கு மாவட்ட முன்னிலை பெடரல் அரசு வழக்கறிஞராக 2009-லிருந்து 2016 வரை பணியாற்றினார்.

இந்தியாவில் பிறந்த பிரீட் பாராரா, 1970-ல் அவரது பெற்றோருடன் அமெரிக்காவில் குடிபெயர்ந்தவர். வழக்கறிஞராக பணியாற்றிய இவர் ஜனநாயக கட்சியின் செனட்டர் சக் ஷூமரின் ஆலோசகராகவும் சிலகால பணியாற்றினார்.

பல்வேறு புகழ்பெற்ற நிறுவனங்களையும் கோர்ட்டுக்கு இழுத்து தண்டனை வாங்கிக் கொடுப்பதில் பேர்பெற்றவர்.

பாராராவால் தண்டனையும் தண்டப்பணம் செலுத்தவும் வைக்கப்பட்டவர்கள் சிலர் :

  • தேவ்யானி கோப்ரகெடே – நியுயார்க் இந்திய தூதரகத்தில் உதவி கான்சலாக பணியாற்றிய இவரது வீட்டில் வேலை பார்த்த ஒருவர் வெளியேறி, தனக்கு சரியான சம்பளம் கொடுக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு பதிவு செய்தார். இந்த வழக்கில் இந்திய அரசின் எதிர்ப்புகளை மீறி தேவ்யானிக்கு பாராராவினால் தண்டனை வாங்கி கொடுக்கப்பட்டது.
  • நியுயார்க் வால் தெருவில் பங்குச் சந்தை உள் வர்த்தகம் (insider trading) என்ற குற்றச்சாட்டில் இலங்கைத் தமிழரான ராஜ் ராஜரத்னமும் அவரது கூட்டாளிகளும் பாராராவால் தண்டனை வாங்கி கொடுக்கப்பட்டனர்.
  • சிட்டி பாங்க் – ஆபத்தான கடன்கள் என்ற குற்றச் சாட்டில், சிட்டி பாங்க் பெருந்தொகையை தண்டப்பணமாக செலுத்த வைத்தார்.

 

Share
Categories
அமெரிக்கா அமெரிக்கா அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் உலகம்

அமெரிக்காவில் நடந்த ‘ஸ்பெல்லிங் பீ’ போட்டியில் இந்திய சிறுமி வெற்றி

அமெரிக்காவில் நடைபெற்ற, ‘தேசிய ஸ்பெல்லிங் பீ’ போட்டியில், இந்திய வம்சாவளியை சேர்ந்த, அனன்யா வினய், 12, முதலிடம் பெற்றார். இவ்வகை போட்டியில், 13-வது முறையாக தொடர்ந்து இந்திய வம்சாவளியினர் வெற்றி பெற்று வருகின்றனர்.

அமெரிக்காவில், ஆங்கில வார்த்தைகளுக்கான சரியான, ‘ஸ்பெல்லிங்’ சொல்லும், ‘தேசிய ஸ்பெல்லிங் பீ’ போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடப்பது வழக்கம். இந்த போட்டிகளில், உலக நாடுகளை சேர்ந்த, நுாற்றுக் கணக்கான போட்டியாளர்கள் பங்கேற்பர். அவர்களில், மிகச் சிறந்த போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, இறுதிச் சுற்றுப் போட்டிக்கு அனுமதிக்கப்படுவர்.

இதுவரை நடந்த போட்டிகளில், தொடர்ந்து, 12 ஆண்டுகளாக, இந்திய வம்சாவளியை சேர்ந்த போட்டியாளர்களே வெற்றி பெற்று வந்துள்ளனர். இந்நிலையில், இந்த ஆண்டிற்கான, ‘தேசிய ஸ்பெல்லிங் பீ’ போட்டியில், பல்வேறு நாடுகளை சேர்ந்த, 291 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
அவர்களில் சிறந்த போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, கடைசியாக, 15 பேர் மட்டும், இறுதிப் போட்டிக்கு அனுமதிக்கப்பட்டனர்.
இறுதிப் போட்டியில், இந்திய வம்சாவளியை சேர்ந்த, அனன்யா வினய் மற்றும் ரோஹன் ராஜீவ் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில், கனடாவில் வசிக்கும் அனன்யா வினய், போட்டியில் வெற்றி பெற்றார். இதையடுத்து, அவருக்கு, 26 லட்சம் ரூபாய் பரிசளிக்கப்பட்டது. அமெரிக்காவில் நடக்கும் இந்த போட்டியில், தொடர்ந்து, 13வது முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவரே மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.
பொதுவாக, அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் அதிகமாகப் படித்தவர்களாகையால், தங்கள் குழந்தைகளை இதுபோன்ற போட்டிகளில் பங்கேற்க ஊக்குவிக்கின்றனர். இருப்பினும், அமெரிக்க விளையாட்டுத் துறையில் இவர்களின் பங்கு வெகு குறைவே. இந்தியக் குழந்தைகள் கிரிக்கெட் விளையாட்டைத் தவிர மற்ற அமெரிக்க விளையாட்டுகளான பேஸ்பால், அமெரிக்கன் புட்பால் போன்றவற்றில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை.
Share
Categories
அதிபர் டிரம்ப் அமெரிக்கா அமெரிக்கா உலகம் போப் பிரான்ஸிஸ் வாட்டிகன்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் போப் பிரான்சிசுடன் சந்திப்பு

பல்வேறு விவகாரங்களில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்-க்கும் போப் பிரான்சிசுக்கும் இடையே கருத்து மோதல் இருந்த நிலையில் இன்று முதல் முறையாக இருவரும் நேருக்கு நேர் சந்தித்து கொண்டனர்.  இந்த சந்திப்பு 20 நிமிடங்கள் நீடித்தது.

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் முதல் முறையாக வெளிநாட்டு பயணம் மேற்கொண்ட டிரம்ப், முதல் பயணமாக  சவூதி அரேபியா சென்றார். பின்னர் இஸ்ரேல், பலஸ்தீன பிராந்தியங்களில் பயணம் மேற்கொண்ட டிரம்ப் தற்போது ஐரோப்பிய நாட்டில் பயணம் மேற்கொண்டுள்ளார்.

போப் பிரான்சிஸும் டிரம்பும் இதற்கு முன் நேருக்கு நேர் சந்தித்தது இல்லை. இருப்பினும், பருவநிலை மாறுபாடு, குடியேற்ற விதிகள்  தடையற்ற  முதலாளித்துவம்  ஆகிய விவகரங்களில் டிரம்ப்- போப் இடையே நேரடியாக கருத்து மோதல் ஏற்பட்டது. அதேபோல், மரண தண்டனை, ஆயுத வியாபாரம் உள்ளிட்ட விவகாரங்களில் இருவருக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டது.

போப் பிரான்ஸிஸுடான சந்திப்பின் போது அமெரிக்க அதிபரின் மனைவி மெலனியா டிரம்ப்  மற்றும் டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப் ஆகியோரும் உடன் இருந்தனர்.  போப் பிரான்சிஸ் உடனான சந்திப்புக்கு பிறகு டிரம்ப் இத்தாலி அதிபர் மற்றும் பிரதமர் ஆகியோரை சந்தித்தார். டிரம்ப் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இத்தாலியில் நுற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டமும் நடத்தினர். அவர்கள் டிரம்ப்க்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் வைத்து இருந்தனர்.

 

Share
Categories
அமெரிக்கா அமெரிக்கா உலகம் குடியரசு கட்சி ஜனநாயக கட்சி

“ஒபாமாகேர்” திட்டம் முடிவுக்கு வருகிறது

குடியரசு கட்சியின் சுகாதார பாதுகாப்பு மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழவையில் நூலிழையில்  வெற்றியடைந்தை அடுத்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ‘ஒபாமா கேர்’  திட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக  தெரிவித்திருக்கிறார்.  ‘ஒபாமா கேர்’ என்பது முன்னாள் அதிபர் பாராக் ஒபாமாவினால் முன்னர் கொண்டுவரபட்ட சுகாதர பாதுகாப்புத் திட்டமாகும்.

217 வாக்குகள் ஆதரவாகவும், 213 வாக்குகள் எதிராகவும் பதிவான நிலையில் இந்த மசோதா வெற்றிபெற்றுள்ளது. தனக்கு முன்னர் அதிபராக இருந்த பராக் ஒபாமாவின் சுகாதார பாதுகாப்பு திட்டத்தை நீக்கிவிட்டு, புதிய திட்டத்தை வகுப்பதாக அதிபர் தேர்தல் பரப்புரையின்போது டிரம்ப் அளித்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு முதல்படியாக இந்த வெற்றி பார்க்கப்படுகிறது.

இந்த அமெரிக்க சுகாதாரப் பாதுகாப்பு சட்டம் மில்லியன் கணக்கானோரை மருத்துவக் காப்பீடு இல்லாமல் ஆக்கும் என்று ஜனநாயக கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

வாக்கெடுப்பு நடந்த சிறிது நேரத்துக்குப் பின்னர், குடியரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிபரின் வெள்ளை மாளிகையின் புல்வெளியில் வெற்றிக் கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டன.

ஆறு வாரங்களுக்கு முன்னர், போதுமான ஆதரவு இல்லாததால் இந்த சுகாதாரப் பாதுகாப்பு திட்டத்தை நிறைவேற்றும் முயற்சி இயலாத ஒன்று என்று தோன்றியது.

Share
Categories
அமெரிக்கா ஆப்கானிஸ்தான் உலகம்

தனது மரணத்தை தானே படமெடுத்த பெண் புகைப்படக் கலைஞர்

அமெரிக்க ராணுவப் புகைப்படக் கலைஞர் ஒருவர் , ஆப்கானிஸ்தானில்  குண்டுவெடிப்பு சம்பவத்தில் நான்கு ஆஃப்கானியர்களுடன் கொல்லப்பட்டார். அவர் தனது மரண தருணத்தை  தானே  எடுத்த புகைப்படத்தை  அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ளது.
2013 ஜூலை 2 ஆம் தேதியன்று, மோர்டார் ஷெல் குண்டு ஒன்று வெடித்ததில் 22 வயதான வல்லுநர் ஹில்டா கிளேய்டன் மற்றும் ஆஃப்கானிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த நான்கு படையினர் பலியானார்கள்.

புகைப்பட இதழியல் குறித்து கிளேய்டன் பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்த ஆஃப்கனிஸ்தானை சேர்ந்த ஒருவர் எடுத்திருந்த புகைப்படத்தை அமெரிக்க ராணுவம் வெளியிட்டிருந்தது.

பலியானவர்களில் அவரும் ஒருவர். கிழக்கு மாகாணமான லக்மானில் இந்த விபத்து ஏற்பட்டது.

`மிலிட்டரி ரிவ்யூ` என்ற சஞ்சிகை இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. கிளேய்டன் குடும்பத்தாரின் அனுமதியோடு இந்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Share
Categories
அமெரிக்கா உலகம் ஏவுகணை தாட் தென் கொரியா போர்கருவிகள் வட கொரியா

வடகொரிய ஏவுகணைகளை அழிக்க இயங்கத் துவங்கியது அமெரிக்காவின் `தாட்” தடுப்பு முறை

(பி.பி.சி. தமிழ்)

தென் கொரியாவில் சர்ச்சைக்குரிய தாட் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு முழுமையாக செயல்பட இன்னும் சில மாதங்கள் ஆகும் என்றாலும் இது வடகொரியாவின் ஏவுகணைகளை இடைமறிக்கும் என்று கூறப்படுகிறது.

வடகொரியாவின் இருந்து வரும் தொடர் அச்சுறுதல்கள் மற்றும் அமெரிக்க போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பலின் இருப்பு காரணமாக கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துவருகிறது.

சமீபத்திய ராணுவ நடவடிக்கைகளுக்கு வட கொரியா கோபமாக பதிலளித்தது. மேலும், அமெரிக்கா ஓர் அணு ஆயுதப் போரை ஏற்படுத்தும் அபாயத்தில் உள்ளதாக குற்றம் சாட்டியது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வட கொரிய அதிபர் கிம் ஜோங்- உன் னை சரியான தருணத்தில் சந்தித்தால் பெருமைப்படுவேன் என்று கூறிய அடுத்த நாள் இந்த பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கடந்த வாரம் அமெரிக்கா தாட் ஏவுகணை அமைப்பை நிறுவப் போவதாக அறிவித்தது . ஆனால் இது 2017ம் ஆண்டு இறுதியில்தான் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அந்த ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு, தாக்குதலுக்கு உள்ளாகக் கூடிய சாத்தியம் இருப்பதாகவும், அருகில் உள்ளவர்களின் வாழ்க்கையை ஆபத்தில் சிக்கவைக்கலாம் என்றும் பல உள்ளூர்வாசிகள் நம்புகின்றனர்.

தனது ராணுவ செயல்பாடுகளில் அந்த அமைப்பு தலையிடுகிறது என்று சீனா நம்புகிறது. அதனால் இந்த அமைப்பை சீனாவும் கடுமையாக எதிர்க்கின்றது. செவ்வாயன்று, ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு நிறுவுதல் நிறுத்தி வைக்கப்படவேண்டும் என்று கோரியது.

”நமது நலன்களை பாதுகாக்கத் தேவையான உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்,” என்று சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கெங் ஷுவாங் தெரிவித்தார்.

அதே நேரத்தில், கிம் ஜோங்- உன்னை சந்திப்பது தொடர்பாக டிரம்ப் விருப்பம் வெளியிட்டிருப்பதை வரவேற்ற அவர், அதேவேளை, ”பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனைகள்தான் அணுவாயுதமயமாக்கலை தடுக்கும் உண்மையான மற்றும் சாத்தியமான வழி ” என்று கூறியுள்ளார்.

தாட் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியானதும், வட கொரியா ”பொருத்தமான பதிலடி”தரப்போவதாகவும், அரசு ஊடகத்தில், ”இரக்கமற்ற பதில் தாக்குதல் நடத்துவதுதான் எங்களது ராணுவத்தின் தீர்க்கமான விருப்பம்,” என்று தெரிவித்தது.

தாட் ஏவுகணை தற்போது கொரியாவைப் பாதுகாக்கும் திறன் கொண்டது என்று அங்குள்ள அமெரிக்கப் படையின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

ஆனால் தாட் ஏவுகணை அமைப்பு “தொடக்க இடைமறிப்பு திறன்” கொண்டதாக மட்டுமே உள்ளது என்று அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஏ எப் பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்த ஏவுகணையின் பெரும்பாலான பகுதிகள் வந்து சேருவதால் அது பலப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

சமீப வாரங்களில், ஐநா வின் ஏவுகணை சோதனை மீதான தடையை தொடர்ந்து மீறிவரும் நேரத்தில், வட கொரியா மற்றும் அமெரிக்கா இடையே சூடான வாக்குவாதங்கள் நடந்துவருகின்றன.

சமீப வாரங்களில் தோல்வியில் முடிந்த இரண்டு ஏவுகணைகளை செலுத்தி வட கொரியா சோதனை நடத்தியுள்ளது. மேலும் எந்த நேரத்திலும் தனது ஆறாவது அணு சோதனை நடத்த தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது.

அமெரிக்காவும் தென் கொரியாவும் இணைந்து, சூப்பர்சானிக் பிஒன்பி என்ற லேன்சர் குண்டு வீச்சுத்திறன் கொண்ட விமானங்களைப் பயன்படுத்தி, ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டதை வடகொரியா கோபமாக கண்டித்துள்ளது. இது, அணுகுண்டுகளை வீசுவதற்கான ஒத்திகை நடவடிக்கை என்று வர்ணித்துள்ளது.

”கொரிய தீபகற்பத்தை அணுசக்தி யுத்தத்தின் விளிம்பிற்கு தள்ளும் விதமாக இந்த பொறுப்பற்ற ராணுவ முயற்சிகள் உள்ளன,” என்று வட கொரிய அதிகாரி கே சி என் ஏ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

தாட் ஏவுகணை என்றால் என்ன ?

பாய்ந்து வரும் குறுகிய மற்றும் நடுத்தர அளவிலான பாலிஸ்டிக் ஏவுகணைகளை இயங்கும் நேரத்துக்கு முன்பு எதிர்கொண்டு தகர்க்கும் தன்மை கொண்டது.

200 கிலோமீட்டர் வரம்பில் 150கிலோமீட்டர் உயரம் வரை சென்று தாக்கும்.

வட கொரியாவின் சாத்தியாமான தாக்குதல்களுக்கு எதிராக அமெரிக்கா முன்னதாக குவாம் மற்றும் ஹவாய் பகுதிகளில் தாட் ஏவுகணையை நிறுவியது.

தாட் எவ்வாறு வேலை செய்கிறது?

எதிரி படை ஓப் ஏவுகணையை செலுத்தும்போது, தாட் ரேடார் அமைப்பு அதை கண்டறிந்துவிடுகிறது. கட்டளையிடப்பட்டு இயக்கப்பட்டதும் அது பறந்து சென்று எதிரியின் ஏவுகணையை எதிர்கொண்டு இயங்கும் முன்பு மோதி அழிக்கிறது. தாட் ஏவுகணை தடுப்பு ரேடார் ஏவப்படும் வாகனத்தில் இருந்து ஒரே நேரத்தில் எட்டு ஏவுகணைகளை அனுப்ப முடியும்.

Share
Categories
அமெரிக்கா உலகம் தென் கொரியா வட கொரியா

தென் கொரியாவில் அமைக்கும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பின் செலவை ஏற்றது அமெரிக்கா

தென்கொரியாவில் அமெரிக்கா அமைக்கவிருக்கும் ஒரு பில்லியன் டாலர் பெறுமதியான ஏவுகணை பாதுகாப்பு கேடய அமைப்புக்கு ஆகும் செலவை அமெரிக்கா கொடுக்க ஒப்புக்கொண்டதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

ஆனால், இதற்கான செலவை தென்கொரியாவே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இரு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் தொலைபேசியில் மேற்கொண்ட உரையாடலை அடுத்து அமெரிக்கா நிதி வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.

தற்போது தென் கொரியாவில் அமைக்கப்படும் இந்த பாதுகாப்பு கேடயம், வட கொரியாவில் இருந்து ஏவுகணைகள் வந்தால், அவற்றை சுட்டு வீழ்த்தும் திறன் படைத்தவை.

இந்த ஒப்பந்தத்தின்படி, ஏவுகணை பாதுகாப்பு கேடய அமைப்பிற்கான இடத்தை தென்கொரியா வழங்கும் நிலையில், அமெரிக்கா ஏவுகணை பொருட்களுக்கான செலவை ஏற்றுக்கொள்ளும்.

Share