Categories
அமெரிக்கா அமெரிக்கா உலகம் உள்நாட்டு புலனாய்வுத் துறை தலைப்புச் செய்திகள்

எஃப்.பி.ஐ.யின் புதிய இயக்குநராக கிறிஸ்டோபர் வ்ரே : செனட் அங்கீகரித்தது

அமெரிக்காவின் உள்நாட்டு புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ. -யின் புதிய இயக்குநராக கிறிஸ்டோபர் வ்ரே நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு  செனட் சபை  ஒப்புதல் அளித்துள்ளது.

அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பு எஃப்.பி.ஐ.யின் இயக்குநராக இருந்த ஜேம்ஸ் கோமி பதவி வகித்தார். கடந்த 2016-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில், ரஷ்யாவுக்கும் தேர்தலில் போட்டியிட்ட டொனால்டு ட்ரம்ப் பிரச்சாரக் குழுவுக்கும் இடையில் ரகசிய தொடர்பு இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக ஜேம்ஸ் கோமி தீவிர விசாரணையில் இறங்கினார்.

இந்நிலையில், கடந்த மாதம் 10-ம் தேதி ஜேம்ஸ் கோமியை அதிபர் டொனால்டு ட்ரம்ப் திடீரென பதவியிலிருந்து நீக்கினார். இதையடுத்து எஃப்.பி.ஐ.யின் புதிய இயக்குநராக கிறிஸ்டோபர் வ்ரே நியமிக்கப்பட்டார்.

வ்ரே நியமனம் குறித்து நாடாளுமன்ற செனட் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டபின் வாக்களிப்பில் அவருக்கு ஆதரவு அதிகமாக இருந்தது. இதையடுத்து எஃப்.பி.ஐ. இயக்குநராக கிறிஸ்டோபர் வ்ரேவின் நியமனம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Share
Categories
அமெரிக்கா அமெரிக்கா உலகம் குடியரசு கட்சி தலைப்புச் செய்திகள்

வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு இயக்குநராக 11 நாட்கள் பதவி வகித்த அந்தோனி ஸ்காரமுக்கி பணிநீக்கம்

வெள்ளை மாளிகையின் மேற்குப் பகுதியில் நிகழும் உள்கட்சி மோதல்களைத் தவிர்த்து, ஒழுங்கு முறையைக் கொண்டு வருவதற்காக, புதிதாக அலுவலர்களின் மேலாளராக பொறுப்பேற்றுக்கொண்ட ஜான் கெல்லி, கடந்த 11 நாட்களாக தகவல் தொடர்பு இயக்குநராக  பதவி வகிக்கையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டுக்கொண்டிருந்த அந்தோனி ஸ்காரமுக்கியை பணிநீக்கம் செய்துள்ளார். இது ஒழுங்கு முறையைக் கொண்டு வருவதற்கான அவரது முயற்சியின் முதல் வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

வெள்ளை மாளிகையின் ஊடகவியல் செயலாளரான சாரா ஹக்கபீ சாண்டர்ஸ், கெல்லிதான் ஸ்காரமுக்கியை பணி நீக்கம் செய்யக் கோரினார் என்பதை உறுதி செய்யவில்லை. எனினும், தற்போது  ஸ்காரமுக்கி வெளியேறியபின், ஜான் கெல்லியிடம் முழுப் பொறுப்பும் கிடைத்திருக்கிறது என்பதை ஒப்புக் கொண்டார்.

“ஜெனரல் கெல்லி வெள்ளை மாளிகையில் முழுமையாக செயல்பட  அதிகாரம் கிடைத்துள்ளது , மேலும் அனைத்து ஊழியர்களும் அவரது அதிகாரத்தின் கீழ் வேலை செய்ய வேண்டும்”, என்று கூறிய சாரா ஹக்கபீ, மேலும் வேறு ஊழியர்கள் மாற்றப் படும் நிலை இல்லை என்று தெரிவித்தார்.

 

 

 

Share
Categories
அமெரிக்கா உலகம் தலைப்புச் செய்திகள்

உலக பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸை சிறிது நேரம் முந்திய அமேசான் நிறுவனர்

நேற்று (வியாழக்கிழமை) சிறிது நேரத்திற்கு அமேசான் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியான ஜெஃப் பெசோஸ்  உலகின் மிகப்பெரிய பணக்காரர் என்ற பெருமையை பெற்றிருந்தார். பின்னர், பில்கேட்ஸ் மீண்டும் மிகப்பெரிய பணக்காரர் என்ற நிலையை தக்கவைத்துக் கொண்டார்.

ஜெஃப் பெசோஸின்  சொத்து மதிப்பு சுமார் 91.4 பில்லியன் டாலர்களாக இருந்தது. பின்னர், அமேசான் நிறுவனத்தின் பங்குகளின் விலை சரிவை சந்தித்த காரணத்தால் உலக பணக்காரர்கள் பட்டியலில் அவர் வகித்த முதல் இடம் பறிபோனது. தொடர்ந்து, அந்த இடத்தை மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் மீண்டும் தக்கவைத்து கொண்டார்.

அமேசான் நிறுவனத்தின் சுமார் 17 சதவீத பங்குகளை பெஸோஸ் தன் வசம் வைத்துள்ளார். அதன் மதிப்பு சுமார் 500 பில்லியன் டாலர்களாகும். வாஷிங்டன் போஸ்ட் என்ற நாளிதழை வாங்கியுள்ள பெஸோஸ், விண்வெளி ராக்கெட் தொழில் ஒன்றையும் அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
Categories
அமெரிக்கா உலகம் சீனா

வடகொரியா விவகாரம்: அமெரிக்காவுடன் இணைந்து செயல்படபோவதாக சீனா சொல்கிறது

வடகொரிய அணு ஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுடன் இணைந்து செயல்படப் போவதாக சீனா அறிவித்துள்ளது.

ஆசிய நாடான வடகொரியா தனது எதிரியான தென்கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும் அணு ஆயுத சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் ஜெர்மனியில் உள்ள ஹம்பர்க் நகரில் ஜி 20 நாடுகளின் தலைவர்கள் மாநாடு 2 நாட்கள் நடந்தது. இந்த மாநாட்டின் நிகழ்ச்சிகளுக்கு இடையே நேற்று முன்தினம் இரவு ஜனாதிபதி டிரம்ப், சீன அதிபர் ஜின்பிங் இருவரும் சந்தித்து பேசினர்.அப்போது அண்மைக்காலமாக வடகொரியா விடுத்து வரும் அணு ஆயுத சோதனை மிரட்டல் மற்றும் அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தக உறவில் காணப்படும் சீரற்ற நிலைமை குறித்து விரிவாக விவாதித்தனர்.ஏற்கனவே, அமெரிக்கா- சீனா இடையே அவ்வளவாக நட்புறவு இல்லாத நிலையில் ஹம்பர்க் நகர சந்திப்பு இரு தலைவர்களையும் அமைதிப்படுத்துவதாக இருந்தது.பின்னர், டிரம்ப் நிருபர்களிடம் பேசுகையில், “வடகொரியாவின் அணுஆயுத விவகாரத்தில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும்” என்றார்.டிரம்பை சந்தித்த பிறகு ஜின்பிங்கும், அமெரிக்காவை  பாராட்டி பேசினார்.அவர் கூறும்போது, “அணு ஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்காவும், சீனாவும் ஒத்துழைத்து செயல்பட முடிவு செய்துள்ளன. அதேநேரம், வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவேண்டியதன் அவசியம் குறித்தும் டிரம்பிடம் எடுத்துக் கூறினேன்” என்றார்.

Share
Categories
அமெரிக்கா உலகம் தலைப்புச் செய்திகள் ரஷ்யா

ஜி-20 : டிரம்ப் – புடின் முதல்முறையாக சந்திப்பு

ஜி-20 உச்சி மாநாட்டின்போது முதன்முறையாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரஷிய அதிபர் விளாடிமிர் புடினைச் சந்தித்து கைகுலுக்கி தனது மகிழ்ச்சியை பரிமாறி கொண்டார்.

ஜெர்மனி நாட்டின் ஹம்பர்க் நகரில் ஜி-20 மாநாடு இன்று தொடங்குகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ரஷிய அதிபர் விளாடிமிர் புடின், துருக்கி அதிபர் தையீப் எர்டோகன், இந்திய பிரதமர் மோடி உள்பட பலநாட்டு தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள். ஜெர்மனி வேந்தர் ஏஞ்சலா மெர்கல் மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.

வெள்ளியன்று அமெரிக்க ஜனாதிபதி டோனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்  இரண்டு மணிநேரங்களுக்கு மேலாக சந்தித்தனர் – இரு நாடுகளுக்கு இடையிலான பல்வெறு விவகாரங்கள் குறித்து விவாதித்தனர்.

வெளியுறவு விவகாரங்களில் இருந்து அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு விவகாரம் வரை, பல விஷயங்களைப் பற்றியும் இரு தலைவர்களும் கலந்துரையாடினார்கள். அவர்களின் உரையாடல் திட்டமிடப்பட்ட 35 நிமிட நேரத்தைவிட கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேல் நீட்டப்பட்டது.

“ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும், மற்றும் அனைவருக்கும் சம்பந்தப்பட்ட நிறைய விஷயங்களை நாங்கள் நன்முறையில் எதிர்நோக்குகிறோம்,” என்று டிரம்ப் புட்டினுடனான அவரது சந்திப்பில் தெரிவித்தார்.

புடின் கூறும்போது: “உக்ரேன், சிரியா, சில இருதரப்பு பிரச்சினைகள் முதலான பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது”, என்றார்.

 

 

Share
Categories
அமெரிக்கா உலகம் தலைப்புச் செய்திகள் வட கொரியா

வடகொரியா சோதனை எதிரொலி: ஐ.நா. அவசரக் கூட்டம்; அமெரிக்க, தென் கொரிய படைகள் ஏவுகணையை எதிர்கொள்ளும் பயிற்சி

வடகொரியா நேற்று மேற்கொண்ட கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணை சோதனையின் எதிரொலியாக ஐ.நா. அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறது. மேலும், அமெரிக்க, தென் கொரிய படைகள் ஏவுகணையை எதிர்கொள்ளும் பயிற்சியை மேற்கொள்கின்றனர்.

ஆசிய நாடுகளில் ஒன்றான வடகொரியாவில் ஒரு குடும்பத்தின் ஆட்சி நடந்து வருகிறது. அதன் தலைவராக கிம் ஜாங் அன் பதவி வகித்து வருகிறார். அதன் அண்டை நாடான தென்கொரியாவில் பாதுகாப்புக்காக அமெரிக்கப் படைத்தளமும், படைவீரர்களும் இருக்கின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக அணுகுண்டு சோதனை, ஏவுகணை, ராக்கெட் என்ஜின், கண்டம் விட்டு கண்டம் பாயும் நவீன ஏவுகணை என பல்வேறு சோதனைகளை வடகொரியா நடத்தி வருகிறது. ஐ.நா.வின் பல்வேறு தடைகளையும் மீறி இந்த சோதனைகளை வடகொரியா நடத்துகிறது.

சமீபத்திய வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து எதிரிகளின் இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணையை சோதனை செய்தது வெற்றி பெற்றுள்ளதாகத் தெரிகிறது.

வடகொரியாவின் இந்த ஏவுகணையானது அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் வரை சுமார் 930 கி.மீ பாய்ந்து சென்று இலக்கை குறிவைத்து தாக்கக்கூடியது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து கூட்டு ஏவுகணை சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கொரியா தீபகற்ப பகுதியில் பதட்டமான சூழல் நிலவிவருகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்காவில் ஜனாதிபதி டிரம்ப் மற்றும் தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன் ஆகியோர் வடகொரியா விவகாரம் தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியிருந்த நிலையில், இந்த ஏவுகணை சோதனை நடைபெற்றுள்ளது உலக நாடுகளிடையே அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.

வடகொரியாவின் இத்தகைய செயலுக்கு அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், ஐ.நா. பொதுக்குழுவை அவசரமாக கூட்டவும் கோரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், ஐ.நா. அவசரக் கூட்டம் இன்று நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

Share
Categories
அதிபர் டிரம்ப் அமெரிக்கா அமெரிக்கா அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் இந்தியா உலகம் தலைப்புச் செய்திகள் பிரதமர் மோடி

அதிபர் டிரம்புடன் சந்திப்பு; பயங்கரவாத ஒழிப்புக்கு அதிக முக்கியத்துவம் : மோடி

இன்று (திங்கள்கிழமை) வெள்ளை மாளிகை சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது மனைவியுடன் இணைந்து பிரதமர் மோடியை வரவேற்றார்.

பிரதமர்  மோடி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் கூடிய பேச்சுவார்த்தை மற்றும் பிரதிநிதித்துவ-நிலை பேச்சுவார்த்தைகளை நடத்தியபின், “பயங்கரவாதத்தை ஒழிப்பதே இரு நாடுகளுக்கும் அதி முக்கியமான முன்னுரிமையாகும்”, என்றார்.

பின்னர் இருவரும் இணைந்து பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :

பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் தீவிரவாதமயமாக்கல் பற்றி நாங்கள் பேசினோம். இவ்விஷயத்தில் ஒத்துழைக்க ஒப்புக்கொண்டோம். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் மற்றும் பயங்கரவாதிகளின் பாதுகாப்பான புகலிடங்கள் ஒழிப்பு ஆகியவற்றில் எங்கள் ஒத்துழைப்பு முக்கிய பங்கு வகிக்கும்.

இச்சந்திப்பின் முன்பாக, ஹிஸ்புல் முஜாஹிதீன் என்ற பயங்கரவாதக் குழுவின் தலைவரான சையத் சலாஹூடினை ஒரு உலகளாவிய பயங்கரவாதி என்று அமெரிக்க அரசுத்துறை அறிவித்தது. இதன் மூலம், பாக்கிஸ்தானில் இருந்து வெளிவரும் எல்லை கடந்த பயங்கரவாதத்திற்கு எதிரான அதன் நிலைப்பாட்டை இந்தியா உறுதிப்படுத்தியுள்ளது.

 

Share
Categories
அதிபர் டிரம்ப் அமெரிக்கா அமெரிக்கா உலகம் தலைப்புச் செய்திகள்

டிரம்பின் பயண தடை தொடர்பான நிறைவேற்று உத்தரவின் முக்கிய பாகங்களை சுப்ரீம் கோர்ட் அனுமதித்தது

திங்களன்று அமெரிக்க உச்ச நீதிமன்றம், அதிபர்  டிரம்ப் அறிவித்த, ஆறு பெரும்பான்மை முஸ்லீம் நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு பயணத் தடை ஏற்படுத்தும் உத்தரவின் முக்கிய பாகங்களை மீண்டும் நிலைநிறுத்தி உள்ளது. இது குறித்தான முழு வாதங்களையும் இலையுதிர் காலத்திலிருந்து (அக்டோபர் மாதம்) கேட்கப்படும் என்றும் கூறியது. இது அதிபர் டிரம்பின் நிர்வாகத்திற்குக் கிடைத்த வெற்றியாகப் பார்க்கப் படுகிறது.

முன்னதாக, டிரம்பின் இப்பயணத் தடை உத்தரவுகள் 9 வது சுற்று நீதிமன்றங்களினால் அனுமதி மறுக்கப்பட்டிருந்தன.

தீர்ப்பில், “ஒரு நற்பெயர் கொண்ட அமெரிக்கருடனோ அல்லது ஒரு அமெரிக்க  நிறுவனத்துடனோ சம்பத்தப்பட்ட நபர் ஒருவர் அகதி எனும் பெயரில் நாட்டுக்குள் நுழையும் போது  தடுக்கப்படுவதால் ஏற்படும்  கஷ்டங்களை சட்டபூர்வமாக  கூறுவதில் பிரச்சனையில்லை.” , என்று கூறப்பட்டிருந்தது.

மேலும், “இந்த தனிநபர்களையும், நிறுவனங்களையும் பொறுத்தவரை, நாம் பயண உத்தரவுகளைத் தடை செய்ய இயலாது. ஆனால் அமெரிக்க நாட்டுடன் எந்தவிதமான தொடர்பும் இல்லாத அகதிகளுக்கு, நாட்டினரின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு, நாம் அரசாங்கத்தின் ஆணையை   ஆதரிக்க வேண்டியிருக்கிறது”, என்றும் உச்ச நீதிமன்ற குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Share
Categories
அமெரிக்கா அமெரிக்கா அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் இந்தியா உலகம் ஐ.டி. தகவல் தொழில்நுட்பம் தலைப்புச் செய்திகள் தொழில் நுட்பம்

நியூயார்க் விசா மீறல் வழக்கில் இன்ஃபோசிஸ் $ 1 மில்லியன் அபராதம் செலுத்த சம்மதம்

நியூயார்க் மாகாண அட்டார்ணி ஜெனரல் எரிக் ஸ்னைடர்மேனுடன் இந்தியாவின் இன்ஃபோசிஸ்,  விசா மீறல் வழக்கில்  $ 1 மில்லியன் அபராதம் செலுத்த சம்மதம் தெரிவித்துள்ளது.

இத்தீர்வு இன்போசிஸ், அவுட்சோர்சிங் சேவைகளை வழங்கும் போக்கில், நியூயார்க் மாகாணத்திற்கு வெளிநாட்டு ஐடி பணியாளர்களை கொண்டுவந்து, தங்கள் விசாக்களின் விதிமுறைகளை மீறி பணியாற்றச் செய்ததாக அம்பலமான கூற்றுக்களை நிவர்த்தி செய்கிறது.

அட்டார்ணி ஜெனரல் மேலும், “இன்போசிஸ் நியூயார்க்கில் உள்ள அவர்களது வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு பொதுவாக நடைமுறையில் உள்ள ஊதியம் வழங்காமலும்,  வரி செலுத்தாமலும் இருந்து வந்துள்ளது” என்றும் குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறியதாவது:

நிறுவனங்கள்  நியூயார்க் மாகாணத் தொழிலாளர்களை வஞ்சிப்பதற்காக, எங்கள் சட்டங்களை மீறி நடக்க அனுமதிக்க மாட்டோம்.  தொழிலாளர்  சந்தை  நியாயமானதாகவும், நேர்மையான போட்டித்தன்மை உடையதாகவும், அனைவருக்கும் வெளிப்படையானதாகவும் இருக்கவேண்டும் என்பதை உறுதி செய்வதற்கு எனது அலுவலகம் கடமைப்பட்டுள்ளது.

அறிக்கையில் கூறப்பட்டுள்ல விவரப்படி, இன்போசிஸ் பணியாளர்களுக்கு B-1 விசாக்களைப் பெற்றுள்ளது. இது H-1B வேலை அனுமதிக்கு பதிலாக தற்காலிக பார்வையாளர் விசாக்கள் ஆகும். பார்வையாளர் விசாக்கள் மிகவும் எளிதாகப் பெறலாம்;  H-1B விசாக்களுக்கு  65,000 உச்ச அளவு இருப்பதுபோல B-1 விசாக்களுக்குக் கிடையாது.

 

 

Share
Categories
அதிபர் டிரம்ப் அமெரிக்கா அமெரிக்கா உலகம் தலைப்புச் செய்திகள் வட கொரியா

வட கொரிய சிறையிலிருந்து கோமா நிலையில் விடுவிக்கப்பட்ட மாணவர் ஓட்டோ மரணம் : வ.கொ. அரசுக்கு டிரம்ப் கண்டனம்

வட கொரிய சிறையிலிருந்து கோமா நிலையில் சென்ற வாரம் விடுவிக்கப்பட்ட 22 வயது மாணவர் ஓட்டோ வார்ம்பியர் சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்தார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப், வட கொரியாவில் கொடுங்கோலாட்சி நடக்கிறது என்று கண்டனம் தெரிவித்தார்.  இன்று வெள்ளை மாளிகையில் தொழில்நுட்ப தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் நடைபெற்ற சந்திப்பின்போது டிரம்ப் கூறியதாவது :

பல கெட்ட காரியங்கள் நடந்துள்ளன. ஆயினும் நாம் அவரை அவருடைய  பெற்றோருடன் சேர்த்துவைக்கும் அளவாவது முடிந்தது. அது ஒரு மிருகத்தனமான ஆட்சி. ஆயினும் நாம்மால் அதை கையாள முடியும்.

அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ரெக்ஸ் தில்லெர்சன் கூறுகையில், “ஓட்டோ வார்ம்பியர்  அநியாயமாக சிறையில் அடக்கப்பட்டதற்கு  அமெரிக்கா, வட கொரியாவையே பொறுப்பாளியாக்குகிறது” என்று குறிப்பிட்டார்.

 

Share