Categories
ஆரோக்கியம் இயற்கை மருத்துவம் உடல்நலம் மூலிகைகள்

மலச்சிக்கலைத் தீர்க்கும் தேநீர் வகைகள் – டான்டேலியன்

பொதுவாக முற்றத்தில் வளரும் களைச் செடியான டான்டேலியன் அதன் மருத்துவ குணங்களால் பண்டைக்காலத்திலிருந்தே
ஒரு மூலிகையாக கருதப்படுகிறது. ஹோமியோ மருத்துவத்தில் இது ஒரு சக்திவாய்ந்த டையூரிடிக் (Diuretic -சிறுநீர்ப் பெருக்கி)ஆக உபயோகப்படுத்தப் படுகிறது.

கல்லீரல் மற்றும் பித்த கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு தொற்றுநோய்களையும் சிகிச்சையளிப்பதற்காக பயன்படுத்தப்பட்டது.

இந்த இயற்கை மூலிகையை கொதிக்கும் தண்ணீரில் சேர்த்துமூலிகை தேநீராக குடிப்பதால் மலச்சிக்கலை குணமாக்க முடியும். டன்டேலியன் தேநீர், ஒரு லேசான மலமிளக்கியாகவும், நீர்ப்பிடிப்புக்கான ஒரு தீர்வாகவும் பயன்படுத்தப்படலாம். குடலின் இயக்கத்தை அதிகரிப்பதன் மூலம் மலச்சிக்கலைத் தடுக்கவும் பயன்படுகிறது.


Share
Categories
ஆரோக்கியம் இயற்கை மருத்துவம் உடல்நலம் மூலிகைகள்

மலச்சிக்கலைத் தீர்க்கும் தேநீர் வகைகள்

மனிதராகப் பிறந்த எல்லோருக்கும் சில தருணங்களில் ஏற்படும் உடல் கோளாறு மலச்சிக்கலாகும். மலச்சிக்கல் வருவதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. அதனைக் குணப்படுத்தவும் பல வழிகள் கையாளப்படுகின்றன.

சில மூலிகைகளிலிருந்து உருவாக்கப்படும் தேநீரைக் கொண்டும் மலச்சிக்கலைத் தீர்க்கலாம். அவைகளில் சிலவற்றைப் பார்க்கலாம்.

1) சென்னா மூலிகைத் தேநீர் (Senna Tea)

மலச்சிக்கலைத் தீர்க்கும் மிகச்சிறந்த,  சக்திவாய்ந்த மருந்து சென்னா தேநீராகும். இது இயற்கையாக கிடைக்கக்கூடிய மூலிகை தேநீராலான வலிமையான மூலிகை சிகிச்சை எனலாம். சென்னா தேநீர் மலச்சிக்கலில் இருந்து  உடனடி நிவாரணம் வழங்குவதாக அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

மருந்துக் கடைகளில் பிரஸ்கிரிப்ஷன் இல்லாமல் கிடைக்கும் இம்மூலிகையில், “சென்னா க்ளைஸ்கோசைட்ஸ் அல்லது சென்னோசைட்ஸ்” எனப்படும் சேர்மங்கள் உள்ளன. அவற்றின் வலிமையான இயற்கை மலமிளக்கி விளைவுகள் காரணமாக,  நவீன மருத்துவத்தில் மிகப் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன.

சென்னா மூலிகை தேநீர், ஆரோக்கியமான பெரியவர்களுக்கு பாதுகாப்பாக கருதப்பட்டாலும், இரண்டு வாரங்களுக்கு மேலாக உட்கொள்ளப்படக்கூடாது. அப்படி இரு வாரங்களுக்கு மேலாக உட்கொள்ளப்பட்டால், பல்வேறு பக்க விளைவுகள் உருவாக வழிவகுக்கும்.

 

Share
Categories
ஆரோக்கியம் இயற்கை மருத்துவம்

உடலுக்கு வலு, நோய் எதிர்ப்பாற்றல் அள்ளித்தரும் எண்ணெய், அடுப்பில்லா முளைகட்டிய பயறு

பயறு வகைகள் ‘லெக்யூம்’ என்னும் குடும்பத்தைச் சேர்ந்தவை. மற்ற தாவரங்களைவிட அதிகமான சத்துகள் நிறைந்தவை. குறைவான ஈரப்பதம் கொண்டவை. பல நாட்கள் பத்திரப்படுத்தி உண்ணும் உணவாக பயறு வகைகள் இருக்கின்றன. நன்கு முதிர்வடைந்த பயறுகளில் அதிகமான புரதச்சத்துகள் உள்ளன. முதிர்ந்த பயறுகளில் கிட்டத்தட்ட 20 – 30 சதவிகிதம் புரதச்சத்துகள் நிறைந்துள்ளன.
சாதாரண பயறுகளைவிட முளைகட்டிய பயறுகள் இரட்டிப்பு பலன்களைத் தருபவை. பயறுகளைச் சாதாரணமாக உட்கொள்ளும்போது உண்டாகும் வாய்வுத்தொல்லை முளைகட்டிய பயறை உண்ணும்போது உண்டாவதில்லை. மிக விரைவாக செரிமானமடையும் தன்மை கொண்டது. இதற்குக் காரணம் செரிமானப் பிரச்னைகளை உண்டாக்கும் ‘பைரேட்ஸ்’ என்ற எதிர் ஊட்டச்சத்துகள் முளைகட்டிய தானியங்களில் குறைக்கப்பட்டுவிடுவதுதான்.
பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்களில் இருக்கும் என்சைம்களைவிட முளைகட்டிய தானியங்களில் அதிகமாக உள்ளன. எனினும், முளைகட்டிய பயறுகளை பச்சையாக உண்பது சுவையாக இருக்காது என்ற கருத்து பெரும்பாலும் நிலவிவருகிறது. ஆனால், “முளைகட்டிய பயறுகளை சுவையூட்டப்பட்டப் பயறுகளாக மாற்றி உண்ணலாம்’’ என்கிறார் இயற்கை உணவியல் நிபுணர் படையல் சிவக்குமார்.
எண்ணெயில்லாமல், அடுப்பில்லாமல் எப்படி முளைகட்டியப் பயறுகளை சுவை நிறைந்த உணவாக மாற்றலாம் என்பது குறித்து அவர் தரும் விளக்கத்தைப் பார்ப்போம்.
பயறு முளைகட்டும் முறை :
* பச்சைப் பயறை நன்கு சுத்தம்செய்து அலசி 8 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.
* 8 மணி நேரம் கழிந்ததும் நீரை நன்றாக வடித்து ஒரு பருத்தித் துணியால் கட்டிவைக்கவும்.
* அடுத்த 8 மணி நேரத்தில் பச்சைப் பயறு நன்கு முளைவிட்டிருக்கும்.
சுவையூட்டப்பட்ட முளைகட்டிய பயறு (இனிப்பு) செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
* முளைகட்டிய பச்சைப் பயறு – 100 கிராம்
* கேரட் – 2
* தேங்காய் – 1
* கரும்புச் சர்க்கரை – 100 கிராம்
* உலர் திராட்சை – 50 கிராம்
* முந்திரி – 50 கிராம்
* வெள்ளரி விதை – 50 கிராம்
* மாதுளை – 1
* ஏலக்காய்த் தூள் – ஒரு டீஸ்பூன்.
செய்முறை:
* கேரட்டை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.
* தேங்காயைத் துருவிக்கொள்ளவும்.
* மாதுளையை முத்துக்களாக உதிர்த்துக்கொள்ளவும்.
* இப்போது முளைகட்டிய பயறை ஒரு வாயகன்ற பேசினில் வைத்து துருவிய கேரட், தேங்காய், வெள்ளரி விதை, உலர் திராட்சை, ஏலக்காய்த் தூள், கரும்புச் சர்க்கரை ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கவும்.
* பிறகு முளைகட்டிய பயறு கலவையில் மாதுளை முத்துகளைத் தூவவும்.
இப்போது சுவையான, ஆரோக்கியமான, ஆற்றல் மிகுந்த சுவையூட்டப்பட்ட முளைகட்டிய பயறு தயார் என்கிறார் படையல் சிவக்குமார். அதோடு, அதன் நன்மைகளையும் பட்டியலிடுகிறார்.
சுவையூட்டப்பட்ட முளைகட்டிய பயறு உண்பதால் ஏற்படும் பயன்கள்:
* பஞ்ச சக்திகள் நிறைந்த உணவு.
* அதிக பிராண சக்தி வாய்ந்த உணவு.
* அதிக புரதச்சத்து கொண்டது.
* வைட்டமின் பி 12 நிறைந்த உணவு.
* நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும்.
 * உடலுக்கு வலுவும் ஆற்றலும் தரவல்லது.
Share
Categories
ஆரோக்கியம் இயற்கை மருத்துவம்

வெங்காயத்தின் மருத்துவப் பயன்கள்

  • வெங்காயச் சாறு, இஞ்சிச் சாறு இரண்டையும் சம அளவு கலந்து குடித்து வந்தால் நீரிழிவு நோய் குறையும்.
  • சின்ன வெங்காயத்தை, வெவ்லம் மற்றும் நெய் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.
  • வெங்காயத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, அதில் பனங்கற்கண்டைச் சேர்த்து சட்டியில் போட்டு சிவக்க வறுத்துச் சாப்பிட்டு வந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும்.
  • வெங்காயத்துடன் உப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.
  • வெங்காயத்தைச் சுட்டுச் சாப்பிட்டுவந்தால் இருமல், கபக்கட்டு நீங்கும்.
  • வெங்காயச் சாற்றில் தேன் கலந்து குடித்துவந்தால் இருமல், மார்புச் சளி உள்ளிட்ட மார்பு நோய்கள் நீங்கும்.
  • வெங்காயச் சாற்றில் கடுகு எண்ணெய் கலந்து தடவிவந்தால் மூட்டுவலி நீங்கும்.
  • வெங்காயத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, பனங்கற்கண்டைச் சேர்த்து வதக்கி, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவந்தால் நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
Share
Categories
ஆரோக்கியம் இயற்கை மருத்துவம் மருத்துவ ஆய்வு

ரத்தத்தை சுத்தபடுத்த வழிகள்

நமது உடலில் உள்ள உறுப்புகளை சுறுசுறுப்பாக இயங்க வைக்க உதவுவது ரத்தம். அந்த ரத்தம் சுத்தமாக இருக்க வேண்டியதுதான் ரொம்வே முக்கியம். இயற்கையான முறையில் நமது உடம்பில் உள்ள ரத்தத்தை எப்படி சுத்திகரிப்பது.

  • செம்பருத்தி பூவின் இதழ்களை நன்றாகச் சுத்தம் செய்து காய வைத்து பொடி செய்து அதை தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் 1 டம்ளர் வெந்நீரில் 1 ஸ்பூன் பொடியை கலந்து குடித்து வந்தால், நமது உடல் சோர்வை குறைத்து ரத்தத்தை தூய்மை அடைய செய்யும்.
  • செம்பருத்தி பூவின் இதழ்களை நறுக்கி, அதில் எலுமிச்சை சாறு விட்டு வெயிலில் வைத்து பிசைந்து சாறு எடுத்து அதனுடன் சர்க்கரை கலந்து காய்ச்சி வடிகட்டி நீரில் கலந்து குடித்து வரவேண்டும்.
  • தினமும் நமது உணவில் பீட்ரூட்டை சமைத்து சாப்பிட்டு வந்தால், நமது உடல்பில் புத்தம் புதிய ரத்தம் உற்பத்தியாகும். மேலும் பீட்ரூட்டை நறுக்கிப் பச்சையாக எலுமிச்சைப்பழச் சாறு கலந்து சாப்பிட்டால், ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் உற்பத்தி அதிகரிக்கும்.
  • முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச்சத்து அதிகமாக இருக்கின்றது. எனவே இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்தசோகை இருப்பவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் உற்பத்தியாகும்.
  • முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு முட்டை உடைத்து பருப்புடன் ஊற்றி, கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வந்தால், ரத்தம் விருத்தியாகும்.
  • முருங்கை இலை சாறுடன் பால் கலந்து கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்குக் கொடுத்தால், ரத்தம் சுத்தம் அடைவதுடன், எலும்புகள் வலிமையடையும்.
  • இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிடலாம் அல்லது தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் கூட ரத்தம் சுத்தமாகும். ஆனால் வாத நோய் உள்ளவர்கள் இதை தவிர்க்க வேண்டும்.
Share