Categories
அறிவியல் மரங்கள்

உலகின் மிக உயரமான மரம்


உலகில் இருக்கும் மரங்களிலே மிகவும் உயரமான மரம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள “ஹைப்பீரியன்” (Hyperion) தான். 115.7 மீட்டர் (380 அடி) உயரமுடைய இந்த மரத்தின் வயது சுமார் 600 லிருந்து 800 வருடங்கள் இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. இம்மரம் கடற்கரை ரெட்வுட் (redwoods – Sequoia sempervirens) என்ற தாவர வகையைச் சார்ந்தது. காற்றினாலும் மரங்கொத்தி பறவைகளாலும் பாதிக்கப்பட்டாலும், இம்மரம் இன்னமும் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் துல்லியமான இருப்பிடம் இரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது.

கடற்கரை ரெட்வுட் வகையைச் சார்ந்த வேறு சில மரங்களும் ஹைப்பீரியனுக்கு அடுத்த நிலைகளிலுள்ளன. ஹீலியோஸ் என்ற மரம் 114.1 மீட்டரும், இகாருஸ் மரம் 113.1 மீட்டருமாக வளர்ந்து அடுத்தடுத்த நிலைகளில் உள்ளன.

Share
Categories
அறிவியல்

கண்ணாடி திடப்பொருளா திரவமா ?

நம் அன்றாட வாழ்க்கையில் சர்வ சாதாரணமாக  காணப்படக்கூடிய கண்ணாடி திடப்பொருளா அல்லது திரவப்பொருளா ? இப்படிக் கேட்டால் பொதுவாக சாதாரண மனிதர்கள் திடப்பொருள் என்றுதான் சொல்லுவர்.

ஆனால், சில தொல்லியல் ஆய்வாளர்கள் பழங்காலத்தைய சன்னல் கண்ணாடிகளை ஆய்வு செய்தபோது,  அவற்றின் கீழ்ப்பாகம் தடிமனாக இருப்பதைக் கண்டனர். இதனால், காலம் செல்லச் செல்ல, கண்ணாடி ஒருவேளை திரவமாக இருப்பதனால் புவி ஈர்ப்புவிசையால் வழிகிறதோ என சந்தேகப்பட்டனர்.  இருப்பினும் இது சரியான அனுமானம் இல்லை என்றும்,  புராதனமான சன்னல் கண்ணாடி அடிப்பகுதியில் தடித்திருப்பதற்கு பண்டை  உற்பத்தி முறையே காரணம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

திடப்பொருளின் மூலக்கூறுகளின் அமைப்பு

எனினும், கண்ணாடியின் மூலக்கூறுகள் பிணைவு அமைப்பினைப் பார்க்கும் பொழுது, அது திடப்பொருளின் மூலக்கூறு அமைப்பினைப் போல் இல்லாமல், திரவங்களின் அமைப்பினைப் போலவே உள்ளது. திடப்பொருளின் மூலக்கூறு அமைப்பு படிகமாக(Crystal) இருப்பதால், அதன் மூலக்கூறுகளின் இயக்கம் கட்டுப்படுத்த படும்.

 

கண்ணாடியின் மூலக்கூறுகளின் அமைப்பு

ஆனால் கண்ணாடியின் மூலக்கூறு அமைப்பு, திரவங்களைப் போல ஒழுங்கில்லாத அமைப்பாக இருக்கிறது. ஆனாலும், கண்ணாடி உற்பத்தி செய்யப்படும் போது திரவ நிலையில் இருந்து உறை நிலைக்கு குளிர்விக்கப்பட்டு அன்னிலையிலே தொடர்வதால், கண்ணாடியின் மூலகூறுகளால் அதிக அளவில் இயங்க முடியாது.

Share
Categories
அறிவியல் செயற்கை கோள் தலைப்புச் செய்திகள்

11 ஒளியாண்டுகள் தொலைவிலிருந்து வந்த சமிக்ஞை வேற்றுக்கிரக வாசிகளிடமிருந்து அல்ல

11 ஒளியாண்டுகள் தொலைவிலுள்ள ராஸ் 128 என்ற மங்கலான சிவப்புக் குள்ளன் நட்சத்திரத்திலிருந்து வந்ததாகக் கருதப்பட்ட “விநோத” சமிக்ஞை எதனால் என்று தீர விசாரித்த பிறகு, அது வேற்றுக்கிரக வாசிகளிடமிருந்து வந்தது அல்ல என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த “விநோத” சமிக்ஞை நம்மால் அனுப்பப்பட்டு தொலைவில் சுற்றுக்கொண்டிருக்கும் துணைக்கோள்களின் சிக்னல் குறுக்கீடுகளால் உருவாகி இருக்கலாம் என்று வானியலாளர்கள் கருதுகின்றனர்.

வானியல் வல்லுனர்களைப் பொறுத்தவரை, இதன் உண்மையான மர்மம் என்னவென்றால், இந்த சமிக்ஞைகள்  அசாதாரணமான விண்மீன் நிகழ்வுகளாலா , பிற பின்னணி பொருள்களிலிருந்து உருவானவையா அல்லது செயற்கைக்கோள் தகவல்தொடர்புகளின் குறுக்கீடுகளாலா என அவர்கள் அறுதியிட்டுக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதுதான்.

“இந்த சிக்னல்கள், வேற்று கிரக வாசிகளிடமிருந்து வந்திருக்க கூடும் என்பதே பலரையும் இவ்விஷயத்தில் ஆர்வம் காட்டச் செய்தது”, என்கிறார் போர்டோ ரிகோ பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் அபெல் மென்டெஸ் எனும் வானியல் நிபுணர்.

பிரபஞ்சத்தில் வேறு இடங்களில் வாழ்வதற்கான சூழல் இருக்கிறதா என்று கண்டுபிடிப்பதற்கான நிபுணர் குழுவினை வரவழைத்து, இது குறித்த அவர்களின்   ஊகங்களையும் கேட்டறிந்த பின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் வேற்றுக் கிரகவாசி ஆராய்ச்சிக் குழுவின்  (SETI) பெர்க்லி ஆராய்ச்சி மையம்  அதன் முடிவை வெளியிட்டுள்ளது.

“இச்சமிக்ஞைகளுக்கான சரியான விளக்கமாக இவை  ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட புவிசார் செயற்கைக்கோள்களில் இருந்து வெளியான தகவல் பரிமாற்றங்களே ஆகும். ராஸ் 128 நட்சத்திரமானது நமது வான்வெளி நடுக்கோட்டில் (celestial equator) காணப்படுகிறது; இங்குதான் நமது புவிநிலை செயற்கைக்கோள்களும் (geostationary satellites) காணப்படுகின்றன.”

 

 

Share
Categories
அறிவியல் தொழில் நுட்பம்

கொசுக்களை அழிக்க கூகுளின் புதுத் திட்டம்

வெரிலி நிறுவனம் பாக்டீரியா தொற்றிய ஆண் கொசுக்களை கலிஃபோர்னியாவிலுள்ள ஃப்ரெஷ்னோவில் வெளியே அனுப்பியுள்ளது.

இது மஞ்சள் காய்ச்சல் கொசுக்களை (Aedes aegypti) ஃப்ரெஷ்னோ விலிருந்து அழிப்பதற்கான முதல் முயற்சி. இக்கொசுக்களால் டெங்கு காய்ச்சல், சிக்குன்குனியா, ஜிக்கா வைரஸ் ஆகியவை பரவுகிறது.

கூகுளின் துணை நிறுவனமான ஆல்ஃபாபேட்ஸ் லைஃப் சயின்ஸ் (வெரிலி), தனது உயிர் அறிவியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆய்வகத்தில் ஒவ்வொரு வாரமும் சுமார் ஒரு மில்லியன் கொசுக்களை உருவாக்க உள்ளது.

உலகில் உள்ள பல நோய்களுக்கு முக்கிய காரணம் கொசு. அளவில் சிறிதாக இருந்தாலும் நோய்களை பரப்புவதில் கொசுவுக்கு முக்கிய பங்கு உண்டு. இந்த மாபெரும் அந்நிய சக்தியான கொசுவை உயிர் அறிவியல் தொழில் நுட்பவியல் மூலம் அழிக்கும் முயற்சியில் கூகுள் இறங்கியுள்ளது.

உயிர் அறிவியல் தொழில் நுட்ப துறையான (Verily Life Science)  வெரிலிஉதவியுடன் தற்போது 20 மில்லியன்ஆண் கொசுக்களை உற்பத்தி செய்து பறக்கவிடப் போகின்றது கூகுள்நிறுவனம். கொசுக்களை அதிகபடுத்துவதால் நன்மை ஏற்படுமா என சந்தேகம் ஏற்படுவதுண்டு.கொசுவை உருவாக்குவதேகொசுக்களை அழிக்கதான் என கூகுள்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது வால்பாஷியா பாக்டீரியா மூலம் மலட்டுத்தன்மை ஏற்படுத்தும் ஆண்கொசுக்களை உருவாக்கி அதை வெளியே அனுப்ப உள்ளனர். இந்த ஆண் கொசுக்களுடன் சேரும் பெண்கொசுக்கள் போடும் முட்டைகள், புதியகொசுக்களை உருவாக்கும் தன்மை அற்றது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஃபிரஸ்னோவில் உள்ள ஆய்வகத்தில் இந்த கொசுக்கள் உருவாக்கப்படுகின்றன. இது, அமெரிக்காவின் மிகப்பெரிய சோதனையாக கருதப்படுகிறது. இந்த சோதனை குறித்து எம்ஐடி டெக்னாலஜி மூத்த பொறியாளர் லினஸ் அப்ஸன் கூறுகையில், “உலக மக்களுக்கு உண்மையாக உதவ விரும்பினால் இதுபோன்று நிறைய கொசுக்களை நாங்கள் உற்பத்தி செய்ய வேண்டும். அதனை எந்தப் பகுதிக்கு அனுப்ப வேண்டும் என திட்டமிட்டு அங்கு செலுத்துவோம். இதற்கு மிகக்குறைந்த செலவே ஆகிறது. ஆஸ்திரேலியாவிலும் இந்த சோதனையை இந்த ஆண்டு நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த சோதனை நடத்துவதற்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (EPA) ஒப்புதல் வழங்கியுள்ளது. மாற்றியமைக்கப்பட்ட இந்த மலட்டு தன்மையுள்ள கொசுக்கள் மற்ற உயிரினங்களுக்கு எந்த தீங்கும் விளைவிக்காது என உறுதியளிக்கிறோம்” என்று கூறினார்.

Share
Categories
அறிவியல் தலைப்புச் செய்திகள்

11 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள நட்சத்திரத்தில் இருந்து வந்த விநோத சமிக்ஞை

சமீபத்தில் விண்வெளி ஆய்வாளர்கள் 11 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருந்து வந்த ஒரு சிக்னலை ஆய்வு செய்து வருகின்றனர்.


ராஸ் 128 என்று அழைக்கப்படும் சிவப்பு குள்ள நட்சத்திரத்தில் இருந்து  இந்த சிக்னல் கிடைத்து உள்ளது . இது சூரியனை விட  2,800 மடங்கு  மங்கலானது ஆகும். அதை சுற்றி வேறு  எந்த  கிரகம் உள்ளது என  தெரியவில்லை.

இந்த “விசித்திரமான” ரேடியோ சிக்னல்களை, மே மாதத்தில் புயூர்ட்டோ ரிக்கோ பல்கலைக்கழகத்தில் வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். அரிசிபோ நட்சத்திர ஆய்வகத்தினை (Arecibo Observatory) பயன்படுத்தி இந்த சிக்னல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆப்சர்வேட்டரி பியூர்டோ ரிக்கோவிலுள்ள  ஒரு தொட்டியின் உள்ளே கட்டப்பட்ட பெரிய வானொலி தொலைநோக்கியினால் ஆனது.

“நினைப்பதற்கு சாத்தியமற்றதாக தெரிந்தாலும், இந்த சிக்னல்கள், வேற்று கிரக வாசிகளிடமிருந்து வந்திருக்கமுடியாது என்று இவை இன்னமும் நிராகரிக்கப்பட முடியாதவை”, என்று அரிசிபாவில் போர்டோ ரிகோ பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஆல்வெல் மென்டெஸ் எனும் வானியல் நிபுணர் ஒருவர் கூறினார்.

 

 

Share
Categories
அறிவியல் பலவகைச் செய்திகள்

சூரியனின் மேற்பரப்பில் தோன்றும் பெரிய கருப்புப் புள்ளிகள்

நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வுக்கூடம்  சூரியனில் 74,560 மைல் அகலம் கொண்ட சூரியப்புள்ளியை கண்டறிந்து உள்ளது. அதற்கு ஏஆர் 2665 என பெயரிடப்பட்டு உள்ளது. இதன் பரப்பளவு பூமியை விட 19 மடங்கு பெரியதாகும். இந்த பகுதி  சுழன்று வருவதுடன் விரைவாக வளர்ந்து வருகிறது  என நாசா ஆய்வுக்கூடம் தெரிவித்துள்ளது. சூரியனில் காணப்படும் கருப்புப்புள்ளிகள் பொதுவாக சூரியனின் மற்றபகுதிகளை விட குளிர்ச்சியானதாக இருக்கும். தற்போது கண்டறியப்பட்டுள்ள இந்த பகுதியிலிருந்து  பூமியை நோக்கி கொடிய கதிர்வீச்சுகள் எழலாம் என கருதப்படுகிறது. இப்பகுதியிலிருந்து சோலார் ஃப்ளேர் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.  சோலார் ஃப்ளேர் ஏற்படும்போது இந்த பகுதிகள் மிகப் பிரகாசமாக காணப்படும். சோலார் ஃப்ளேர்  சில நிமிடங்களில் இருந்து பல மணி நேரங்கள் வரை நீடிக்கிறது.

இந்த சூரிய பகுதியில் இருந்து கடுமையான  கதிர்வீச்சின் காரணமாக  காந்த ஆற்றல் வெளிப்படுகிறது. இவற்றால் பூமியில் ரேடியோ பிளாக்அவுட்டை ஏற்படுத்தலாம், தகவல்தொடர்பு செயற்கைக்கோள்கள்  மற்றும் கதிர்வீச்சு புயல்கள் போன்றவையும் உருவாகலாம்.

Share
Categories
அறிவியல் உலகம் தலைப்புச் செய்திகள்

அண்டார்டிகாவில் டிரில்லியன் டன் எடையுள்ள பனிப்பாறை தனியாக பிளந்து மிதக்கிறது

அண்டார்டிகாவில் டிரில்லியன் டன் எடையுள்ள பனிப்பாறை தனியாக பிளந்து மிதக்கிறது. இதனால் கடல் மட்டம் சற்று உயரலாம் என்று கருதப்படுகிறது.

இப்பனிப்பாறையை பலகாலமாக விஞ்ஞானிகள் ஐரோப்பிய செயற்கைக்கோள்கள் மூலம் கண்காணித்து வந்தனர். பின்னர், ஜூலை 10 ஆம் தேதிலியிருந்து 12 தேதிக்குள் பிரிந்து விட்டதை விஞ்ஞானிகள் அறிந்தனர். இப்பனிப்பாறையின் சுற்றளவு 5,800 சதுர கிலோமீட்டர்களாகும். இதற்கு ஏ 68 என்று பெயரிட்டுள்ளனர்.

 

இதுவரை பிரிந்து வந்த மிகப்பெரிய பனிப்பாறைகளில் மிகப் பெரியது   இதுவாகும். இதன் போக்கு எப்படியிருக்கும் என்பதும் இதுவரை தெரியவில்லை. பனிப்பாறை  பிரிந்து விட்டதால் லார்சின் சி எனும் பனி அடுக்கில் 12 சதவீத பரப்பு குறைந்திருக்கிறது. இதன் மூலம் இதன் அளவை கணிக்க முடியும்.

 

கடந்த 1995 ஆம் ஆண்டிலும், 2002 ஆம் ஆண்டிலும் இதே போல லார்சன் ஏ மற்றும் பி பனி அடுக்குகளிலிருந்து பனிப்பாறைகள் பிரிந்து சென்றன. இதனால் கடல் மட்டம் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டது. இப்போதும் அது போலவே கடல் மட்டம் அதிகரிக்கலாம் என்று கூறுகிறார் பிரிட்டிஷ் ஆய்வாளர் ஒருவர்.இப்பனிப்பாறையால் அப்பகுதியில் செல்லும் கப்பல்களுக்கு அதிக சிக்கல்களை உருவாக்கும் என்று கூறப்படுகிறது. கடந்த 2009 ஆம் ஆண்டில் அண்டார்டிகா தீபகற்பத்தில் ஒரு பனிப்பாறையில் மோதி மூழ்கிய எம் டி வி எக்ஸ்ப்ளோரர் எனும் கப்பலில் பயணித்த 150 ற்கும் மேற்பட்ட பயணிகளை காப்பாற்றி அழைத்து வந்தனர்.

புவி வெப்பமடைதலின் விளைவாக இப்பிரிவு ஏற்பட்டதா என்பதை உறுதியாக கூற முடியாது எனும் விஞ்ஞானிகள் இது போன்று பனிப்பாறைகள் பிரிவது இயல்பாக நடப்பதே என்கின்றனர். மீண்டும் பனி அடுக்குகளில் பனி சேர்ந்து பனிப்பாறைகள் உருவாகலாம். ஆனாலும் விஞ்ஞானிகளிடையே இக்கருத்தில் ஒற்றுமையில்லை. ஒரு பிரிட்டிஷ் ஆய்வாளர், “எங்களது கணிப்பு மாதிரிகள் பனிப்பாறைகள் நிலையில்லாமல் இருக்கின்றன என்று கூறுகின்றன; ஆனால் மீண்டும் பனிப்பாறைகள் பிரிவது சில ஆண்டுகளிலோ, பத்தாண்டுகள் கழித்தோ நடைபெறலாம்”, என்றார்.

Share
Categories
அறிவியல் ஆரோக்கியம் மருத்துவ ஆய்வு

புஷ்வுட் பெரி புற்றுநோயைக் குணப்படுத்துமா ?

ஆஸ்திரேலியவில் காணப்படும் புஷ்வுட் பெரி என்ற பழத்திலிருந்து  எடுக்கப்பட்ட ஒரு இரசாயனம், புற்றுநோய் கட்டிகளை நீக்கும் தன்மை உடையதாக  காட்ட்ப்பட்டுள்ளது.  மேலும் இதனை விலங்குகள் மற்றும் மனிதர்களுடைய பயன்பாட்டிற்கு உபயோகிப்பதற்காக, மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதைக்குறித்து சமூக வலைத் தளங்களில், புஷ்வுட் பெரியினால் புற்றுநோயை 48 மணி நேரத்தில் குணப்படுத்த முடியும் என்றவாறு தகவல்கள் பரப்பப் படுகின்றன. ஆனால் இத்தகவலில் பாதி உண்மை, பாதி பொய் கலந்திருப்பதாகவே தெரியவருகிறது.

எது உண்மை ?

ஆஸ்திரேலியாவின் ஒரு பிராந்தியத்தில் மட்டும் காணப்படும் புஷ்வுட் பெரியிலிருந்து, EBC-46 என்ற ஒரு ரசாயனத்தை விஞ்ஞானிகள் தனிமைப்படுத்தியுள்ளனர். இந்த ரசாயனத்தை  நேரடியான ஊசி மூலம் எலிகள், பூனைகள், நாய்கள் மற்றும் குதிரைகளில் பரிசோதித்த போது, அவற்றின்  புற்றுநோய் கட்டிகளை இந்த ரசாயனத்டினால் அழிக்கும்  திறனைப் பற்றிய முதல் படியை வெற்றிகரமாக நிரூபித்துள்ளனர். தற்போது விலங்குகள் மற்றும் மனிதர்களிடம் இந்த ரசாயனத்தை குறித்த மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன .

எது பொய் ?

புற்றுநோய் என்பது பல்வேறு வகையான நோய்களைப் பொதுவாகக் குறிக்கும் ஒரு சொல். எல்லா வகை புற்றுநோய்களையும் ஒரே மருந்தால் குணப்படுத்த முடியாது.   ஆஸ்திரேலிய புஷ்வுட் பெர்ரியில் காணப்படும்  குறிப்பிட்ட EBC-46 என்ற ரசாயனப்பொருள்,  ஆய்வகத்தில் தனிமைப்படுத்தப்பட்டு, சில வகை புற்றுநோய்க் கட்டிகளை விலங்குகளில் குணப்படுத்துவதாக, ஆய்வுக்கூட  பரிசோதனைகளில் தெரிய வந்துள்ளது. இதனால் புஷ்வுட் பெரியின் மருத்துவ மதிப்பு கூடுவதாகச் சொல்ல முடியாது. ஏனென்றால், புஷ்வுட் பெரியை சாதாரணமாக சாப்பிடுவதானால், அதிலுள்ள பிற பொருட்களால் உடல் நலம் பாதிக்கப் படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த EBC-46 என்ற ரசாயனப்பொருள் இன்னும் மனிதர்களிடம் முழுமையாக சோதிக்கப்படவில்லை.  இதில் மிக முக்கியமாக நாம் பார்க்க வேண்டியது என்னவென்றால், இந்த ஆராய்ச்சி முழுக்க முழுக்க QBiotics என்ற ஃபார்மசி நிறுவனத்தினாலெயே நடத்தப்படுகிறது. அவர்களே EBC-46 ரசாயனத்தைப் பிரித்தெடுக்கும் முறைக்கான காப்புரிமையைப் பெற்றுள்ளனர்.

ஆகவே இதனை புற்றுநோய்க்கான ஒரு இயற்கை சிகிச்சையாக சமூக வலைத் தளங்களில் தகவல் பரப்புவது சரியாகப் படவில்லை.

 

 

Share
Categories
அறிவியல் மருத்துவ ஆய்வு

இறக்கும் நிலையில் உள்ளவர்களுக்கு மீண்டும் உயிர்கொடுக்கும் புதிய மருந்து

இறக்கும் நிலையில் உள்ளவரை சுமார் 4 மணி நேரம் வரை  உயிர் பிழைக்க வைத்து சுற்றி உள்ளவர்களுடன் பேச வைக்கும் புதிய வகை மருந்து ஒன்று கண்டறியபட்டு உள்ளது.

இறக்கும் நிலையில் இருக்கும் நோயாளிகளை மீண்டும் உயிர்ப்பிக்க ஒரு வகை தூக்கமின்மை மருந்து உதவுகிறது. சோல்பிடிம்( Zolpidem) என்ற  மருந்து பல்வேறு நிலைகளில் வியத்தகு விளைவுகளை ஏற்படுத்தி உள்ளதை விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.

மிச்சிகன் பல்கலைக் கழக வல்லுனர்கள் கோமா, பார்கின்சன் நோய், பக்கவாதம் மற்றும் அதிர்ச்சிகரமான மூளை காயங்கள் அனுபவித்தவர்கள் உள்பட 20 நரம்பியல் கோளாறுகள்  உள்ளவர்களிடம்  மருந்து எவ்வாறு வேலை செய்கிறது என்பதை ஆய்வு செய்து உள்ளனர். இதில் அதிகமான நோயாளிகள் சோல்பிடிம் மருத்து கொடுக்கபட்ட பிறகு  மேம்பட்டு உள்ளார்கள் என கண்டறியபட்டு உள்ளது. இந்த  மருத்தின் விளைவு 4 மணி நேரம் இருக்கும்.

இந்த ஆய்வு குறித்து ஜாமா நரம்பியல் என்ற மருத்த இதழிலின் உதவி ஆசிரியர் மார்க் பீட்டர்சன்  கூறும் போது   சில நோயாளிகள், “குறைந்தபட்ச உணர்வுள்ள” நிலைக்கு முன்னேற்றம் அடைந்துள்ளனர், அங்கு அவர்கள் சுற்றியுள்ளவர்களுடன் பேச முயற்சித்தனர். இந்த அதிசய முரண்பாடுகளில் ஒன்று, தூக்கமின்மை அல்லது நரம்பியல் நிலைமைகள் கொண்ட நோயாளிகளுக்கு எதிர் தூக்கமின்மை இருப்பதால், தூக்கமின்மையின் விளைவுகள் காணப்படுகின்றன.எனினும், மேம்பாடுகள் சம்பந்தப்பட்ட நோயாளிகளில் ஒரு சிறிய பகுதியிலேயே மட்டுமே கண்டறியப்பட்டது. என கூறினார்.

டாக்டர் மார்ட்டின் பமலஸ்கி கூறும்போது நம் மருத்துவ நடைமுறையில் இதைப் பயன்படுத்த வேண்டும் என்பது பற்றிய கேள்விகளுக்கு பதில் அளிக்க இன்னும் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும் என கூறினார்.

Share
Categories
அறிவியல் காணொளி தலைப்புச் செய்திகள் விண்கல் தாக்குதல்

பூமியை விண்கல் தாக்கும் வாய்ப்பு இருக்கிறது : வானியல் ஆய்வாளர்

பூமியைச் சுற்றியுள்ள விண்கற்களில் ஒன்று வெகு விரைவில் பூமியில் மோதப்போவதாக அயர்லாந்திலுள்ள வானியல் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். எப்போது வேண்டுமானாலும் இப்பேரழிவு நடக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

அயர்லாந்தில் உள்ள ((Queen’s University Belfast)) குவீன்ஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த வானியல் ஆராய்ச்சியாளர் ((Alan Fitzsimmons)) ஆலன் ஃபிட்சிம்மன்ஸ், 1908 ஆம் ஆண்டு சைபீரியாவில் விண்கல் விழுந்து 800 சதுர கிலோ மீட்டர் தொலைவிற்கு சேதம் விளைவித்ததைப் போல் இன்றைய உலகில் அப்படிப்பட்ட விண்கல் மோதல் நடைபெறும்போது பெரிய நகரங்கள் அழிவதற்கான வாய்ப்பிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பூமியை சுற்றியுள்ள விண்கற்களில் 1,800 அபாயகரமானவையாக கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share