Categories
ஆரோக்கியம் இயற்கை மருத்துவம் உடல்நலம் மூலிகைகள்

மலச்சிக்கலைத் தீர்க்கும் தேநீர் வகைகள் – டான்டேலியன்

பொதுவாக முற்றத்தில் வளரும் களைச் செடியான டான்டேலியன் அதன் மருத்துவ குணங்களால் பண்டைக்காலத்திலிருந்தே
ஒரு மூலிகையாக கருதப்படுகிறது. ஹோமியோ மருத்துவத்தில் இது ஒரு சக்திவாய்ந்த டையூரிடிக் (Diuretic -சிறுநீர்ப் பெருக்கி)ஆக உபயோகப்படுத்தப் படுகிறது.

கல்லீரல் மற்றும் பித்த கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு தொற்றுநோய்களையும் சிகிச்சையளிப்பதற்காக பயன்படுத்தப்பட்டது.

இந்த இயற்கை மூலிகையை கொதிக்கும் தண்ணீரில் சேர்த்துமூலிகை தேநீராக குடிப்பதால் மலச்சிக்கலை குணமாக்க முடியும். டன்டேலியன் தேநீர், ஒரு லேசான மலமிளக்கியாகவும், நீர்ப்பிடிப்புக்கான ஒரு தீர்வாகவும் பயன்படுத்தப்படலாம். குடலின் இயக்கத்தை அதிகரிப்பதன் மூலம் மலச்சிக்கலைத் தடுக்கவும் பயன்படுகிறது.


Share
Categories
ஆரோக்கியம் இயற்கை மருத்துவம் உடல்நலம் மூலிகைகள்

மலச்சிக்கலைத் தீர்க்கும் தேநீர் வகைகள்

மனிதராகப் பிறந்த எல்லோருக்கும் சில தருணங்களில் ஏற்படும் உடல் கோளாறு மலச்சிக்கலாகும். மலச்சிக்கல் வருவதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. அதனைக் குணப்படுத்தவும் பல வழிகள் கையாளப்படுகின்றன.

சில மூலிகைகளிலிருந்து உருவாக்கப்படும் தேநீரைக் கொண்டும் மலச்சிக்கலைத் தீர்க்கலாம். அவைகளில் சிலவற்றைப் பார்க்கலாம்.

1) சென்னா மூலிகைத் தேநீர் (Senna Tea)

மலச்சிக்கலைத் தீர்க்கும் மிகச்சிறந்த,  சக்திவாய்ந்த மருந்து சென்னா தேநீராகும். இது இயற்கையாக கிடைக்கக்கூடிய மூலிகை தேநீராலான வலிமையான மூலிகை சிகிச்சை எனலாம். சென்னா தேநீர் மலச்சிக்கலில் இருந்து  உடனடி நிவாரணம் வழங்குவதாக அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

மருந்துக் கடைகளில் பிரஸ்கிரிப்ஷன் இல்லாமல் கிடைக்கும் இம்மூலிகையில், “சென்னா க்ளைஸ்கோசைட்ஸ் அல்லது சென்னோசைட்ஸ்” எனப்படும் சேர்மங்கள் உள்ளன. அவற்றின் வலிமையான இயற்கை மலமிளக்கி விளைவுகள் காரணமாக,  நவீன மருத்துவத்தில் மிகப் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன.

சென்னா மூலிகை தேநீர், ஆரோக்கியமான பெரியவர்களுக்கு பாதுகாப்பாக கருதப்பட்டாலும், இரண்டு வாரங்களுக்கு மேலாக உட்கொள்ளப்படக்கூடாது. அப்படி இரு வாரங்களுக்கு மேலாக உட்கொள்ளப்பட்டால், பல்வேறு பக்க விளைவுகள் உருவாக வழிவகுக்கும்.

 

Share
Categories
ஆரோக்கியம் உடல்நலம் காணொளி சிறப்புச்செய்தி மூலிகைகள்

புற்றுநோயைக் குணமாக்கும் தாவரங்கள்: 2

புற்றுநோய் நோயாளிகள் பல சமயங்களில் அலோபதியைத் தவிர்த்து, மாற்று சிகிச்சைகளைத் தேடுகின்றனர். குறிப்பாக மூலிகை வைத்தியத்தில்  இதற்கான மருந்துகள் உள்ளனவா என்று நோக்குகின்றனர்.

எஸ்ஸியக் தேநீர் (ESSIAC Tea) என்பது கனடாவில் உருவான, புற்றுநோய் சிகிச்சைக்கான ஒரு பிரபல மூலிகை சூத்திரம். இதனை உருவாக்கியவரின் பெயர் ரெனெ கெய்ஸ் (Rene Caisse).   ரெனெ கெய்ஸ் 1920-களில் நர்ஸ்-ஆக பணிபுரியும் சமயத்தில், ஒரு செவ்விந்திய பழங்குடி மருத்துவரிடமிருந்து புற்றுநோயைக் குணமாக்கும் மருந்தைப் பற்றி அறியவந்ததாக கூறியுள்ளார்.

எஸ்ஸியக் தேநீர் நான்கு தாவர பொருட்களின் கலவையை கொண்டுள்ளது:

1) ஷீப் சோறெல் (sheep sorrel) பொடி

ஷீப் சொறல்

2) பொடிசெய்யப்பட்ட வழுக்கும் எல்ம் மரப் பட்டை (slippery elm bark)

எல்ம் மரப் பட்டை

3) பர்டோக் வேர் (Burdock root)

பர்டோக் வேர்

4) வான்கோழி ரூபார்ப் (turkey rhubarb) பொடி.

டுர்கி ரூபார்ப்

இவற்றில் டுர்கி ரூபார்ப் மற்றும் வழுக்கும் எல்ம் மரப்பட்டை ஆகியன முக்கியமான பாரம்பரிய மூலிகை மருந்துகளாகும்.

ஏஸ்ஸியக் தேநீர் தயாரிக்க தேவையானவை

செய்முறை

6 ½ கப் பர்டோக் வேர் (பொடி) (மேல் இடது)

1 பவுண்டு ஷீப் சோறெல் (sheep sorrel) பொடி (மேல் வலது)

1/4 பவுண்டு, பொடிசெய்யப்பட்ட வழுக்கும் எல்ம் மரப் பட்டை (கீழ் இடது)

1 அவுன்ஸ் வான்கோழி ருபார்ப் வேரின் தூள் (கீழ் வலது)

 

இந்த பொருள்களை முழுமையாக கலந்து, இருண்ட உலர் அலமாரியில் கண்ணாடி குடுவைகளில் சேமித்து வைக்கவும்.

ஒரு அளவிடும் கப் எடுத்து, நீங்கள் செய்ய வேண்டிய அளவைப் பொறுத்து,  32 அவுன்ஸ் தண்ணீருக்கு 1 அவுன்ஸ்  மூலிகை கலவை என்ற விகிதத்தில் அளந்து பயன்படுத்த வேண்டும்.

பொதுவாக 1 கப் மூலிகைக் கலவையுடன் 8 x 32 = 256 அவுன்ஸ் தண்ணீர் பயன்படுத்தலாம். 10 நிமிடங்கள் (மூடி) கடினமாக கொதிக்க வைத்து, பின் வெப்பத்தை அணைக்கவும். பின்னர் அந்த சூடான தட்டைல் அடுத்த நாள் காலை வரை அப்படியே மூடி வைத்திருக்கவும்.

காலையில் மீண்டும் ஆவி வரும்வரை சூடாக்கிய பின் ஒரு சில நிமிடங்கள் ஆறவிட்டு, பின்னர் சூடான சுத்திகரிக்கப்பட்ட பாட்டில்களில் நன்றாக வடிகட்டி ஆறவைக்கவும். இருண்ட குளிர் அலமாரியில் சேமிக்கவும். இந்த பாட்டிலை உபயோகிக்கத் திறந்தால், பின்னர்  குளிரூட்டப்பட (refrigerated) வேண்டும். இறுதியாக இருப்பவற்றை ஒரு பெரிய ஜாடியில்  ஊற்றி, இரவு முழுவதும் ஒரு குளிர்சாதன பெட்டியில் வைத்தபின்,  படிவுகள் ஏதும் இல்லாத திரவத்தை தனித்தனி பாட்டில்களில் ஊற்றவும்.

 

எஸ்ஸியாக் தேநீர் பல்வேறு வகையான நாள்பட்ட புற்றுநோய் மற்றும் வேறு நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கும், சிறந்த இயற்கைமுறை நச்சுநீக்கத்திற்கும்  பயன்படுகிறது.

ஆயினும், ரெனே கெய்ஸின் எஸ்ஸியாக் தேநீர் மருந்து இதுவரை எந்த FDA- அங்கீகாரம் பெற்ற மருத்துவ ஆய்வுகளில் இடம் பெறவில்லை. இது புற்று நோய் அல்லது நிலைமையைத் தணிக்கிறது அல்லது தடுக்கிறது என்று முழுமையாக நிருபிக்கப் படவில்லை. ஆனால் பலரும், இதனை உபயோகித்தபின்னர் குணமடைந்திருப்பதாக கூறியுள்லனர். ஆகவே இந்த மாற்று மூலிகை மருந்தை எடுப்பதற்கு முன் உங்கள் டாக்டரிடம் ஆலோசித்து செய்வது நல்லது.

 

 

Share
Categories
உடல்நலம் சிறப்புச்செய்தி மருத்துவ ஆய்வு மூலிகைகள்

புற்றுநோயைக் குணமாக்க உதவும் தாவரங்கள் : 1

சில தாவரங்களில் இருந்து புற்று நோயைக் குணமாக்கும் மருந்துகள் எடுக்கப்படுகின்றன என்பது பலரும் அறிந்த விஷயம்தான். ஆனால், ஒரு தாவரத்திலிருந்து மருந்து எடுக்கப்படும் செயல்முறையை உருவாக்கவும், பல நிலைகளில் சோதனை செய்து இறுதியில் அதனை மருந்தாக விற்கவும் எடுத்துக் கொள்ளப்படும் காலம் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகும், என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

புற்றுநோய் என்பது என்ன ?

உடலிலுள்ள உயிரணுக்கள்ளான செல்களில் துவங்கும் பல ஒன்றுக்கொன்று சம்பந்தமுடைய நோய்களின் தொகுப்பே புற்று நோய் ஆகும். உடலானது பல வகையான செல்களால் உருவாக்கப்பெற்றது. இயல்பாகவே உடலில் உள்ள செல்கள் வளர்ந்து பிரிந்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தேவையான அளவுக்கு பல செல்களை உருவாக்குகிறது. சில வேளைகளில், உடலுக்குத் தேவையற்ற பல புதிய செல்கள் தோன்றுகின்றன. உடலில் உள்ள பழைய வயதடைந்த செல்கள், இறக்க வேண்டிய நேரத்தில் இறந்து வெளியேறாமல் உடலிலேயே மிகுபடுகின்றன. இவ்வாறான அதிகப்படியான செல்கள், வளர்ச்சி (growth) அல்லது கழலை (Tumor) எனப்படும் திசுக்களின் கூட்டை ஏற்படுத்துகிறது.

கழலைகள் தீங்கில்லா கழலைகள் (benign tumours) மற்றும் கேடுவிளைவிக்கும் கழலைகள் (malignant tumours) என இருவகைப்படும்.

தீங்கில்லா கழலைகள் புற்றுநோய் அல்ல. அவற்றை பொதுவாக உடலிலிருந்து நீக்கி விடலாம். பெரும்பாலான நிகழ்வுகளில் அவற்றை நீக்கிய பின்பு, மீண்டும் தோன்றுவது இல்லை. தீங்கில்லா கழலைகளில் உள்ள செல்கள் மற்ற உடல் பகுதிகளுக்கு பரவுவதில்லை.

கேடு விளைவிக்கும் கழலைகள் என்பவை புற்று நோயாகும். கேடு விளைவிக்கும் கழலையில் உள்ள செல்கள் இயல்புக்கு மாறாகவும் எந்த கட்டுப்பாடுமின்றியும் பிரிவுற்று பெருகும். இப்படி ஏற்பட்ட புற்றுநோய் செல்கள் இதனை சுற்றியுள்ள திசுக்களுக்குள் சென்று அவற்றை அழித்துவிடும். புற்றுநோய் செல்கள் கேடு விளைவிக்கும் கழலைகளை உடைத்துக் கொண்டு அங்கிருந்து இரத்த ஓட்டம் அல்லது நிணநீர் மண்டலத்துக்குள் நுழைந்துவிடும்.

செல்கள் எதனால் இயல்புக்கு மாறாக கட்டுப்பாடின்றி பிரியத் துவங்குகிறது என்பது இதுவரைத் துலக்கமாக கண்டறியப்படவில்லை. ஆனால் மரபியல், சுற்றுச்சூழல் அசுத்தங்கள் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்புகள் ஆகியன முக்கிய காரணங்களாக கருதப்படுகின்றன.

புற்று நோய்க்கு சிகிச்சையளிப்பது எப்படி?

அறுவைசிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சைமுறை (ரேடியேஷன் தெரப்பி), வேதி மருத்துவம் (கீமோதெரப்பி), ஹார்மோன் மருத்துவம் மற்றும் உயிரியல் மருத்துவம் போன்றவை புற்றுநோய் சிகிச்சைகளில் அடங்கும். புற்றுநோயின் வகை, பாதிப்படைந்த இடம், நோயின் பரவும் தன்மை, நோயாளியின் வயது மற்றும் பொது உடல் நலம் மற்றும் பிற காரணிகளைப் பொறுத்து மேற்கூறிய ஒன்று அல்லது பல மருத்துவமுறைகளை பயன்படுத்தி மருத்துவர் சிகிச்சை அளிப்பர்.

பசுமை கீமோதெரப்பி

இவற்றுள், கீமோதெரப்பியில் தாவரங்களிலிருந்து பெறப்படும் மருந்துகள் பயன்படுத்தப் படுகின்றன.

இந்த சக்திவாய்ந்த கலவைகள் பொதுவாக விரைவாக பிரியும் செல்களைத் தாக்குகின்றன. இந்த டாக்ஸின்கள் பொதுவாக புற்றுநோய் கழலைகளை இலக்காகக் கொண்டிருந்தாலும்,  சிலசமயம் முடியை உருவாக்கும் சுரப்பிகளைப் போன்ற நல்ல செல்களையும் தாக்குகின்றன, இதனால் தற்காலிக முடி இழப்பு ஏற்படுகிறது.

பசிபிக் யூ (Pacific yew) என்ற தாவரத்தில் இருந்து எடுக்கப்படும் பக்ளிடேக்ஸெல் (Paclitaxel – Taxol) என்ற  கருப்பை புற்றுநோயைக் குணப்படுத்தப்  பயன்படுத்தப்படும் மருந்து உருவாக்கப்படுகிறது. இம்மருந்து புற்றுநோய் செல்களின் விகிதங்களை வெகுவாக குறைக்கிறது.  வட அமெரிக்காவில் கிடைக்கும், அமெரிக்கன் யூ-வும் (taxus canadensis) பக்லிடாக்சல் மருந்து உருவாக்க பயன்படுத்தப்படுகிறது.

 

ரோசி பெரிவிங்கிள் (rosy periwinkle) என்ற தாவரத்திலிருந்து எடுக்கப்படுக் வின்கிரிஸ்டைன் (Vincristine)   மற்றும் வின்பிளஸ்டைன் (vinblastine) மருந்துகள்  குழந்தை பருவ லுகேமியா (leukemia) சிகிச்சையில் வெற்றிகரமாக பயன்படுத்தப்படுகின்றன.

 

 

 

சீனாவில் வளரும் “ஹேப்பி ட்ரீ” (கேம்ப்டொத்கா அகுமினாட்டா), என்ற மரத்திலிருந்து எடுக்கப்படும்  காம்ப்டோடைசின் (Camptothecin) என்ற மருந்து சீனாவில் இரைப்பை குடல் புற்றுநோயைப் பயன்படுத்த பயன்படுத்தப்படுகிறது.

 

 

 

மேலும் மேயாப்பிள்(mayapple) என்றழைக்கப்படும் ஒரு உள்ளூர் காட்டு மலர் விரைவில் நுரையீரல் மற்றும் விரைப் புற்றுநோய்களுக்கான, தற்போது சோதனையிலுள்ள  எடோபாஸைடு (etoposide) என்ற மருந்துக்குத் தேவையான பாடோபிளைலோடாக்சினை (podophyllotoxin) உருவாக்க பயன்படுகிறது.

தொடரும்

 

Share
Categories
உடல்நலம் மூலிகைகள்

நலம் தரும் மூலிகைகள் : 4 – டி மர எண்ணெய் & சென் ஜான்ஸ் வர்ட்

டி மர எண்ணெய் (Tea Tree Oil)

ஆஸ்திரேலியாவில் வளரும் டி (Melaleuca alternifolia) மரத்தின் கிளைகளிலிருந்தும் இலைகளிலிருந்தும் எடுக்கப்படும் டி மர எண்ணெய், அத்தியாவசிய எண்ணெய்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

இது ஒரு சக்தி வாய்ந்த ஆண்டிசெப்டிக் ஆகும். மேலும், காயங்களை சுத்தம் செய்வதற்கும் இதனைப் பயன்படுத்தலாம். இந்த எண்ணெய் வைரஸ், பாக்டீரியா மற்றும் ஒட்டுண்ணிகளை எதிர்க்கும்  பண்புகளைக் கொண்டுள்ளது.

டி மர எண்ணெயால் படர்தாமரை நோயையும் , சொறி, முகப்பரு, தோல் அழற்சி போன்ற தோல் வியாதிகளையும் குணமாக்க முடியும்.

இதனை வாயில் விழுங்கினால் விஷமாகும். ஆகவே, வெளி உபயோகத்திற்கு மட்டும் இந்த எண்ணெய் பயன்படுகிறது.

 

 

சென் ஜான்ஸ் வர்ட் (St John’s wort)

சென் ஜான்ஸ் வர்ட் பொதுவாக ஐரோப்பாவின் காட்டுப்புற வெளிகளில் சாதாரணமாக வளரும் தாவரமாகும்.  இது மன அழுத்தம், பதட்டம் மற்றும் நரம்பு வலி ஆகியவற்றுக்கு நிவாரணியாகப்  பயன்படுகிறது.

மேலும், இதிலிருந்து எடுக்கப்பட்ட சிவப்பு நிற எண்ணெய் புண்களைக் குணமாக்கும்  என்றும் கூறப்படுகிறது. ஆன்டிபயோட்டிக் குணங்களும் இதில் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.

புற்று நோய் எதிர்ப்பு மருந்து, சைக்ளோபாஸ்பாமைடு உள்ளிட்ட பிற மருந்துகளின் செயல்பாட்டில்  சென் ஜான்ஸ் வர்ட் குறுக்கிடும் வாய்ப்பு இருப்பதால், இதனை எடுத்துக்கொள்வதற்கு முன்பு,  உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்.

ஒரு மாதத்திற்கும் மேலாக அதைப் பயன்படுத்தினால், விலகல் அறிகுறிகளை இந்த மூலிகை ஏற்படுத்தும். ஆகவே நோய் ஒரு மாதத்திற்கும் அதிகமாக தொடர்ந்தால், மருத்துவரை ஆலோசிப்பது நல்லது.

 

Share
Categories
உடல்நலம் மூலிகைகள்

நலம்தரும் மூலிகைகள் : 3 – ஜிங்கோ, ஜின்செங் & இஞ்சி

ஜிங்கோ

இது சீனாவில் வளரும் ஒரு மரத்தின் இலைகளிலிருந்து வருகிறது.
இரத்த ஓட்டம் அதிகரிக்கவும், உடலின் இரத்த சுழற்சியை மேம்படுத்தவும் இது உதவுகிறது. ஜிங்கோ பிலோபா (Ginkgo biloba) – விலிருந்து எடுக்கப்படும் சாற்றில் ஃப்ளேவனாய்டு மற்றும் டெர்பனாய்டு ஆகியன எதிர்-ஆக்ஸிடன்ட் (antioxidant) குணங்கள் கொண்டுள்ளன. இதன் காரணமாக, ஜிங்கோவினால் ஞாபகசக்தி அதிகரிக்கக்கூடும்.  இதற்கு இரத்தத்தைச் சன்னமாக்கும் (Blood thinner) பண்பும் உண்டு. ஆயினும், ஜிங்கோவினால்  எப்போதாவது மூக்கில் இரத்தப்போக்கு ஏற்படலாம்.

ஜின்செங்

ஜின்ஸெங் உலகிலேயே மிகவும் பிரபலமான மூலிகை மருந்துகளில் ஒன்றாகும். இது நூற்றாண்டுகளாக ஆசியா மற்றும் வட அமெரிக்க நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பூர்வீக அமெரிக்கர்கள் இதனை செயல் ஊக்கியாகவும்,  தலைவலி நிவாரணியாகவும் பயன்படுத்தினர். மேலும்  கருவுறாமை, காய்ச்சல் மற்றும் அஜீரணத்துக்கான சிகிச்சைகளுக்காகவும் பயன்படுத்துகின்றனர். இன்று, தோராயமாக 6 மில்லியன் அமெரிக்கர்கள் நிரூபிக்கப்பட்ட ஜின்ஸெங் நன்மைகளால் இதனை தொடர்ந்து பயன்படுத்துகின்றனர். மன மற்றும் உடல் சோர்வை நீக்கவும் தடுக்கவும் உதவுகிறது; ஜலதோஷத்தின் தீவிரத்தன்மையைக் குறைப்பதற்கான நிவாரணியாகவும், அடிக்கடி ஜலதோஷம் வராமலும் தவிர்க்கப் பயன்படுகிறது. ஆண்களின் விறைப்புத்தன்மை (Erectile dysfunction) குறைவைச் சரியாக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

ஜின்செங் கடைகளில் அதிக அளவில் கலப்படம் செய்யப்பட்டு விற்கப்படுவதால், வாங்கும் போது தரமான, கலப்படம் இல்லாததாக தெரிந்தெடுத்து வாங்குதல் நலம்.

இஞ்சி

இஞ்சிச் செடியின் வேர், சாறுகள் மற்றும் எண்ணெய்களை தயாரிக்க பயன்படுகிறது.
இதனை நேரடியாகவும் சாப்பிடலாம்.  இஞ்சி குமட்டலைத் தடுக்க உதவுகிறது, மேலும் வயிற்றுப்புண்களுக்கு எதிராகவும் வயிற்றைப் பாதுகாக்கிறது.

இஞ்சியில் வலி நிவாரணிக்குரிய பண்புகளும் உள்ளன. ஆயினும், பித்தக்கற்களால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை  பயன்படுத்தப்படக்கூடாது.

 

 

 

 

 

 

Share
Categories
உடல்நலம் மூலிகைகள்

நலம் தரும் மூலிகைகள் : 2 – ஆறுமணிப்பூ எண்ணெய் & ஃபிவர்ஃபியூ

ஆறுமணிப்பூ எண்ணெய் மற்றும் ஃபிவர்ஃபியூ ஆகியவற்றின் மருத்துவ பயன்களைப் பற்றி பார்க்கலாம்.

3) ஆறுமணிப்பூ எண்ணெய் (Evening Primrose Oil)

ஆறுமணிப்பூ என்பது மாலையில் மலரும் மலைப்பூ வகையைச் சார்ந்தது. இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் காம்மா லினெலோனிக் அமிலத்தைக் (Gamma Linelonic Acid) கொண்டுள்ளது. இவ்வமிலம் ஒமேகா-6 கொழுப்பின் ஒரு வகையாகும். இதனால் மூட்டுக்களில் ஏற்படும் விறைப்பினை குறைக்க இயலும்.

மேலும் இதனால் மூளையின் ஆற்றல் மற்றும் ஒருமித்த கவனம் ஆகியவற்றை அதிகரிக்கவும் முடியும் என் கருதப்படுகிறது.

ஆறுமணிப்பூ எண்ணெயின் முக்கியமான சில பயன்கள் :

  1. ஹார்மோன்களை சீரான நிலையில் வைத்திருக்க பயன்படுகிறது.
  2. முகப்பரு தொல்லையில் இருந்து விடுபட உதவுகிறது. ஹார்மோன்கள் சீரான நிலையில் இல்லாமல் இருப்பது முகப்பரு உருவாவதன் முக்கியமான காரணங்களில் ஒன்று.  ஆறுமணிப்பூவிலுள்ள ஒமேகா-6 கொழுப்புக்கள்  ஹார்மோன்களை சீராக்குவதால் முகப்பருக்களை குணமாக்க முடியும்.
  3. முடி கொட்டுவதை குறைக்க உதவுகிறது.
  4. தோல் நோய்களான தோல் அழற்சி, சோரியாஸிஸ் போன்றவற்றைக் குணப்படுத்த உதவுகிறது.
  5. முடக்கு வாதத்தைக் குணப்படுத்தவும் பயன்படுகிறது.

4) ஃபிவர்ஃபியூ (Feverfew)

ஃபிவர்ஃபியூ (Feverfew) என்பது ஐரோப்பாவில் வளரும் சிறிய பூ வகையாகும். இதன் பூக்களும் இலைகளும் மூலிகை மருத்துவத்தில் பயன்படுகின்றன.

இச்செடியின் புதிய இலைகளை எடுத்து உண்பதால் ஒற்றைத் தலைவலியை குறைக்க முடியும்.

காய்ச்சல் மற்றும் மாதவிடாய்  ஆகியவற்றால் உண்டாகும் வலியைக் குறைக்கவும் ஃபிவர்ஃபியூவைப் பயன்படுத்தப்படலாம். ஆனால், சிலசமயம் இது குமட்டல் மற்றும் வாந்தியை உண்டாக்கலாம். கர்ப்பிணி பெண்கள் இதனை உட்கொள்ளக் கூடாது.

Share
Categories
உடல்நலம் மூலிகைகள்

நலம் தரும் மூலிகைகள் : 1 – புதினா & எகினெசியா

மூலிகை மருத்துவம் தொன்றுதொட்டு நம் இந்திய நாட்டிலும் உலகில் பல இடங்களிலும் நடைமுறையில் உள்ளது. தீக்காயம், வயிற்றுப்புண், வாயுத்தொல்லை, தூக்கமின்மை முதலான பல நோய்களையும் தீர்க்க பயன்பட்டு வருகிறது.

இந்த தொடரில், நம் உடல்நலனுக்கு உபயோகமாகும் சில மூலிகைகளைப் பற்றி பார்க்கலாம்.

1) புதினா

 

புதினா மிகவும் பிரசித்தி பெற்ற மூலிகை. புதினா இலையைக் கொண்டு தயாரிக்கப்பட்ட டீ-யை குடிப்பதால் வலி, வாயுத்தொல்லை, அஜீரணம் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் பெற முடியும். இம்மூலிகையால் மாதவிடாய் வலி நிவாரணமும் பெற முடியும். புதினா செடியிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயைக் கொண்டு ஆவிபிடிப்பதால் இழுப்பு, ஆஸ்த்மா, லாரிஞ்சைட்டிஸ் போன்ற நோய் உடையவர்களுக்கு நிவாரணம் கிடைக்கச் செய்யலாம். மேலும் இது இரத்தத்திலிருந்து சிறுநீரைப் பிரிக்கவும் (diuretic) உதவுகிறது.

 

2) எகினெசியா (ECHINACEA)

எகினெசியா அல்லது ஊதா நிற டெய்சி பூ என்று அழைக்கப்படும் இம்மூலிகை அமெரிக்காவில் அதிகமாக வளர்கிறது. இதன் வேரிலிருந்து எடுக்கப்படும் மருந்துகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், தொற்று நோய்களைக் குணமாக்கவும் பயன் படுகிறது.

இதிலிருந்து உருவாக்கப்படும் கஷாயம் குளிர் நடுக்கம், வயிற்றுப்புண், காய்ச்சல், டான்சில்ஸ் நோய் ஆகியவற்றை குணப்படுத்தும்.  இதனை வாய்கழுவியாகவும் (mouthwash) உபயோகிக்கலாம்.

மேலும் இதனை இரத்தவிஷ நோயைக் குணப்படுத்தவும், வலி நிவாரணியாகவும், குமட்டலை சரியாக்கவும் வெறு சில மருந்துவ முறைகளிலும் உபயோகிக்கிறார்கள்.

 

 

Share