Categories
இந்தியா குடியரசு துணைத்தலைவர் தலைப்புச் செய்திகள் பா.ஜனதா வெங்கையா நாயுடு

உதவி ஜனாதிபதி தேர்தல் : வெங்கையா நாயுடு வெற்றி

இந்தியாவின் தற்போதைய உதவி ஜனாதிபதி ஹமீத் அன்சாரியின் பதவி காலம் வரும் 10-ந் தேதியுடன் முடிகிறது. புதிய உதவி ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது.  பாஜக கூட்டணி சார்பில் வெங்கையா நாயுடுவும், காங்கிரஸ் மற்றும் எதிர்க் கட்சிகளின் சார்பில், மகாத்மா காந்தியின் பேரரான, கோபாலகிருஷ்ண காந்தியும் போட்டியிட்டனர். ஓட்டு எண்ணப்பட்டபின் பாஜக வேட்பாளர் 68 வயதான முப்பவரப்பு வெங்கையா நாயுடு வெற்றி பெற்று இந்தியாவின் 12-வது உதவி ஜனாதிபதியாகும் தகுதி பெற்றுள்ளார்.

 

வெங்கையா நாயுடு, ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கையா, கடந்த 1949-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி பிறந்தார். ஆந்திரா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டார். ஜெய் ஆந்திரா இயக்கம் என்றதன் மூலம் மிகவும் பிரபலமடைந்தார்.

பாஜகவின் இளைஞரணி தலைவராக கடந்த 1977-இல் இருந்தார். இவர் முதல் முறையாக 1978-இல் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் பாஜக கட்சியில் படிப்படியாக உயர்ந்து உதவி ஜனாதிபதி நிலையை எட்டியுள்ளார்.

முந்தைய 12 துணை ஜனாதிபதிகளும் சுதந்திரம் பெறுவதற்கு முன்பு பிறந்தவர்களாகையால், வெங்கையா நாயுடு சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் துணை ஜனாதிபதி என்ற பெருமையை பெற்றுள்ளார்.

Share
Categories
இந்தியா கட்சிகள் காங்கிரஸ் பா.ஜனதா வெங்கையா நாயுடு

புத்தக கையேடு பதிவு பற்றி காங்கிரஸ் மீது வெங்கையா பாய்ச்சல்

ஜம்மு மற்றும் காஷ்மீரை இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் என புத்தக கையேட்டில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் கட்சி மீது மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.நாட்டின் வரைபடம் அடங்கிய ஒரு புத்தக கையேட்டை காங்கிரஸ் கட்சி நேற்று(ஜூன்3) வெளியிட்டது. ராஷ்டீரிய சுரக்ஷா பர் ஆன்ச் என்ற தலைப்பிலான அந்த புத்தகம் 16 பக்கங்களை கொண்டது. அதில் 12வது பக்கத்தில், ஜம்மு மற்றும் காஷ்மீர் முழுவதனையும் இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் என குறிப்பிட்டுள்ளது.இதுகுறித்து பேசிய மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் வெங்கையா நாயுடு, காஷ்மீரை பாகிஸ்தானுக்கு விட்டு கொடுக்க வேண்டும் என்கிற அர்த்தத்தில், காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ புத்தக கையேட்டில் காஷ்மீரை இந்தியா ஆக்கிரமித்துள்ளது என பதிவிட்டு வெளியிடப்பட்டுள்ளது என கூறினார்.மன்னிப்பே கிடையாதுஇதற்காகவா நமது இறையாண்மை மற்றும் நாட்டின் ஒற்றுமைக்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் வீரமிக்க நமது நூற்றுக்கணக்கான வீரர்கள் கடந்த ஆண்டுகளில் தங்களது உயிரை இழந்தனர்? காங்கிரசின் புத்தகத்தில் ஒரு பகுதியாக பதிவாகியுள்ள அவர்களது இந்த எண்ணத்திற்காக அக்கட்சியை மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் என்றார்.

Share