Categories
ஆரோக்கியம் இயற்கை மருத்துவம்

வெங்காயத்தின் மருத்துவப் பயன்கள்

  • வெங்காயச் சாறு, இஞ்சிச் சாறு இரண்டையும் சம அளவு கலந்து குடித்து வந்தால் நீரிழிவு நோய் குறையும்.
  • சின்ன வெங்காயத்தை, வெவ்லம் மற்றும் நெய் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.
  • வெங்காயத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, அதில் பனங்கற்கண்டைச் சேர்த்து சட்டியில் போட்டு சிவக்க வறுத்துச் சாப்பிட்டு வந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும்.
  • வெங்காயத்துடன் உப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.
  • வெங்காயத்தைச் சுட்டுச் சாப்பிட்டுவந்தால் இருமல், கபக்கட்டு நீங்கும்.
  • வெங்காயச் சாற்றில் தேன் கலந்து குடித்துவந்தால் இருமல், மார்புச் சளி உள்ளிட்ட மார்பு நோய்கள் நீங்கும்.
  • வெங்காயச் சாற்றில் கடுகு எண்ணெய் கலந்து தடவிவந்தால் மூட்டுவலி நீங்கும்.
  • வெங்காயத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, பனங்கற்கண்டைச் சேர்த்து வதக்கி, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவந்தால் நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
Share
Categories
ஆரோக்கியம் இயற்கை மருத்துவம் மருத்துவ ஆய்வு

ரத்தத்தை சுத்தபடுத்த வழிகள்

நமது உடலில் உள்ள உறுப்புகளை சுறுசுறுப்பாக இயங்க வைக்க உதவுவது ரத்தம். அந்த ரத்தம் சுத்தமாக இருக்க வேண்டியதுதான் ரொம்வே முக்கியம். இயற்கையான முறையில் நமது உடம்பில் உள்ள ரத்தத்தை எப்படி சுத்திகரிப்பது.

  • செம்பருத்தி பூவின் இதழ்களை நன்றாகச் சுத்தம் செய்து காய வைத்து பொடி செய்து அதை தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் 1 டம்ளர் வெந்நீரில் 1 ஸ்பூன் பொடியை கலந்து குடித்து வந்தால், நமது உடல் சோர்வை குறைத்து ரத்தத்தை தூய்மை அடைய செய்யும்.
  • செம்பருத்தி பூவின் இதழ்களை நறுக்கி, அதில் எலுமிச்சை சாறு விட்டு வெயிலில் வைத்து பிசைந்து சாறு எடுத்து அதனுடன் சர்க்கரை கலந்து காய்ச்சி வடிகட்டி நீரில் கலந்து குடித்து வரவேண்டும்.
  • தினமும் நமது உணவில் பீட்ரூட்டை சமைத்து சாப்பிட்டு வந்தால், நமது உடல்பில் புத்தம் புதிய ரத்தம் உற்பத்தியாகும். மேலும் பீட்ரூட்டை நறுக்கிப் பச்சையாக எலுமிச்சைப்பழச் சாறு கலந்து சாப்பிட்டால், ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் உற்பத்தி அதிகரிக்கும்.
  • முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச்சத்து அதிகமாக இருக்கின்றது. எனவே இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்தசோகை இருப்பவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் உற்பத்தியாகும்.
  • முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு முட்டை உடைத்து பருப்புடன் ஊற்றி, கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வந்தால், ரத்தம் விருத்தியாகும்.
  • முருங்கை இலை சாறுடன் பால் கலந்து கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்குக் கொடுத்தால், ரத்தம் சுத்தம் அடைவதுடன், எலும்புகள் வலிமையடையும்.
  • இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிடலாம் அல்லது தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் கூட ரத்தம் சுத்தமாகும். ஆனால் வாத நோய் உள்ளவர்கள் இதை தவிர்க்க வேண்டும்.
Share