Categories
இந்தியா குடியரசு தலைவர் ஜி.எஸ்.டி. தலைப்புச் செய்திகள் பொருளாதாரம் மோடி

புதிய ஜி.எஸ்.டி வரிவிதிப்பு: பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி தொடங்கி வைத்தனர்

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதமர் மோடி இன்று (வெள்ளிக் கிழமை) நள்ளிரவு பாராளுமன்றத்தில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் தொடங்கி வைத்தனர்.

நம் நாட்டில் தற்போது இருக்கும் உற்பத்தி வரி, விற்பனை வரி என்ற பல்வேறு விதமான மறைமுக வரிகளுக்கு மாற்றாக, நாடு முழுவதும் ஒரே சீரான வரியான சரக்கு, சேவை வரி என்ற புதிய ஜி.எஸ்.டி. வரி  மத்திய அரசு முடிவு செய்தபடி, ஜூலை 1-ந் தேதி (இன்று) முதல் நாடு முழுவதும்  அமல்படுத்தப்பட்டது.

பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தின் நடைபெற்ற இந்த விழாவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி முன்னிலை வகித்தார். பாராளுமன்றத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு ஜிஎஸ்டி அறிமுக கூட்டம் தொடங்கியது.  முதலில்  மத்திய மந்திரி அருண் ஜெட்லி  ஜி.எஸ்.டி குறித்து உரையாற்றினார். அவரை தொடர்ந்து  பிரதமர் மோடி ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையை தொடங்கி வைத்து உரையாற்றினார். இறுதியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் ஜிஎஸ்டி குறித்து சிறப்பு உரையாற்றினார்.

அதனைதொடர்ந்து மணியடித்து ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி இணைந்து தொடங்கி வைத்தனர். நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பு முறையான ஜிஎஸ்டி அமலுக்கு வந்தது.

ஜி.எஸ்.டி. தொடர்பாக பிரதமர் மோடி தனது உரையில் கூறியதாவது:

இன்று நள்ளிரவில் நாட்டின் எதிர்கால பாதையை முடிவு செய்ய இருக்கிறோம். இந்திய வரலாற்று நிகழ்விற்கு நாட்டின் 120 கோடி மக்களே சாட்சி. நாட்டின் கூட்டாச்சி தத்துவத்திற்கு இது ஒரு சிறந்த உதாரணமாக உள்ளது. இந்த முடிவு எடுப்பதற்காக பல்வேறு தரப்பினரின் உழைப்பு, அர்பணிப்பு இடம்பெற்று இருக்கிறது. நமது எல்லோரது முயற்சிக்கு கிடைத்த வெற்றி.

முதலில் மாநிலங்களுக்கு நிறைய சந்தேகங்கள் இருந்தது. தொடர்ந்து ஆலோசித்து வந்ததையடுத்து, அது தற்போது நீக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து முயற்சித்தால் எந்த ஒரு பொருளும் கிடைக்காமல் போகாது. சர்தார் வல்லபாய் பட்டேல் 500 பகுதிகளை சேர்த்து ஒரு தேசமாக காட்டினார்.

அதுபோலத்தான் பல்வேறு வரிகள் சேர்ந்து, ஜிஎஸ்டியாக உருவாகி உள்ளது. ஒரு பொருளின் தயாரிப்பு விலை ஒன்றாக இருக்கும், மாநிலத்திற்கு மாநிலம் அது மாறுபட்டு இருக்கும். ஜிஎஸ்டி வரியால்,அந்த நிலை மாறி, தேசம் முழுவதும் ஒரே வரியாக இருக்கும்.

மேலும் அவர் கூறுகையில், ஊழல்,கருப்பு பணத்தை ஒழிக்கவும் , அதிகாரிகள் தொந்தரவு குறையவும், வியாபாரத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை நீக்கவும் ஜி.எஸ்.டி. உதவும் என்றார்.

 

Share
Categories
இந்தியா உலகம் சுவிட்சர்லாந்து தலைப்புச் செய்திகள் பொருளாதாரம்

கறுப்பு பணம்: இந்தியாவுடன் தகவல்களை தானியங்கிப் பகிர்வு செய்ய சுவிட்சர்லாந்து ஒப்புதல்

இந்தியாவுடன் கறுப்புப் பணம் குறித்த தகவல்களை தானியங்கிப் பகிர்வு செய்ய சுவிட்சர்லாந்து ஒப்புதல் அளித்துள்ளது. 2018-ல் இத்தானியங்கிப் பகிர்வு செயலாற்றத் துவங்கும். இருப்பினும் கறுப்புப் பணம் பற்றிய விவரங்கள் முதலாவதாக 2019 வாக்கிலே பரிமாறப்படும் என்று தெரிகிறது. தகவல் பரிமாற்றத்தின்போது  இரகசியத்தன்மை மற்றும் தரவு பாதுகாப்பு ஆகியன கண்டிப்பாக பின்பற்றப்படவேண்டும் என்றும் சுவிட்சர்லாந்து வலியுறுத்தியுள்ளது.

வரி விஷயங்களில் தானியங்கி தகவல் பரிமாற்றத்திற்கான உலகளாவிய மாநாடு, AEOI அறிமுகப்படுத்தப்படுவதைத் தொடர்ந்து அனுப்பப்பட்ட செய்தி குறிப்பில் சுவிஸ் கூட்டாட்சி கவுன்சில் இவ்வாறு கூறியுள்ளது.

தானியங்கிப் பகிர்வு எப்பொழுது துவங்கும் என்ற தகவலை சுவிஸ் கூட்டாட்சி கவுன்சில் இந்திய அரசுக்கு விரைவில் தெரிவிக்கும்.

வெள்ளிக்கிழமை கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட இம்முடிவு, வேறெந்த வாக்கெடுப்புக்கும் உட்பட்டதல்ல. ஆகவே, இதனைச் செயல்படுத்தலில் நடைமுறை தாமதம் எதுவும் இராது என்று கருதப்படுகிறது.

Share
Categories
இந்தியா பொருளாதாரம்

ஜனவரி முதல் மார்ச் வரை இந்திய பொருளாதார வளர்ச்சி 6% ஆனது

மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலின்படி ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 6.1 சதவீதமாக குறைந்துள்ளது. இது சென்ற  அக்டோபர்-டிசம்பர் காலாண்டின் 7.0 சதவீத வளர்ச்சியைவிட குறைந்துள்ளது. இதற்கு சென்ற ஆண்டு நவம்பரில் துவக்கப்பட்ட பணமதிப்பு நீக்கமே முக்கிய காரணமாயிருக்கலாம் என்று கருதப்படுகிறது.  இதனால் உலகிலேயே மிக வேகமாக வளரும் பொருளாதாரம் என்ற நிலையை இந்தியா இழந்துவிட்டது.

இருப்பினும், 2016-17 நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 7.1 சதவீதமாக மாறாமல் இருந்தது. இதன் மதிப்பு 7.6 ஆக உயரும் என்று எதிர்பார்க்கப் பட்டிருந்தது.

நான்காவது காலாண்டில் நிதி சேவைகள் துறை ஒற்றை இலக்க வேகத்தில் வளர்ச்சியுற்ற நிலையில், கட்டுமானத் துறை ஒரு பெரும் சுருக்கத்தை பிரதிபலித்தது.

Share