Categories
டில்லி தமிழகம் தலைப்புச் செய்திகள் விவசாயிகள் போராட்டம்

எங்கள் உயிருக்கு ஏதாவது ஏற்பட்டால் அதற்கு எச். ராஜாதான் பொறுப்பு: அய்யாக்கண்ணு

டெல்லியில் போராடிவரும் தமிழக விவசாயிகள் போராட்டத்தை கைவிடாவிட்டால் இரவு தூங்கும் போது லாரியை ஏற்றி கொலை செய்து விடுவோம் என்று கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக விவசாயிகளின் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.

பயிர்க்கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கடந்த 16-ந்தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மத்திய-மாநில அரசுகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக அவர்கள் ஒவ்வொரு நாளும் நூதன முறையில் போராட்டம் நடத்துகிறார்கள்.

இந்நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட மனைவியை பார்ப்பதற்காக அய்யாக்கண்ணு நேற்றிரவு திருச்சி வந்தார். இன்று காலை டெல்லி புறப்படுவதற்கு முன்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 11-ந்தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். எங்களது போராட்டத்திற்கு பா.ஜனதாவை தவிர மற்ற கட்சிகள், அமைப்பினர் ஆதரவு தருகின்றனர். போராட்டத்தை முறியடிக்க பா.ஜ.க.வினர் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் தமிழகத்தை சேர்ந்த பா.ஜ.க.வினர் செல்போன் மூலம் பேசி தமிழகத்திற்கு வருமாறு எங்களை மிரட்டுகின்றனர். தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டு முன்பு போராட்டம் நடத்துங்கள் என்கின்றனர். போராட்டத்தை கைவிடாவிட்டால் டெல்லியில் இரவு தூங்கும் போது லாரியை ஏற்றி கொலை செய்து விடுவோம் என்று மிரட்டல் விடுக்கின்றனர்.  திருச்சியை சேர்ந்த பா.ஜனதா பிரமுகர் ஒருவரும் மிரட்டல் விடுத்துள்ளார். மிரட்டல் விடுத்தவர்களின் செல்போன் எண்களை வைத்து டெல்லி பாராளுமன்ற போலீசில் புகார் செய்துள்ளோம். திருச்சியை சேர்ந்த பா.ஜனதா பிரமுகர் மீது திருச்சி போலீசில் புகார் செய்ய உள்ளோம்.

பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா எங்களது போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசி வருகிறார். நான் (அய்யாக்கண்ணு) ஆடி கார் முன்பு நிற்பது போன்றும், 5 ஸ்டார் ஓட்டலில் செல்போனில் பேசியவாறு சாப்பிடுவது போன்றும் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

எங்கள் உயிருக்கு ஏதாவது ஏற்பட்டால் அதற்கு எச். ராஜாவே பொறுப்பு

இவ்வாறு அய்யாக்கண்ணு கூறியுள்ளார்.

 

Share
Categories
இந்தியா டில்லி தமிழகம் தலைப்புச் செய்திகள் போராட்டம் விவசாயிகள் போராட்டம்

தமிழக விவசாயிகள் பாதி மொட்டை அடித்துப் போராட்டம்

டெல்லியில் கடந்த ஏழு நாட்களாக போராட்டம் நடத்திவரும் தமிழக விவசாயிகள், இன்று பாதி மொட்டை அடித்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள்.

பயிர்க்கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கடந்த 16-ந்தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு  வருகிறார்கள். மத்திய-மாநில அரசுகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக அவர்கள் ஒவ்வொரு நாளும் நூதன முறையில் போராட்டம் நடத்துகிறார்கள். நேற்று முன்தினம் விவசாயிகள் தங்களை தாங்களே துடைப்பத்தால் அடித்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா விவசாயிகளை நேரில் சந்தித்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.

விவசாயிகளின் போராட்டம் நேற்று 7-வது நாளாக நீடித்தது. நேற்று விவசாயிகள் பாதி மொட்டை அடித்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜந்தர் மந்தர் பகுதியில் சிறிது தூரம் ஊர்வலமாக சென்ற அவர்கள், மத்திய-மாநில அரசுகளுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினார்கள்.

போராட்டத்துக்கு தலைமை தாங்கிய தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு கூறுகையில், விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மத்திய-மாநில அரசுகள் முன்வரவில்லை என்றும், எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாதி மொட்டை அடித்துக்கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார். கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் நீடிக்கும் என்றும் அப்போது அவர் கூறினார்.

Share
Categories
அ.தி.மு.க. இந்தியா கர்நாடகா சசிகலா டி.டி.வி. தினகரன் டில்லி தமிழகம் தலைப்புச் செய்திகள்

சிறையில் சலுகைகளுக்காக சசிகலா ரூ.2 கோடி லஞ்சம்: மத்திய அரசுக்கு முன்பே தெரியும் ?

சிறையில் சலுகைகளுக்காக சசிகலா ரூ.2 கோடி அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்த விவகாரம், பணப் பரிமாற்றத்தின் மூலம் மத்திய அரசுக்கு முன்பே தெரியும் என்று தெரியவந்துள்ளது.

அதிமுக (அம்மா) அணியின் பொதுச்செயலாளர் சசிகலா, முறைகேடாக சொத்து குவித்த வழக்கில் தண்டனை பெற்று, ஜெயிலுக்குள் போய் 5 மாதம் முடிந்துள்ள நிலையில் அவர் லஞ்சம் கொடுத்து ஏராளமான சலுகைகளை அனுபவித்து வந்தது அம்பலமாகி உள்ளது. 5 அறைகள் கொண்ட தனி இடம், டி.வி., சொகுசு மெத்தை உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் அனுபவித்து வந்ததை டி.ஐ.ஜி. ரூபா ஆதாரத்துடன் வெளிப்படுத்தி உள்ளார்.

சசிகலா தரப்பிலிருந்து சிறை துறை அதிகாரிகளுக்கு ரூ. 2 கோடி  பணப் பரிமாற்றம் நடந்தது கடந்த ஏப்ரல் மாதமே மத்திய அரசுக்கு தெரிந்து விட்டதாக கூறப்படுகிறது. சிறை துறை அதிகாரிகளுக்கு லஞ்சமாக பணம் கொடுப்பதை ஆதாரத்துடன் அம்பலப்படுத்த ஏற்பாடுகளை மத்திய அரசு ரகசியமாக செய்ததாகவும் தெரிகிறது.  அதன்பின், சசிகலா சிக்குவதற்கு கர்நாடக மாநில முன்னாள் உள்துறை மந்திரி பரமேஸ்வரின் உதவியாளர் பிரகாஷ் என்பவர் கொடுத்த வாக்குமூலம் தான் காரணமாக அமைந்ததாகவும் தெரிகிறது.

இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்த விவகாரத்தில், டி.டி.வி. தினகரனின் நண்பரான, பெங்களூரைச் சார்ந்த மல்லிகார்ஜுனா என்பவரை விசாரித்து, அவரது செல்போனை ஆய்வு செய்த போது முன்னாள் உள்துறை மந்திரி பரமேஸ்வரின் உதவியாளர் பிரகாசுடன் அவர் பல தடவை பேசி இருப்பது தெரிய வந்தது.  இதையடுத்து பிரகாஷை விசாரிக்கையில், தினகரன் மூலம் பெங்களூர் சிறை துறை அதிகாரிகளுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுக்கப்படுவதாக அவர் கூறியிருக்கிறார்.

இந்த வி‌ஷயத்தில் சசிகலாவை குறி வைத்து, மத்திய அரசின் ஏஜண்டுகள், கைதிகளைப் பயன்படுத்தி, வீடியோ காட்சிகளை  திட்டமிட்டு எடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. எடுக்கப்பட்டுள்ள வீடியோ படங்கள் ஆதாரமாக மாறி உள்ளன.  அதன் பின்னரே, அதிரடி நடவடிக்கைகள் மூலம் சசிகலா பெற்று வரும் சலுகைகள் அம்பலப்படுத்தப்பட்டது.

 

Share
Categories
இந்தியா டில்லி தமிழகம் தலைப்புச் செய்திகள் விவசாயிகள் போராட்டம்

பிரதமர் மோடியின் வீட்டின் முன் போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகள் கைது

பிரதமர் மோடியின் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட 70க்கு மேற்பட்ட தமிழக  விவசாயிகளை டெல்லி போலீசார் கைது செய்தனர். இருப்பினும் போராட்டம் மீண்டும் தொடரும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 140 ஆண்டுகளுக்கு பிறகு வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து,  தண்ணீர் கிடைக்காததால் விவசாயிகள் தங்களது  நிலத்தில் பயிரிட முடியாமலும், பயிரிட வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமலும் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு  தள்ளப்பட்டனர்.

கடந்த மார்ச் மாதம் முதல் ஏப்ரல் வரை தமிழக விவசாயிகள், தேசிய நதிகள் இணைப்பு தென் இந்திய விவசாய  சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் 41 நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு தமிழக முதல்வர்  எடப்பாடி பழனிசாமி, கால அவகாசம் கேட்டும், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்ததை தொடர்ந்தும் போராட்டத்தை  தற்காலிகமாக கைவிடுவதாக தெரிவித்து தமிழகம் திரும்பினார்கள். ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்த வாக்குறுதியை செயல்படுத்தாத  காரணத்தால் தென் இந்திய விவசாய சங்கத்தினர் மீண்டும் டெல்லியில் போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்தனர்.

டெல்லியில் பிரதமர் இல்லம் நோக்கி பேரணியாக புறப்பட முயன்றபோது காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் குழுவினர் இன்று மாலையில் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் பகுதியான ஜந்தர் மந்தரைத் தாண்டி வேறு எங்கும் போராட்டத்தில் ஈடுபட்டால் சட்டப்படி விவசாயிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்களை காவல்துறையினர் எச்சரித்தனர்.

இதுகுறித்து, தென் இந்திய விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு கூறுகையில், “தமிழக முதல்வர் உறுதியளித்ததால் கடந்த ஏப்ரல் மாதம் தமிழக  விவசாயிகள் தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் வாங்கி தமிழகம் திரும்பினோம். ஆனால் தமிழக அரசு தற்போது உச்சநீதிமன்றத்தில் வழக்கு  தொடர்ந்து விவசாய கடனை ரத்து செய்யாத அளவிற்கு செய்து விட்டது. இது மனித உரிமை மீறிய செயலாகும். அதனால் விவசாயிகளின்  வாழ்வாதராத்தை கருத்தில் கொண்டு மீண்டும் டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தவுள்ளோம். மேலும் தமிழக  விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றும் வரை இந்த போராட்டம் தொடரும் என்றும், போலி வாக்குறுதிகளை இனி  நம்ப மாட்டோம்” என்று தெரிவித்தார்.

Share
Categories
இந்தியா டில்லி

பிளாட்பாரத்தில் உறங்கிய 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்

தலைநகர் டெல்லியில் பிளாட்பாரத்தில் படுத்து உறங்கிய 8 வயது சிறுமி, துப்புரவு தொழிலாளியால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் டெல்லியில் உள்ள கான்னாட் என்ற பகுதியில் வீடு இல்லாமல் அதிகம் பேர் பிளாட்பாரங்களில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அங்கு தூங்கிக்கொண்டிருந்த 8 வயது சிறுமியை அதே பகுதியில் துப்புரவு பணி செய்து வரும் நபர் ஒருவர் மறைவான இடத்திற்கு தூக்கிச் சென்றுள்ளார்.

பின்னர் அந்த சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அந்நபர் சிறிது நேரம் கழித்து சிறுமியை அங்கேயே போட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார். தப்பிச் சென்ற நபர் சிறுமியின் குடும்பத்தினருக்கு ஏற்கனவே அறிமுகமான நபர் என கூறப்படுகிறது. இதனையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் போலீசில் புகாரளித்தனர்.

Share
Categories
இந்தியா ஜி.எஸ்.டி. டில்லி

ஜி.எஸ்.டி. அறிமுக விழா: மக்களவையில் இன்று ஒத்திகை

ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறையை அறிமுகம் செய்வதற்கான விழா, வரும், 30ம் தேதி இரவு நடக்க உள்ளது.

இந்நிலையில், பார்லிமென்ட்டில், இன்று அதற்கான ஒத்திகை நடக்க உள்ளது. ஜூலை, 1 முதல் ஜி.எஸ்.டி., நடைமுறைக்கு வர உள்ளது. இதற்காக, இந்த வரி விதிப்பு முறையை அறிமுகம் செய்யும் விழா, பார்லிமென்ட் மைய மண்டபத்தில், வரும், 30ம் தேதி இரவு, 12:00 மணிக்கு நடக்க உள்ளது. இந்த விழாவில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி, லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன் பங்கேற்கின்றனர். முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவகவுடா, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், மாநில நிதியமைச்சர்கள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில், அனைத்து, எம்.பி.,க்களும் பங்கேற்க அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.பார்லிமென்ட் மைய மண்டபத்தில் நடக்கவுள்ள இந்த விழாவை சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜி.எஸ்.டி., அறிமுக விழாவை எந்த பிரச்னையும் இல்லாமல் நடத்துவதற்காக, இன்று இரவு, 10:00 மணிக்கு, பார்லிமென்ட்டில் ஒத்திகை நிகழ்ச்சி நடக்க உள்ளது.

Share
Categories
இந்தியா டில்லி

கெஜ்ரிவால் மீது லஞ்ச புகார் கூறிய மிஸ்ரா செய்தியாளர் சந்திப்பில் மயங்கி விழுந்தார்

டில்லி முதல்வர் கெஜ்ரிவால் மீது லஞ்ச புகார் கூறிய மிஸ்ரா செய்தியாளர் சந்திப்பில் மயங்கி விழுந்துள்ளர். பேட்டி அளித்து கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் கபில் மிஸ்ரா மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 5-வது நாளாக கபில் மிஸ்ரா உண்ணாவிரதம் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Share
Categories
இந்தியா டில்லி

சட்டமன்றத்தில் கேஜ்ரிவால் குற்றச்சாட்டு குறித்து இன்று விளக்கம்!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் அமைச்சர் சத்தியேந்திர ஜெயினிடம் இருந்து இரண்டு கோடி ரூபாயை லஞ்சமாகப் பெற்றுக்கொண்டதாக மற்றொரு அமைச்சர் கபில் மிஸ்ரா குற்றஞ்சாட்டினார். இதையடுத்துக் கபில் மிஸ்ராவை அமைச்சர் பதவியில் இருந்து கேஜ்ரிவால் நீக்கினார்.

2கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்குச் சட்டமன்றத்தில் விளக்கமளிக்கப் போவதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் டெல்லியில் அரவிந்த் கேஜ்ரிவால் வீட்டில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் கபில் மிஸ்ராவைக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டனர்.

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கேஜ்ரிவால் தன் மீதான குற்றச்சாட்டுப் பொய்யானது என்றும், உண்மையே இறுதியில் வெல்லும் என்றும் தெரிவித்தார். தன்மீதான குற்றச்சாட்டுக்களுக்குச் சட்டமன்றத்தில் பதிலளிக்கப் போவதாகவும் கேஜ்ரிவால் தெரிவித்தார்.

Share
Categories
இந்தியா உச்ச நீதிமன்றம் டில்லி

நிர்பயா பலாத்கார வழக்கில் 4 குற்றவாளிகளின் தூக்கு தண்டனை உறுதி

நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, 4 குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை உறுதி செய்து தீர்ப்பு வழங்கியுள்ளனர். மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பானுமதி அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளனர். இரு நீதிபதிகளும் தனித்தனியே அளித்த தீர்ப்பில் 4 பேரின் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டது நாட்டின் மனசாட்சியை உலுக்கியது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். டெல்லியில் 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி இரவு தனது ஆண் நன்பருடன் பேருந்தில் பயணம் செய்த நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்டு பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டார். டெல்லி மருத்துவமனையிலும் தொடர்ந்து சிங்கப்பூர் மருத்துவமனையிலும் சிகிச்சையளிக்கப்பட்ட போதிலும் நிர்பயா உயிழந்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முகேஷ் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, அக்‌ஷய் தாகுர், ராம்சிங் ஆகிய 5 பேருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பு டெல்லி உயர்நீதிமன்றத்திலும் உறுதி செய்யப்பட்ட நிலையில் குற்றவாளிகள் 6 பேரும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பானுமதி, அசோக் பூஷன் ஆகியோர் அடங்கிய அமர்வு 4 பேருக்கும் தூக்கு தண்டனையை உறுதி செய்து தீர்ப்பு வழங்கியுள்ளனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சிறுவன் ஒருவன் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளான். குற்றவாளிகளில் ஒருவரான ராம் சிங் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
Categories
இந்தியா டில்லி

டெல்லி மாநகராட்சிகள்- மீண்டும் பாரதிய ஜனதா கட்சியின் வசம்

கடந்த 23-ம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவு நடைபெற்ற டெல்லி மாநகராட்சிகளுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.

டெல்லி சட்டமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வரும் நிலையில், டெல்லி மாநகராட்சிகள் பாரதிய ஜனதா கட்சியின் வசமுள்ளது.

டெல்லியின் மூன்று மாநகராட்சிகளில் உள்ள மொத்தம் 272 வார்டுகளில் 270 வார்டுகளுக்கு நடைபெற்ற இத்தேர்தலில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளுக்கிடையே மும்முனை போட்டி நிலவியது.

இந்நிலையில், டெல்லி மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. காலை 9 மணி முதலே டெல்லி மாநகராட்களுக்கான தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி முன்னிலை வகித்து வருகிறது.

தற்போது வரை பாரதிய ஜனதா கட்சி 103 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளதாகவும், அதற்கு அடுத்தபடியாக ஆம் ஆத்மி கட்சி 26 வார்டுகளிலும், காங்கிரஸ் கட்சி 6 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளதாக பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

தற்போதைய வெற்றி மற்றும் முன்னிலை நிலவரப்படி, டெல்லி மாநகராட்சிகளை பாரதிய ஜனதா கட்சி மீண்டும் தக்க வைத்துக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share