Categories
அதிபர் டிரம்ப் அமெரிக்கா உலகம் சீனா தலைப்புச் செய்திகள் ரஷ்யா வட கொரியா

வடகொரிய ஏவுகணைச் சோதனைகளை ஊக்குவிப்பவர்கள் சீனாவும், ரஷ்யாவுமே : அமெரிக்கா

வடகொரிய ஏவுகணைச் சோதனைகளை பொருளாதார ரீதியாக  சீனாவும், ரஷ்யாவுமே ஊக்குவிக்கின்றன என அமெரிக்க வெளியுறவு செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் கூறியுள்ளார்.

நேற்று டில்லர்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனாவும் ரஷ்யாவும் வட கொரியாவில் இருந்து வளர்ந்துவரும் அணுசக்தி அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும் என்று  அழைப்பு விடுத்தார்.

வெள்ளிக்கிழமை வடகொரியா  நடத்திய ஹுவாசாங்-14 ஏவுகணையை சோதித்தது. இந்த ஏவுகணை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ், சிகாகோ போன்ற பெரிய நகரங்களை தாக்க வல்லது என்று வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமீபத்திய வடகொரியாவின் ஏவுகணை சோதனைகள் குறித்து கூறுகையில்,  “வடகொரியாவின் இந்த நடவடிக்கை பொறுப்பற்றது, ஆபத்தானது. உலக நாடுகளைத் தொடர்ந்து அச்சுறுத்தி வரும் வடகொரியாவின் இந்த ஏவுகணை நடவடிக்கைகள் அந்நாட்டை தனிமைப்படுத்தும், அதன் பொருளாதாரத்தை வலுவிழக்கச் செய்யும்” என்று கூறிப்பிட்டிருந்தார்.

அமெரிக்க செனட் சபை வடகொரியா மீதான பொருளாதார தடைகளை  நிறைவேற்றிய சில மணி நேரங்களில் வடகொரியா இந்த புதிய ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
Categories
இந்தியா கர்நாடகா தலைப்புச் செய்திகள்

பெங்களூரு மெட்ரோவில் இந்தியில் பெயர்ப்பலகை கூடாது : முதல்வர் சித்தராமையா

பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையத்தில் இந்தியில் பெயர்ப் பலகை வைப்பதற்கு எதிராக கன்னட அமைப்பினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக, பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையத்தில் இந்தியில் பெயர்ப்பலகை வைக்கலாகாது என எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.

அண்மையில் கன்னட அமைப்பினர் மெட்ரோ ரயில் நிலையங்களில் இந்தி பெயர்ப்பலகைகளை தார் பூசி அழித்தனர். மேலும் மெட்ரோ வில் பணியாற்றும் இந்தி பேசும் அதிகாரியை இடமாற்றம் செய்யக் கோரியும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்நிலையில் மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு முதல்வர் சித்தராமையா நேற்று  எழுதிய  கடிதத்தில், “பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டமானது மத்திய, மாநில அரசுகளின் சரிபாதி நிதியில் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் மத்திய அரசின் மும்மொழி திட்டத்தின்படி இந்தி, ஆங்கிலம், கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் பெயர்ப்பலகை மற்றும் அறிவிப்பு இடம்பெற்றுள்ளன.

இந்தி பேசாத மாநிலமான கர்நாடகாவில் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே பெயர்ப் பலகை வைக்க வேண்டும். இந்தியில் பெயர்ப்பலகை கூடாது என பெங்களூருவில் கன்னட அமைப்பினரும், எழுத்தாளர்களும் தொடர் போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தி பெயர்ப்பலகைகளை மறைத்தும், தார் பூசி அழித்தும் வருகின்றனர்.

பெங்களூருவில் இந்தி தெரியாத மக்கள் அதிகளவில் வாழ்வதால் இந்தியில் பெயர்ப்பலகை தேவை யில்லை. மேலும் இந்தி பெயர்ப் பலகை மாநில மக்களின் உரிமையை பறிப்பதாக உள்ளது. எனவே இந்தியில் வைக்கப்பட்டுள்ள பெயர்ப்பலகைகள் உடனடியாக அகற்றப்பட வேண்டும். இனிவரும் காலத்தில் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே பெயர்ப்பலகை வைக்க வேண்டும். மிகவும் உணர்வுப்பூர்வமான இந்த விஷயத்தில் கர்நாடக அரசின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சித்தராமையாவின் கடிதத்துக்கு கன்னட அமைப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Share
Categories
இந்தியா கர்நாடகா காங்கிரஸ் குஜராத் தலைப்புச் செய்திகள் பா.ஜனதா

குஜராத் காங். எம்.எல்.ஏ.க்கள் 44 பேர் பெங்களூரில் தஞ்சம், 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா

குஜராத்தில்  காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் இரண்டு நாட்களில் ராஜினாமா செய்ததையடுத்து, மீதமுள்ளவர்களை பாதுகாக்க 44 எம்.எல்.ஏ.க்கள் கூண்டோடு பெங்களூரில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

குஜராத்தில் வருகின்ற ஆகஸ்ட் 8-ம் தேதி 3 மாநிலங்களவை தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.  அங்கு பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. இங்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்கள் கடந்த இரண்டு நாட்களில் அடுத்தடுத்து ராஜினாமா செய்துள்ளனர். அதில் மூன்று பேர் பா.ஜ.க.வி. இணைந்துவிட்டனர். பணத்தையும், அதிகாரத்தையும் வைத்து பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களை மிரட்டுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

இந்த நிலை மேலும் தொடராமல் தடுக்க எஞ்சிய எம்.எல்.ஏ.க்கள் 44 பேரும் இரவோடு இரவாக பெங்களூருவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் சொந்த ஊரில் இருக்கும் பட்சத்தில் பிரதமர் நரேந்திர மோடியோ, பாஜக கட்சியினரோ குதிரைபேரம் நடத்தி அவர்களை மிரட்டி தங்களது பக்கம் வளைத்துவிடுவார் என்பது காங்கிரசாரின் அச்சம்.

மானிலங்களவை வேட்பாளர்களாக பா.ஜ.க. சார்பில் அக்கட்சியின் தலைவர் அமித்ஷா மற்றும் மத்திய மந்திரி ஸ்மிரிதி ராணி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் சார்பில் அகமது பட்டேல் களமிறங்குகிறார். பட்டேல் வெற்றி பெற வேண்டுமானால் கண்டிப்பாக 44 எம்.எல்.ஏ.க்களின் ஓட்டுகளும் தேவை. எம்.எல்.ஏ.க்களில் ஒருவர் குறைந்தால் கூட அவர்களது வெற்றி கேள்விக்குறி ஆகிவிடும். இதை தடுக்கவே கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்க வைத்தது போலவே, குஜராத்தை விட்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். காங்கிரஸ் ஆட்சி நடத்தும் கர்நாடகாவில் அவர்கள் சில நாட்கள் தங்க வைக்கப்படுவதே பாதுகாப்பு என்று கருதி அந்த கட்சி இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.

Share
Categories
அதிபர் டிரம்ப் அமெரிக்கா குடியரசு கட்சி தலைப்புச் செய்திகள்

வெள்ளை மாளிகையின் தலைமை அலுவலரான ரெயின்ஸ் ப்ரீபஸுக்கு பதிலாக ஜான் கெல்லி நியமனம்

வியாழனன்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்,   வெள்ளை மாளிகையின் தலைமை அலுவலராக இருந்த ரெயின்ஸ் ப்ரீபஸுக்கு பதிலாக  உள்நாட்டு பாதுகாப்பு மந்திரி ஜான் கெல்லியை நியமித்துள்ளார். ஓய்வு பெற்ற ஜெனரலும் அரசினால் கௌரவப்படுத்தப் பட்டவருமான ஜான் கெல்லி குடிவரவு  அமலாக்கத்தினை தனது நிர்வாகம்  நடைமுறைப்படுத்த வழிவகுத்தவர்.

இந்த அதிர்ச்சிகரமான மாற்றம் ப்ரீபஸுக்கும்  புதிய வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு இயக்குனர் அந்தோனி ஸ்காரமுக்கிக்கும் இடையே, வெஸ்ட் விங்ஙில் இந்த வாரம் வெளிப்படையாக நிகழ்ந்த மோதல்கள் எல்லவற்றுக்கும் முத்தாய்ப்பாக நிகழ்ந்துள்ளது.

அந்தோனி ஸ்காரமுக்கி வெள்ளை மாளிகையின் பதவியில் நியமிக்கப் பட்டபின், ஊடகச் செயலாளர்  ஷான் ஸ்பைசர் அதனை ஆட்சேபித்து, ஒரு வாரத்திற்கு முன்னர் பதவி விலகினார். அதனை தொடர்ந்து ரெயின்ஸ் ப்ரீபஸ்  அடுத்ததாக பதவி விலகக் கூடும் என்ற ஊகம் பரவலாக எழுந்திருந்தது.

குடியரசுக் கட்சியின் முன்னாள் தலைவரான ப்ரீபஸ், வியாழனன்று ரகசியமாக ராஜினாமா செய்தார் என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

ப்ரீபஸ் வெளியிட்ட ஒரு அறிக்கையில், “இந்த ஜனாதிபதிக்கும், நமது நாட்டிற்கும் சேவை செய்வது எனது வாழ்க்கையின் மிகப்பெரிய கௌரவமாக கருதுகிறேன்.  இந்த மிக சிறந்த வாய்ப்பை வழங்கியதற்காக  ஜனாதிபதிக்கு நன்றி கூற விரும்புகிறேன். ஜனாதிபதியின் செயல் மற்றும் கொள்கைகளின் வலுவான ஆதரவாளராக தொடர்ந்து பணியாற்றுவேன். எனது பணியைத் தொடர ஜான் கெல்லியைக் காட்டிலும் சிறப்பானவர் யாரும் இல்லை. கடவுளின் ஆசீர் அவருடன் இருக்கவும், பெரும் வெற்றி அவருக்கு கிடைக்கவும் வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 

Share
Categories
அதிபர் டிரம்ப் அமெரிக்கா தலைப்புச் செய்திகள்

ரஷியா, ஈரான், வடகொரியா நாடுகளின் மீதான பொருளாதார தடை: அமெரிக்க செனட் சபை ஆதரவு

ரஷியா, வடகொரியா, ஈரான் ஆகிய நாடுகளின் மீது  பொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்க செனட் சபை ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்த வார தொடக்கத்தில் பிரதிநிதிகள் சபை இச்சட்டத்திற்கு பெருவாரியான உறுப்பினர்களின் ஆதரவுடன் ஒப்புதல் தெரிவித்திருந்தது. அமெரிக்க நியமப்படி, பிரதி நிதிகள் சபையில் ஒப்புதல் பெற்றாலும் அதற்கு செனட் சபையிலும் அனுமதி பெற வேண்டும். ஆகவே செனட் சபைக்கு இந்த விவகாரம் கொண்டு வரப்பட்டது. அங்கு நடந்த விவாதத்துக்கு பிறகு செனட் சபையில் ஓட்டெடுப்பு நடந்தது. அதில் இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 98 பேரும், எதிராக 2 பேரும் ஓட்டு போட்டனர். இதனால் தீர்மானம் நிறைவேறியது.

இரு சபைகளிலும் சட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதனை அமல்படுத்த அதிபரின் கையொப்பத்திற்காக அனுப்பப்படும்.

ஆனால், இந்த நாடுகளுக்கு எதிரான தடை சட்டத்திற்கு அரசியல் ஆதரவு உள்ள போதிலும் அதன் அமலாக்கத்தை தடுக்க அதிபர் டிரம்பின் வீட்டோ அதிகாரத்தால் முடியும்.

Share
Categories
அமெரிக்கா உலகம் தலைப்புச் செய்திகள்

உலக பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸை சிறிது நேரம் முந்திய அமேசான் நிறுவனர்

நேற்று (வியாழக்கிழமை) சிறிது நேரத்திற்கு அமேசான் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியான ஜெஃப் பெசோஸ்  உலகின் மிகப்பெரிய பணக்காரர் என்ற பெருமையை பெற்றிருந்தார். பின்னர், பில்கேட்ஸ் மீண்டும் மிகப்பெரிய பணக்காரர் என்ற நிலையை தக்கவைத்துக் கொண்டார்.

ஜெஃப் பெசோஸின்  சொத்து மதிப்பு சுமார் 91.4 பில்லியன் டாலர்களாக இருந்தது. பின்னர், அமேசான் நிறுவனத்தின் பங்குகளின் விலை சரிவை சந்தித்த காரணத்தால் உலக பணக்காரர்கள் பட்டியலில் அவர் வகித்த முதல் இடம் பறிபோனது. தொடர்ந்து, அந்த இடத்தை மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் மீண்டும் தக்கவைத்து கொண்டார்.

அமேசான் நிறுவனத்தின் சுமார் 17 சதவீத பங்குகளை பெஸோஸ் தன் வசம் வைத்துள்ளார். அதன் மதிப்பு சுமார் 500 பில்லியன் டாலர்களாகும். வாஷிங்டன் போஸ்ட் என்ற நாளிதழை வாங்கியுள்ள பெஸோஸ், விண்வெளி ராக்கெட் தொழில் ஒன்றையும் அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
Categories
உலகம் தலைப்புச் செய்திகள் பாக்கிஸ்தான்

பனாமா பேப்பர்ஸ் விவகாரம்: பாகிஸ்தான் பிரதமர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்

வெளிநாட்டு வங்கிகளில் சட்டவிரோதமாக பணம் பதுக்கியது குறித்த பனாமா பேப்பர்ஸ் என்ற பெயரில் தகவல்கள் அம்பலமானதையடுத்து, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் மீது அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் நவாஷ் ஷெரீஃப்பை தகுதி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

பனாமா பேப்பர்ஸ் என்ற பெயரில் உலகளவில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்கள் செய்துள்ள ஊழல் குறித்த தகவல் அம்பலமானது. இதில் லண்டனில் சட்டவிரோதமாக சொத்துக்களை குவித்துள்ளதாக பனாமா ஆவணங்களில் தகவல் வெளியானது. சர்ச்சயைில் சிக்கிய நவாஸ் ஷெரீப்பிற்கு எதிராக அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பனாமா ஊழல் தொடர்பாக நவாஸ் ஷெரீப் மீது 8 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தியது. இவ்விசாரணையில் நவாஸ் மீதான குற்றச்சாட்டுக்கள் உண்மை என கண்டறியப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கபட்டது. வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு தற்போது அவரை அதிரடியாக தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் நவாஸ் குடும்பத்தினர் மீதான புகார் குறித்தும் வழக்கு தொடர உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற தீர்ப்பை அடுத்து, நவாஸ் ஷெரீஃப் பதவி விலகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கறுப்பு பணம் சேர்த்தார் என்றும் அவர் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

நவாஸ் ஷெரீஃப் தவிர அவரது மகள் மற்றும் மருமகனும் தவறிழைத்திருப்பதாக நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

 

Share
Categories
எடப்பாடி பழனிசாமி தமிழகம் தலைப்புச் செய்திகள் திமுக ஸ்டாலின்

நீட் தேர்வு: திமுக போராட்டம் நடத்த ஐக்கோர்ட் அனுமதி; தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம்

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு முழு விலக்கு அளிக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் இன்று நடத்தப்பட்டது. இதனிடையில் தி.மு.க. மனித சங்கிலி போராட்டத்துக்கு அனுமதி வழங்க மறுத்து சேலம் போலீஸ் கமிஷனர் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னையில்  22 இடங்களில் போலீஸ் தடையை மீறி தி.மு.க.வினர் மனிதசங்கிலி போராட்டம் நடத்தினர். மனிதசங்கிலி போராட்டம் நடத்திய தி.மு.க.வினர் மீது 10 போலீஸ் நிலையங்களில் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. தடையை மீறி சட்டவிரோதமாக கூடி பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக 2 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில், சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதிக்குட்பட்ட கட்சராயன்பாளையம் ஏரியை பார்வையிட மு.க.ஸ்டாலினுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தடையை மீறி கோவையில் இருந்து கார் மூலம் செல்ல முயன்ற ஸ்டாலினை போலீஸார் கைது செய்தனர்.
இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், தி.மு.க. சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. மனுவில், ”

மனித சங்கிலி போராட்டத்துக்கு அனுமதி இல்லை என்று கூறி, மு.க.ஸ்டாலினை சேலம் மாவட்டத்துக்குள் நுழையவிடாமல் தடுத்து கைது செய்துள்ளனர். ஆனால், அவர் தூர்வாரப்பட்ட ஏரியை முதலில் பார்வையிட இருந்தார். பின்னர் மாலை 4 மணிக்கு மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்க இருந்தார். அமைதியான முறையில் மனித சங்கிலி போராட்டம் நடத்த போலீசார் ஏன் அனுமதி வழங்க மறுக்கின்றனர்? என்பது எங்களுக்கு தெரியவில்லை. கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனே விடுவிக்க உத்தரவிட வேண்டும். தி.மு.க.வின் மனித சங்கிலி போராட்டத்துக்கு அனுமதி வழங்க மறுத்து சேலம் போலீஸ் கமிஷனர் பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும்.” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இம்மனுவின் மீதான விசாரணையை அடுத்து, நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், மனித சங்கிலி போராட்டத்துக்கு அனுமதி வழங்க மறுத்து சேலம் போலீஸ் கமிஷனர் பிறப்பித்த உத்தரவுக்கு ஆகஸ்டு 17-ந்தேதி வரை இடைக்கால தடை விதிப்பதாக உத்தரவிட்டார். வழக்கு விசாரணையை ஆகஸ்டு 17-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.

 

 

Share
Categories
இந்தியா கர்நாடகா சசிகலா தமிழகம் தலைப்புச் செய்திகள்

டிஐஜி ரூபாவிடம் நஷ்டஈடு கோரி, கர்நாடக சிறைத்துறை டிஜிபியாக இருந்த சத்யநாராயணராவ், வக்கீல் நோட்டீஸ்

பெங்களூரு சிறையில் முறைகேடு பற்றிய புகார்களை கூறிய டிஐஜி ரூபாவிடம் 50 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி, கர்நாடக சிறைத்துறை டிஜிபியாக இருந்த சத்யநாராயணராவ், வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.


பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டதாகவும் அதற்காக கர்நாடக சிறைத்துறை டிஜிபி சத்யநாராயணராவ் 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொண்டதாகவும் கூறப்படும் விவகாரத்தை,  டிஐஜி ரூபா அம்பலப்படுத்தி இருந்தார். இது குறித்து அம்மாநில முதல்வர் சித்தராமையா உத்தரவின்பேரில், உயர்மட்ட குழு விசாரணை நடத்த தொடங்கியது.

இதனிடையே, டிஐஜி ரூபா, வேறு பதவிக்கு மாற்றம் செய்யப்பட்டார். டிஜிபி சத்யநாராயணராவ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், டிஐஜி ரூபாவிற்கு சத்யநாராயணராவ் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், சத்யநாராயணராவின் நற்பெயரை கெடுக்கும் நோக்கத்தில், ஆதாரமின்றி, ரூபா குற்றம் சாட்டியுள்ளதாகவும், சிறையில், சசிகலாவுக்கு சிறப்பு சமையல் அறை ஏற்பாடு செய்து கொடுத்ததாக, கூறியுள்ள ரூபா, அதற்கான ஆதாரத்தை வெளியிடவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், தன் மீதான குற்றச்சாட்டு குறித்து, 3 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால், 50 கோடி ரூபாய் கேட்டு மான நஷ்ட வழக்கு தொடரப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Share
Categories
இந்தியா குடியரசு தலைவர் தலைப்புச் செய்திகள் பிரதமர் மோடி

அப்துல் கலாமின் மணிமண்டபத்தை நரேந்திர மோடி திறந்துவைத்தார்

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 2 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, ராமேஸ்வரத்தை அடுத்து தங்கச்சிமடத்திலுள்ள பேக்கரும்பில் அப்துல் கலாமின் மணிமண்டபத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

கலாம் நினைவிடத்திற்கு வந்திறங்கிய மோடியை  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். எடப்பாடி பழனிச்சாமியுடன் தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிமுக எம்.பிக்கள் சிலரும் உடன் இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, வளாகத்தில் கொடி ஏற்றிவைத்துவிட்டு மணி மண்டபத்தை திறந்து வைத்த பிரதமர், அப்துல்கலாமின் குடும்பத்தாருடன் சிறிது நேரம் கலந்துரையாடினார்.

பின்னர், ‘அப்துல் கலாம் – 2020’ என்ற அப்துல் கலாமின் சாதனை பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Share