Categories
அமெரிக்கா அமெரிக்கா உலகம் தலைப்புச் செய்திகள்

அமெரிக்க குடியரசு கட்சி எம்பி உட்பட 4 பேர் மீது துப்பாக்கிச்சூடு; சுட்டவர் கொல்லப்பட்டார்

அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில், குடியரசுக் கட்சியின் மூத்த எம்பி ஸ்டீவ் ஸ்கேலீஸ் மீது  துப்பாக்கிச் சூடு நடத்தப்ப்ட்டது. இந்த சம்பவத்தில் மேலும் 4 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரைச் சுட்டவர் ஜனநாயக கட்சியைச் சார்ந்தவரும், அதிபர் தேர்தல் வேட்பாளராவார் என எதிர்பார்க்கப்பட்ட பெர்னி சாண்டர்ஸின் ஆதரவாளருமான ஜேம்ஸ் ஹாட்கின்சன் என கருதப்படுகிறது. ஜேம்ஸ் ஹாட்கின்ஸன் சம்பவ இடத்திலாயே பாதுகாப்பு போலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

குடியரசுக் கட்சியின் லூசியானா எம்பி ஸ்டீவ் ஸ்கேலீஸ் உள்ளிட்டோர் பேஸ்பால் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் போது இந்த துப்பாக்கிச் சூடு நடந்தது. ஒரு குண்டு குடியரசுக் கட்சியின் எம்.பி.  ஸ்கேலீஸ்  இடுப்பு பகுதியில் பாய்ந்தது.  அவருடன் பேஸ்பால் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மேலும் 4 பேர் காயம் அடைந்தனர்.  இவர்கள் தற்போது மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Share
Categories
அமெரிக்கா அமெரிக்கா உலகம் தலைப்புச் செய்திகள்

ரஷ்யாவுடன் இணக்கம் என்பது பொய்; கோமியின் பதவி நீக்கம் சரிதான்: ஜெஃப் செஷன்ஸ்

அமெரிக்க பெடரல் அட்டார்ணி ஜெனரல் ஜெஃப் செஷன்ஸ் இன்று செனட்டில் சாட்சியம் அளிக்கையில்,  2016 தேர்தலின் போது அவர் ரஷ்யாவுடன் இணக்கமாக செயல்பட்டார் என்று எதிர்கட்சியும் ஊடகங்களும் சொல்வது கொடுரமான, வெறுக்கத்தக்க பொய் என்று கூறினார்.  மேலும், எப்.பி.ஐ. இயக்குநர் ஜேம்ஸ் கோமியை பதவி நீக்கம் செய்த விஷயத்தில் தனது பங்களிப்பு மிகவும் சரியானதே என்றார்.

மேலும் அவர் செனட் புலனாய்வுக் குழுவிடம் கூறியதாவது :

எந்தவொரு ரஷ்யருடனோ அல்லது எந்த வெளிநாட்டு அதிகாரிகளுடனோ நான் தேர்தல் பிரச்சாரத்திலோ அல்லது தேர்தலிலோ  தலையீடு குறித்து எந்த உரையாடலையும் நடத்தவில்லை. டிரம்ப்-ன் பிரச்சாரக் குழுவைச் சார்ந்த எவரும் இது குறித்து ஏதேனும் உரையாடல் நடத்தினார்களா என்றும் எனக்குத் தெரியாது.

Share
Categories
அமெரிக்கா அமெரிக்கா உலகம் தலைப்புச் செய்திகள்

அமெரிக்க முன்னாள் அரசு வழக்கறிஞர் பிரீட் பாராரா டிரம்ப் மீது குற்றச்சாட்டு

அமெரிக்க முன்னாள் முன்னிலை பெடரல் அரசு வழக்கறிஞரான பிரீட் பாராரா, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் இருந்து பல தொலைபேசி அழைப்புகளை பெற்றதாகவும், மூன்றாவது தொலைபேசி அழைப்பு ஒன்றை எடுக்காத பிறகு, தான் பதவி நீக்கம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். இது குறித்து வெள்ளை மாளிகை இன்னும் பதிலளிக்கவில்லை.

நிர்வாக கிளையையும், சுயாதீன குற்றவியல் ஆய்வாளர்களையும் பிரிக்கிற வழக்கமான எல்லைகளை டிரம்ப் தாண்டி விட்டதாக பிரீட் பாராரா தெரிவித்தார்.

பிரீட் பாராரா நியுயார்க்  தெற்கு மாவட்ட முன்னிலை பெடரல் அரசு வழக்கறிஞராக 2009-லிருந்து 2016 வரை பணியாற்றினார்.

இந்தியாவில் பிறந்த பிரீட் பாராரா, 1970-ல் அவரது பெற்றோருடன் அமெரிக்காவில் குடிபெயர்ந்தவர். வழக்கறிஞராக பணியாற்றிய இவர் ஜனநாயக கட்சியின் செனட்டர் சக் ஷூமரின் ஆலோசகராகவும் சிலகால பணியாற்றினார்.

பல்வேறு புகழ்பெற்ற நிறுவனங்களையும் கோர்ட்டுக்கு இழுத்து தண்டனை வாங்கிக் கொடுப்பதில் பேர்பெற்றவர்.

பாராராவால் தண்டனையும் தண்டப்பணம் செலுத்தவும் வைக்கப்பட்டவர்கள் சிலர் :

  • தேவ்யானி கோப்ரகெடே – நியுயார்க் இந்திய தூதரகத்தில் உதவி கான்சலாக பணியாற்றிய இவரது வீட்டில் வேலை பார்த்த ஒருவர் வெளியேறி, தனக்கு சரியான சம்பளம் கொடுக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு பதிவு செய்தார். இந்த வழக்கில் இந்திய அரசின் எதிர்ப்புகளை மீறி தேவ்யானிக்கு பாராராவினால் தண்டனை வாங்கி கொடுக்கப்பட்டது.
  • நியுயார்க் வால் தெருவில் பங்குச் சந்தை உள் வர்த்தகம் (insider trading) என்ற குற்றச்சாட்டில் இலங்கைத் தமிழரான ராஜ் ராஜரத்னமும் அவரது கூட்டாளிகளும் பாராராவால் தண்டனை வாங்கி கொடுக்கப்பட்டனர்.
  • சிட்டி பாங்க் – ஆபத்தான கடன்கள் என்ற குற்றச் சாட்டில், சிட்டி பாங்க் பெருந்தொகையை தண்டப்பணமாக செலுத்த வைத்தார்.

 

Share
Categories
அதிபர் டிரம்ப் அமெரிக்கா உலகம் உள்நாட்டு புலனாய்வுத் துறை தலைப்புச் செய்திகள்

அமெரிக்க முன்னாள் உளவு இயக்குனர் சாட்சியத்தில் வெளியான 6 விஷயங்கள்

அமெரிக்க மத்தியப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் இயக்குநர் ஜேம்ஸ் கோமி, செனட் புலனாய்வுக் குழுவிடம் சாட்சியமளித்தார்.

சுமார் 3 மணிநேரம் நீடித்த சாட்சியத்தில், வெள்ளை மாளிகை விருந்து ஒன்றில், தமக்கு விசுவாசமாக நடந்துகொள்ளுமாறு அதிபர் கேட்டுக்கொண்டதாக அவர் சொன்னார்.

மேலும் அவரது சாட்சியத்திலிருந்து வெளியாகும் 6 விஷயங்கள் :

1) டிரம்ப் மத்தியப் புலனாய்வுப் பிரிவின் விசாரணையில் இல்லை

செனட்டர் மார்கோ ரூபியோவின் கேள்வியொன்றுக்கு, கோமி அளித்த பதிலில் ‘டிரம்ப் மத்தியப் புலனாய்வுப் பிரிவின் விசாரணையில் இல்லை’ என்று கூறியிருக்கிறார்.

2) ஜேம்ஸ் கோமி விசாரணையின் ஆவணங்களை ஊடகங்களில் கசியவிட்டார்

ஜேம்ஸ் கோமி அவரது நண்பர்களின் வழியாக விசாரணையின் ஆவணங்களை ஊடகங்களில் கசியவிட்டதை ஏற்றுக்கொண்டார்.

3) டிரம்ப் நீதிக்குத் தடை ஏற்படுத்தினார் என்ற வாதம் இனி எடுபடாது

குடியரசு கட்சியின் செனட்டர் ஜேம்ஸ் ரிஷ், கோமியிடம் எழுப்பிய கேள்விகளின் அடிப்படையில் பார்த்தால், டிரம்ப் கோமியிடம் இப்படித்தான் செய்யவேண்டும் என்று கூறவில்லை என்பதை கோமி  ஒத்துக்கொண்டார்.

4) நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகை பொய்ச்செய்தி வெளியிட்டது என்று கோமி கூறினார்

ஒரு கேள்விக்குப் பதிலளிக்கையில், கோமி சொல்வது :  “நான் ரகசிய செய்திகளைப் பற்றி எழுதும் நிருபர்களைக் குறை சொல்லவில்லை.. பிரச்சனை என்னவென்றால், இவைகளைப் பற்றி எழுதுபவர்களுக்கு உண்மையில் என்ன நடக்கிறது என்று தெரிவதில்லை.. தெரிந்தவர்கள் அவைகளைப் பற்றி பேசுவதில்லை..”

5) அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவின் அரசு வழக்கறிஞர் லொரேட்டா லின்ச், ஹிலாரியின் மீதான விசாரணையில் குறுக்கிட்டார்

6) கோமியின் குற்றச்சாட்டுகள் பொதுவாக அதிருப்தியடைந்த முன்னாள் ஊழியர்கள் சொல்வதைப் போலவே உள்ளது

 

 

 

 

Share
Categories
அதிபர் டிரம்ப் அமெரிக்கா உலகம் கத்தார் தலைப்புச் செய்திகள் மத்திய கிழக்கு நாடுகள்

கத்தார் விவகாரம் குறித்த டிரம்பின் ட்வீட் : ‘தீவிரவாதத்துக்கான முடிவின் தொடக்கம்’

‘கத்தாருக்கு எதிராக ஐக்கிய அரபு நாடுகள் எடுத்து வரும் நடவடிக்கைகள், தீவிரவாதத்துக்கான முடிவின் தொடக்கம்’ என்று ட்விட்டர் மூலம் கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.

கத்தார் நாடு தீவிரவாதத்துக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் கூறி சவுதி அரேபியா, ஐக்கிய அரேபிய நாடுகள், எகிப்து மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள், தூதரகத் தொடர்புகள் உள்பட கத்தாருடனான அத்தனை தொடர்புகளையும் துண்டிப்பதாக அறிவித்துள்ளன. கத்தார் நாட்டின் விமானங்கள், கப்பல்கள் அனைத்தும் இன்னும் இரண்டு வார காலத்தில் வெளியேற வேண்டும் என பஹ்ரைன் உத்தரவிட்டுள்ளது.

மேலும் எமிரேட்ஸ், எத்திஹாட் ஏர்வேஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் கத்தாருக்கான அனைத்து விமான சேவைகளையும் நிறுத்தவுள்ளதாக அறிவித்துவிட்டன.

இந்த நிலையில்தான் ட்ரம்ப், ‘நான் சமீபத்தில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சுற்றுப் பயணம் சென்றேன். அப்போது, தீவிரவாத சிந்தனை கொண்டவர்களுக்கு இனிமேலும் நிதி வழங்கப்படக் கூடாது என்று வலியுறுத்தினேன். இதை நான் கூறியபோது, தலைவர்கள் கத்தாரை நோக்கி கையைக் காட்டினர். தீவிரவாதத்துக்கு ஆதரவாக செயல்படுவோர் மீது நாங்கள் கண்டிப்பாக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று உறுதி அளித்தனர். கத்தாரின் நிலைமையை இப்போது பாருங்கள். இதுவே தீவிரவாதத்தின் முடிவின் தொடக்கமாக இருக்கலாம்.’ என்று கூறியுள்ளார்.

Share
Categories
அமெரிக்கா அமெரிக்கா அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் உலகம்

அமெரிக்காவில் நடந்த ‘ஸ்பெல்லிங் பீ’ போட்டியில் இந்திய சிறுமி வெற்றி

அமெரிக்காவில் நடைபெற்ற, ‘தேசிய ஸ்பெல்லிங் பீ’ போட்டியில், இந்திய வம்சாவளியை சேர்ந்த, அனன்யா வினய், 12, முதலிடம் பெற்றார். இவ்வகை போட்டியில், 13-வது முறையாக தொடர்ந்து இந்திய வம்சாவளியினர் வெற்றி பெற்று வருகின்றனர்.

அமெரிக்காவில், ஆங்கில வார்த்தைகளுக்கான சரியான, ‘ஸ்பெல்லிங்’ சொல்லும், ‘தேசிய ஸ்பெல்லிங் பீ’ போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடப்பது வழக்கம். இந்த போட்டிகளில், உலக நாடுகளை சேர்ந்த, நுாற்றுக் கணக்கான போட்டியாளர்கள் பங்கேற்பர். அவர்களில், மிகச் சிறந்த போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, இறுதிச் சுற்றுப் போட்டிக்கு அனுமதிக்கப்படுவர்.

இதுவரை நடந்த போட்டிகளில், தொடர்ந்து, 12 ஆண்டுகளாக, இந்திய வம்சாவளியை சேர்ந்த போட்டியாளர்களே வெற்றி பெற்று வந்துள்ளனர். இந்நிலையில், இந்த ஆண்டிற்கான, ‘தேசிய ஸ்பெல்லிங் பீ’ போட்டியில், பல்வேறு நாடுகளை சேர்ந்த, 291 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
அவர்களில் சிறந்த போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, கடைசியாக, 15 பேர் மட்டும், இறுதிப் போட்டிக்கு அனுமதிக்கப்பட்டனர்.
இறுதிப் போட்டியில், இந்திய வம்சாவளியை சேர்ந்த, அனன்யா வினய் மற்றும் ரோஹன் ராஜீவ் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில், கனடாவில் வசிக்கும் அனன்யா வினய், போட்டியில் வெற்றி பெற்றார். இதையடுத்து, அவருக்கு, 26 லட்சம் ரூபாய் பரிசளிக்கப்பட்டது. அமெரிக்காவில் நடக்கும் இந்த போட்டியில், தொடர்ந்து, 13வது முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவரே மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.
பொதுவாக, அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் அதிகமாகப் படித்தவர்களாகையால், தங்கள் குழந்தைகளை இதுபோன்ற போட்டிகளில் பங்கேற்க ஊக்குவிக்கின்றனர். இருப்பினும், அமெரிக்க விளையாட்டுத் துறையில் இவர்களின் பங்கு வெகு குறைவே. இந்தியக் குழந்தைகள் கிரிக்கெட் விளையாட்டைத் தவிர மற்ற அமெரிக்க விளையாட்டுகளான பேஸ்பால், அமெரிக்கன் புட்பால் போன்றவற்றில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை.
Share
Categories
அமெரிக்கா உலகம் ரஷ்யா

குறிப்பிடும்படியான சான்றுகள் எதுவும் இல்லை, எல்லாம் வெறும் ஊகங்களே : அமெரிக்க தேர்தலில் எவ்வித குறுக்கீடும் இல்லையென மறுக்கிறார் புடின்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில்  ரஷ்யாவின் தலையீடு இருந்தது என்ற குற்றச்சாட்டுகளை மறுத்தார். “அதற்கான எவ்வித ஆதாரமும் இல்லை” என்றும் கூறினார்.

தூய பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார மன்றத்தில் ஊடகவியலாளர்களிடம் உரையாற்றுகையில், விளாடிமிர் புடின் கூறியதாவது :

ரஷ்ய தலையீடு குறித்த குறிப்பிடும்படியான சான்றுகள் எதுவும் இல்லை, மிஞ்சுவது வெறும் ஊகங்களேயன்றி வேறெதுவும் இல்லை.  இப்பயனற்ற, தீங்கு விளைவிக்கும்  வதந்திகள் நிறுத்தப்பட வேண்டும்.

மேலும் அவர் கூறுகையில் “இவ்வதந்திகள் சர்வதேச உறவுகளையும், உலகப் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகள் ஆகியவற்றை சேதப்படுத்தும். நாம்  சரியான  ஒரு கூட்டணியைத் தொடங்க வேண்டியது அவசியமாகும்.” என்றார்.

“ரஷிய ஹேக்கர்களுடையதாக கூறப்படும் இன்டர்னெட் ஐ.பி. முகவரிகள் மிக எளிதாக தில்லுமுல்லு செய்து மாற்றப்படக்கூடியவையாகும். ஒரு 3 வயது குழந்தையால் அதைச் செய்ய முடியும். ஆகவே, அதையெல்லாம் ஆதாரமாக ஏற்க முடியாது.” என்றும் விளாடிமிர் புடின் கூறினார்.

 

Share
Categories
அதிபர் டிரம்ப் அமெரிக்கா உலகம் பாரிஸ் காலநிலை ஒப்பந்தம்

பாரிஸ் காலநிலை மாற்ற ஒப்பந்தம்: அமெரிக்கா வெளியேறியது

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்  வியாழனன்று தன்னுடைய நிர்வாகம் பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறும் என்று அறிவித்தார்.

“பாரிஸ் ஒப்பந்தம் அமெரிக்காவிற்கு மிக மிக நியாயமற்றது. ஆகவே நாம் வெளியேறுகிறோம்”, என்று டிரம்ப் கூறினார்.

டிரம்ப்பின் முடிவு அவரது தேர்தல் பிரச்சார வாக்குறுதியை பூர்த்தி செய்வதுடன், குடியரசு கட்சியினரின் உலகளாவிய காலநிலை ஒப்பந்த எதிர்ப்பினை திருப்திப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாரிஸ் உடன்பாட்டின் விமர்சகர்கள் அது பொருளாதாரத்தைப் பாதிக்குமென வாதிடுகின்றனர், ஆனால் ஆதரவாளர்கள் அது எதிர்காலத்தில் புதிதாக வேலைகளை உருவாக்கும் என்று கூறுகிறார்கள்.

“பாரிஸ் ஒப்பந்தம் நமது பொருளாதாரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும்; அது நம்மை நிரந்தரமாக அனுகூலமற்ற நிலைக்கு  உட்படுத்துகிறது.” என்று டிரம்ப் கூறினார்.

டிரம்ப்பின் அறிவிப்பிற்கு உலகத் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர்.  இவ்வொப்பந்தம் மீண்டும் மறுபரிசீலனை செய்யப்படலாம் என்று டிரம்ப் கூறியதை மூன்று முக்கிய ஐரோப்பியத் தலைவர்கள் மறுத்தனர்.

Share
Categories
அதிபர் டிரம்ப் அமெரிக்கா உலகம் பாரிஸ் காலநிலை ஒப்பந்தம்

பாரிஸ் காலநிலை ஒப்பந்தம்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிவை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை திரும்பப் பெற வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஒப்பந்தம் மற்றும் இதைத் திரும்பப் பெறுதலினால் என்ன நடக்கும் என்பது பற்றி  சில  தகவல்கள் கீழே காணலாம் :

பாரிஸ் காலநிலை ஒப்பந்தம் என்றால் என்ன?

ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிர்வாகத்தின் கீழ் உள்ள அமெரிக்கா உட்பட ஏறக்குறைய 200 நாடுகள், 2015 ஆம் ஆண்டில் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட தங்கள் பசுமை இல்ல வாயு உமிழ்வை தானாக குறைப்பதற்கு ஒப்புக்கொண்டன. ஒவ்வொரு நாடுகளும் தங்கள் உமிழ்வு இலக்குகளை தாங்களாகவே அமைத்துக்கொள்ளலாம். எனினும், இந்த இலக்குகள் அவர்களை சட்டப்பூர்வமாக கட்டுப்படுத்தாது.

அமெரிக்கா என்ன உறுதியளித்தது?

அமெரிக்கா தனது வருடாந்திர பசுமைக்குடில் வாயு உமிழ்வை 2025 – ஆம் ஆண்டில்  2005 -ல் இருந்ததைக் காட்டிலும்  26 முதல் 28 சதவிகிதம்  குறைக்க உறுதியளித்தது.  இதனால் 1.6 பில்லியன் டன் வருடாந்திர பசுமைக்குடில் வாயு உமிழ்வுகள் குறைக்கப்படும்.

உலக அளவில் கார்பன் வாயு உமிழ்வில் அமெரிக்கா இரண்டாவது இடத்திலும், சைனா முதலிடத்திலும் இருக்கின்றன.

ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடுகள் எவை ?

நிகாரகுவா மற்றும் சிரியா. காலநிலை மாற்றத்திற்கான ஐ.நா. மாநாட்டில் பங்கேற்ற 197 நாடுகளில்,   இவ்விரு நாடுகளும் கையெழுத்திடவில்லை.

இதில் டிரம்பின் நிலைப்பாடு என்ன ?

காலநிலை மாற்றம் அமெரிக்க பொருளாதாரம் பாதிக்கப்படுவதற்கு சீனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு “ஏமாற்றுவித்தை” என்று பதவி ஏற்பதற்கு முன்னதாக டிரம்ப் கூறியுள்ளார். பரந்த விஞ்ஞான ஒத்துழைப்பை மீறியதாக இந்த வலியுறுத்தல் உள்ளது. டிரம்பின் கடந்த வார  வெளிநாட்டு பயணத்தின் போது, ஐரோப்பிய தலைவர்கள் அமெரிக்கா இவ்வுடன்படிக்கையில் தொடரவேண்டும் என  வலியுறுத்தினர். இத்தாலியில் நடந்த G-7 உச்சி மாநாட்டின் போது, மற்ற G-7 உறுப்பினர் நாடுகளுக்கு இதுகுறித்து டிரம்ப் மறுப்பு தெரிவித்தார்.

“அடுத்த சில நாட்களில் பாரிஸ் உடன்படிக்கையில் என் முடிவை நான் அறிவிப்பேன்,” என  டிரம்ப் புதன்கிழமை ட்வீட் செய்தார்.

அமெரிக்கா பின்வாங்கினால் என்ன அர்த்தம்?

காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கான நடவடிக்கைகளை நிராகரிப்பதனால் உலகின் தொழில்மயமான பொருளாதாரங்களில் ரஷ்யா மட்டுமே அமெரிக்காவுடன் இணக்கமாக காணக்கூடிய நிலை ஏற்படும் .

 

 

 

Share
Categories
அதிபர் டிரம்ப் அமெரிக்கா உலகம் எகிப்து

கிறிஸ்துவர்கள் மீதான தாக்குதல்கள் முடிவுக்கு வர வேண்டும்: டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் “கிறிஸ்துவர்கள் மீதான கொலை தாக்குதல்கள் முடிவுக்கு வர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

எகிப்தில் மின்யா மாகாணத்தில் கிழக்குப் பகுதியில் செயிண்ட் சாமுவேல் தேவலாயத்துக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்த கிறிஸ்துவர்கள் மீது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 28 பேர் பலியாகினர். 20 பேர் காயமடைந்தனர்.

இந்தச் சம்பவத்துக்கு உலகத் தலைவர்கள் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்தனர்.

இத்தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறும்போது, “எகிப்தில் கிறிஸ்துவர்கள் மீது நடத்தப்பட்டது இரக்கமற்ற தாக்குதல். ஏராளமான அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். பொது மக்களுக்கு எதிராக தீவிரவாதிகள் போரில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய கிழக்கு நாடுகள் கிறிஸ்துவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். கிறிஸ்துவர்களுக்கு எதிரான கொலைகள் முடிவுக்கு வர வேண்டும். இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு விரைவில் தண்டனை வழங்கப்பட வேண்டும். எகிப்து மக்களுக்கு அமெரிக்கர்கள் துணை நிற்பார்கள், நமது எதிரிகளை தோற்கடிப்போம்” என்றார்.

Share