Categories
இந்தியா தலைப்புச் செய்திகள் பா.ஜனதா மேற்கு வங்காளம்

கற்பழிப்பு பற்றிய குதற்கப்பேச்சு: ரூபா கங்குலி மீது மேற்கு வங்க போலீசார் வழக்கு பதிவு

மேற்கு வங்கத்தில் பெண்களின் பாதுகாப்பைப் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடுவதற்காக பிஜேபி எம்.பி. ரூபா கங்குலி மீது பொலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

“நான் இந்திய மக்களிடமும், அரசியல்வாதிகளிடமும், திரிணாமுல் காங்கிரசை ஆதரிக்கும் எல்லோருக்கும் சொல்லிக்கொள்வது என்னவென்றால்…..  மம்தா பானர்ஜியின் விருந்தினராக அல்லாமல் உங்கள் மனைவிகளையும் மகள்களையும் மேற்கு வங்காளத்திற்கு அனுப்பிப் பாருங்கள்… அவர்கள் 15 நாட்களுக்கு மேல் கற்பழிக்கப்படாமல் அங்கேயே உயிர் பிழைத்திருந்தால் என்னிடம் வந்து சொல்லுங்கள்…”, என்று கடந்த வெள்ளிக்கிழமையன்று குதற்கமாக பொது நிகழ்ச்சியில் ரூபா கங்குலி பேசியிருந்தார்.

இதற்கு திரிணமூல் காங்கிரஸ், ரூபா கங்குலி மேற்கு வங்காளத்தின் புகழுக்குக் களங்கம் ஏற்படுத்துகிறார் என்று பதிலளித்தது.

இருப்பினும், நடிகையாக இருந்து அரசியல்வாதியாக மாறிய ரூபா, தனது கருத்தை திரும்பப் பெற மறுத்துவிட்டார். எனவே தற்போது அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Share
Categories
இந்திய ரிசர்வ் வங்கி இந்தியா உர்ஜிட் படேல் காங்கிரஸ் தலைப்புச் செய்திகள் ப. சிதம்பரம் பண மதிப்பு நீக்கம் ராகுல் காந்தி ரூபாய் நோட்டு

பணமதிப்பு நீக்கம் துவங்கி 8 மாதங்கள் கழித்தும் செல்லாத நோட்டு எண்ணிக்கை தொடருகிறது

பணமதிப்பு நீக்க நடவடிக்கை துவங்கிய 8 மாதங்களுக்குப் பிறகும் செல்லாத நோட்டுகள் எண்ணும் பணி தொடர்கிறது என்று ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது தெரிந்ததே. இத்தகவல் சமூக வலைத்தளங்களிலும் மக்களிடையேயும் பலவிதமாக சரமாரியாக கிண்டல் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

அதுகுறித்து காங்கிரஸ்  துணைத் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில், ரிசர்வ் வங்கிக்கு மட்டுமின்றி, பிரதமர் அலுவலகத்துக்கும் கணக்கு ஆசிரியர்களை  நியமிக்கலாம் என்று கிண்டலாகக் கூறியுள்ளார்.

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரமும் தனது ட்விட்டரில், “பணமதிப்பு நீக்கத்துக்கு 8 மாதங்கள் கழித்து ஆர்பிஐ நோட்டு எண்ணும் இயந்திரம் வாங்கியுள்ளது, குத்தகை என்று ஒன்று இருப்பது ஆர்பிஐ-க்கு தெரியுமா” என்று பதிவிட்டுள்ளார்.

நாடாளுமன்றக் குழுவின் முன்னால் பேசிய ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேல், தடைசெய்யப்பட்ட நோட்டுகள் இன்னமும் எண்ணப்பட்டு வருகின்றன, ஆகவே எண்ணிக்கை பற்றி இப்போது கூற முடியாது என்று கூறியதாகத் தெரிகிறது. பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு எவ்வளவு தொகை வங்கிகளில் பழைய நோட்டுகள் டெபாசிட் ஆகின என்ற விவரத்தை இன்னமும் கூட மத்திய அரசு வெளியிடவில்லை.

Share
Categories
இந்தியா காங்கிரஸ் தலைப்புச் செய்திகள் ராகுல் காந்தி

சீனத்தூதருடன் சந்திப்பு குறித்து ராகுல் காந்தி காட்டமான பதில்

இந்தியாவுக்கும் சீனவுக்கும் இடையிலான எல்லை தொடர்பான மோதல் நிலவிவரும் சூழலில், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி சீன தூதர் லுயோ ஜாயோஹூ சந்தித்தது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.

இதற்குப் பதிலளிக்கும் விதத்தில் ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ள ராகுல்காந்தி, எல்லையில் ஆயிரம் சீன வீரர்கள் அத்துமீறி இந்தியாவுக்குள் நுழைந்த நிலையில், அந்நாட்டு அதிபரோடு ஊஞ்சலில் அமர்ந்து பேசுபவன் நானல்ல என்று கூறியுள்ளார். அண்மையில் சீனாவில் அதிபர் ஜிங்பிங்குடன் மோடி ஊஞ்சலில் அமர்ந்து பேசிய படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார். சீனத் தூதர் தன்னை சந்தித்தது குறித்து கவலைப்படும் மத்திய அரசு, இருநாடுகள் இடையே பதற்றம் நிலவும் சூழலில் மத்திய அமைச்சர்கள் மூன்று பேர் சீனாவுக்கு பயணம் சென்றதேன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அவர் “பாஜகவின் பக்த ஊடகங்கள் செய்தி வெளியிடும் முன்னர் உண்மைத்தன்மையை சோதிக்க வேண்டும்” என்று காட்டமாக பதிவுசெய்திருந்தார்.

Share
Categories
இந்தியா உத்தர பிரதேசம் தலைப்புச் செய்திகள் பா.ஜனதா

உ.பி.-யில் பாஜகவினருக்கு எதிரான நடவடிக்கை எடுத்த காவல்துறை பெண் அதிகாரி இடமாற்றம்

உத்தரபிரதேசத்தில் பாஜகவினருக்கு எதிரான நடவடிக்கை எடுத்த காவல்துறை பெண் அதிகாரி பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.


உத்தரப்பிரதேச மாநிலம் சாயானா சர்க்கிள் பகுதியை சேர்ந்த, ஸ்ரேஷ்டா தாகூர், புலந்ஷாஹர் பகுதியில் காவல் அதிகாரியாக பணியாற்றினார். ஆவணங்களின்றி வாகனம் இயக்கியதாக எழுந்த புகாரில், பாஜக தொண்டர் ஒருவரை அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.

இதையடுத்து, பெண் காவல் அதிகாரியை முற்றுகையிட்ட பாஜகவினர் நடவடிக்கை எடுக்க எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை கைது செய்யப்பட்ட நிலையில், மேலிட உத்தரவின் பேரில் அந்த பெண் அதிகாரி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சியனா சர்க்கிள் பகுதியில் பணி புரிந்து வந்த அவர் பஹ்ரைச் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாநிலம் முழுவதும் இடமாற்றம் செய்யப்பட்ட 234 அதிகாரிகளின் பட்டியலை யோகி ஆதித்யநாத் அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரி தாக்கூர் கூறுகையில், “என்னுடைய இடமாற்றம் வழக்கமானது அல்லது அரசியல் என்று எதுவும் என்னால் சொல்ல முடியாது. ஆனால் உண்மை என்னவெனில், என்னுடைய சக பேஜ் அதிகாரிகள் யாரும் இடமாற்றம் செய்யப்படவில்லை” என்று தெரிவித்தார்.
Share
Categories
இந்தியா தலைப்புச் செய்திகள் பா.ஜனதா

பொது இடத்தில் சிறுநீர் கழித்த மத்திய அமைச்சர்

மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன்சிங், பீகாரில் பொது இடத்தில்  சிறுநீர் கழித்த காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் வேளாண் துறை அமைச்சராக இருப்பவர் ராதா மோகன்சிங். சாலையோரத்தில் சிறுநீர் கழிப்பதை யாரோ ஒரு மர்ம நபர் மறைந்து இருந்து படம் பிடித்தார். அந்த படம் சமூக வலைதளங்களில் பரவியது. ஆங்கில தொலைக்காட்சி ஒன்றிலும் அந்த காட்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

அமைச்சர் ராதாமோகன், பிபாரா அருகிலுள்ள நெடுஞ்சாலை -28 இல் நீண்ட தூரத்திற்கு கழிப்பிடன் எதுவும் இருக்கவில்லை, என்று தனது செய்கையை நியாயப்படுத்தியுள்ளார்.

பீகார் மாநில பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான இவர் பாராளுமன்ற தேர்தலில் கிழக்கு சம்பரன் தொகுதியில் இருந்து தேர்வாகி அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார்.

சமீபத்தில் ராதாமோகன் சிங் பீகாரில் உள்ள தனது தொகுதியில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொள்ள சென்றிருந்தார். பாட்னாவில் இருந்து மோதிஹரி எனும் ஊருக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது நடுவழியில் அவருக்கு சிறுநீர் கழிக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. அதை அடக்க முடியாத அவர் காரை நிறுத்த சொல்லி இறங்கினார்.

இது குறித்து சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் சர்ச்சைகள் தொடர்ந்தவண்ணமாக உள்ளது.
பிரதமர் மோடி ஒருபக்கம் நாட்டை தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுத்தப்படுத்திக் கொண்டிருக்கும் போது மறுபுறம் மத்திய மந்திரி ராதா மோகன் சிங் சாலையோரத்தில் சிறுநீர் கழிப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Share
Categories
இந்தியா கட்சிகள் குடியரசு தலைவர்

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக அறிவித்த கூட்டணி கட்சிகளுக்கு மீரா குமார் நன்றி தெரிவித்தார்

புதுடெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 14 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.

எதிர்கட்சிகள் சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளராக  மக்களவை முன்னாள் சபாநாயகர் மீராகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாஜக வேட்பாளர் ராம்நாத்தை எதிர்த்து மீராகுமார் போட்டியிடுகிறார். அனைத்து கட்சிகளும்  மீராகுமாருக்கு ஆதரவு அளிக்குமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக அறிவித்த கட்சிகளுக்கு மீரா குமார் நன்றியை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியார்களிடம் கூறியதாவது:

காங்கிரஸ் கட்சியின் தலைமையை ஏற்று 17 கூட்டணி கட்சிகள் என்னை ஒருமனதாக ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்தற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சீதாராம் யெச்சூரி, சரத்பவார் உள்ளிட்ட தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்த தருணத்தில் எதிர்கட்சிகளின் ஒற்றுமை எனக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

Share
Categories
இந்தியா குடியரசு தலைவர் தலைப்புச் செய்திகள் பா.ஜனதா

ஜனாதிபதி தேர்தல்: பா.ஜ. வேட்பாளராக பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் தேர்வு

ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ. வேட்பாளராக பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை 14-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதற்கான தேர்தல் ஜூலை 17-ஆம்தேதி நடைபெறுகிறது. இன்னிலையில் பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளராக பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டார். பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

ராம்நாத் கோவிந்த் உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் தேஹாத்தில் அக்டோபர் 1 1945-ல் பிறந்தார். தலித் பின்னணியைக் கொண்டவர். இவர் அடிப்படையில் ஒரு வழக்கறிஞர். டெல்லி உயர் நீதிமன்றத்திலும் பின்னர் உச்ச நீதிமன்றத்திலும் 16 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றியிருக்கிறார். 1994-ல் அவர் ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டு  தொடர்ச்சியாக இருமுறை அதாவது 2006-ம் ஆண்டுவரை  எம்.பி.,யாக பணியாற்றினார். 2002 -ல் ஐ.நா. பொதுக்குழுவில் இந்தியப் பிரதிநிதியாக கலந்து கொண்டார்.

ராம்நாத் கோவிந்த் வரும் 23-ம் தேதி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Share
Categories
இந்தியா தலைப்புச் செய்திகள் பா.ஜனதா

அமித்ஷாவின் “காந்தி சாதுர்யமான வியாபாரி” – கருத்துக்கு நாடு முழுவதும் கடும் கண்டனம்

பிஜேபி தேசியத் தலைவர் அமித் ஷா, மகாத்மா காந்தி குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் “காந்தி ஒரு சாதுர்யமான வியாபாரி” என்று தெரிவித்துள்ள கருத்துக்கு நாடு முழுவதும் பல்வேறு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மகாத்மா காந்தியின் பேரரான கோபால் கிருஷ்ண காந்தி அதுபற்றி கூறுகையில், “இது கேட்க சகிக்காத, குறும்புத் தனமான பேச்சு” என்றார்.

மகாத்மாவின் இன்னொரு பேரரான ராஜ்மோகன் காந்தி, “பிரிட்டிஷ் சிங்கத்தையும், இந்தியாவில் இனவாத விஷப் பாம்புகளையும் வென்ற மனிதர், ‘ஒரு சாதுரியமான வியாபாரி’யை விடவும் உயர்ந்தவர்” என்றார்.

“அமித் ஷாவின் கருத்து, சுதந்திரப்போராட்ட வீரர்கள், அவர்கள் செய்த தியாகங்கள் மற்றும் மகாத்மா காந்தி மீது அவமதிப்பை ஏற்படுத்தி உள்ளது” என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கூறினார்.

“அமித் ஷா தனது கருத்தை திரும்பப்பெற வேண்டும். அதற்காக மன்னிப்பும் கேட்கவேண்டும். அவர் வேண்டுமென்றே இப்படி சொல்லி இருக்கிறார். இது துரதிர்ஷ்டவசமானது” என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கூறினார்.

“தேசத்தின் தந்தை மகாத்மா காந்தி என்ற வகையில், அனைவரும் அவரை மதிக்க வேண்டும். உலகம் முழுவதும் மதிக்கப்படுகிற ஒரு தலைவரை இப்படி கூறி இருப்பது மோசமானது” என்று இந்திய கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி கூறினார்.

“காங்கிரஸ் கட்சியையோ, பிற எதிர்க்கட்சிகளையோ அவர் விமர்சிப்பதில் எங்களுக்கு பிரச்சினை இல்லை. ஆனால் மகாத்மா காந்தியின் பெயரை இழுப்பது, இப்படிப்பட்ட வார்த்தைகளால் பேசியிருப்பது காந்தியை இழிவுபடுத்துவதாகும்” என்று இந்திய கம்யூனிஸ்டு தேசிய செயலாளர் டி.ராஜா கூறியிருக்கிறார்.

“இது மகாத்மா காந்தி மீது பா.ஜனதா கட்சியும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் கொண்டுள்ள அவமதிப்பை வெளிப்படுத்துகிறது” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் பொதுச்செயலாளர் பிரகாஷ் கரத் கூறியிருக்கிறார்.

 

Share
Categories
இந்தியா காங்கிரஸ் தலைப்புச் செய்திகள் மத்திய பிரதேசம் ராகுல் காந்தி

ம.பி. துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த விவசாயிகளை சந்திக்கச் சென்ற ராகுல் கைது

மத்திய பிரதேசம் மாண்ட்சர் மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற காங்கிரஸ் துணைதலைவர் ராகுல் காந்தியை போலீசார் தடுப்பு காவலில் கைது செய்துள்ளனர்.

வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் 1-ம் தேதி முதல் போராடி வருகின்றனர்.

மாண்ட்சர் மாவட்டம் பிபாலியமண்டியில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் உருவானது. அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 5 விவசாயிகள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து மாண்ட்சர்  பகுதியில் பதட்டம் நீடிக்கிறது.

இதனிடையே போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற காங்கிரஸ் துணைதலைவர் ராகுல் காந்தி இன்று போபாலில் இருந்து மாண்ட்சர்மாவட்டத்திற்கு பயணம் செய்தார். ஆனால் ராகுலை போலீசார் மாண்ட்சர் மாவட்டத்திற்குள் நுழைய அனுமதிக்க வில்லை .

இதனால் அவர் பைக்கில் எந்த வித பாதுகாப்பு அதிகாரிகளும் இல்லாமல் செல்ல முற்பட்டார். அப்போது போலீசார் அவரை தடுத்து நிறுத்தி தடுப்பு காவலில் கைது செய்துள்ளனர். அசம்பாவித சம்பவம் எதுவும் நடைபெற கூடாது என்பதற்காக ராகுல் காந்தி மாண்ட்சர் மாவட்டத்தில் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதாவதற்கு முன்னதாக நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.  அப்போது ராகுல் கூறியதாவது: ‘மோடியால் பணக்காரர்களுக்கு மட்டும் ரூ.1.50 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்ய முடியும். ஆனால், விவசாயிகளுக்கு செய்ய முடியாது. விளைபொருட்களுக்கு அவரால் சரியான விலை கொடுக்க முடியாது, போனஸ் கொடுக்க முடியாது, இழப்பீடு வழங்க முடியாது. துப்பாக்கி தோட்டாக்களை மட்டுமே வழங்க முடியும். மாண்ட்சர் மாவட்டத்தில் விவசாயிகள் இறந்ததற்கு பிரதமர் மோடியும், மாநில முதல்வர் சிவராஜ் சவுகானும்தான் பொறுப்பாளிகள்.’

இவ்வாறு அவர் கூறினார்.

Share
Categories
இந்தியா கட்சிகள் காங்கிரஸ் பா.ஜனதா வெங்கையா நாயுடு

புத்தக கையேடு பதிவு பற்றி காங்கிரஸ் மீது வெங்கையா பாய்ச்சல்

ஜம்மு மற்றும் காஷ்மீரை இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் என புத்தக கையேட்டில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் கட்சி மீது மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.நாட்டின் வரைபடம் அடங்கிய ஒரு புத்தக கையேட்டை காங்கிரஸ் கட்சி நேற்று(ஜூன்3) வெளியிட்டது. ராஷ்டீரிய சுரக்ஷா பர் ஆன்ச் என்ற தலைப்பிலான அந்த புத்தகம் 16 பக்கங்களை கொண்டது. அதில் 12வது பக்கத்தில், ஜம்மு மற்றும் காஷ்மீர் முழுவதனையும் இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் என குறிப்பிட்டுள்ளது.இதுகுறித்து பேசிய மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் வெங்கையா நாயுடு, காஷ்மீரை பாகிஸ்தானுக்கு விட்டு கொடுக்க வேண்டும் என்கிற அர்த்தத்தில், காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ புத்தக கையேட்டில் காஷ்மீரை இந்தியா ஆக்கிரமித்துள்ளது என பதிவிட்டு வெளியிடப்பட்டுள்ளது என கூறினார்.மன்னிப்பே கிடையாதுஇதற்காகவா நமது இறையாண்மை மற்றும் நாட்டின் ஒற்றுமைக்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் வீரமிக்க நமது நூற்றுக்கணக்கான வீரர்கள் கடந்த ஆண்டுகளில் தங்களது உயிரை இழந்தனர்? காங்கிரசின் புத்தகத்தில் ஒரு பகுதியாக பதிவாகியுள்ள அவர்களது இந்த எண்ணத்திற்காக அக்கட்சியை மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் என்றார்.

Share