Categories
உடல்நலம் மூலிகைகள்

நலம் தரும் மூலிகைகள் : 2 – ஆறுமணிப்பூ எண்ணெய் & ஃபிவர்ஃபியூ

ஆறுமணிப்பூ எண்ணெய் மற்றும் ஃபிவர்ஃபியூ ஆகியவற்றின் மருத்துவ பயன்களைப் பற்றி பார்க்கலாம்.

3) ஆறுமணிப்பூ எண்ணெய் (Evening Primrose Oil)

ஆறுமணிப்பூ என்பது மாலையில் மலரும் மலைப்பூ வகையைச் சார்ந்தது. இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் காம்மா லினெலோனிக் அமிலத்தைக் (Gamma Linelonic Acid) கொண்டுள்ளது. இவ்வமிலம் ஒமேகா-6 கொழுப்பின் ஒரு வகையாகும். இதனால் மூட்டுக்களில் ஏற்படும் விறைப்பினை குறைக்க இயலும்.

மேலும் இதனால் மூளையின் ஆற்றல் மற்றும் ஒருமித்த கவனம் ஆகியவற்றை அதிகரிக்கவும் முடியும் என் கருதப்படுகிறது.

ஆறுமணிப்பூ எண்ணெயின் முக்கியமான சில பயன்கள் :

  1. ஹார்மோன்களை சீரான நிலையில் வைத்திருக்க பயன்படுகிறது.
  2. முகப்பரு தொல்லையில் இருந்து விடுபட உதவுகிறது. ஹார்மோன்கள் சீரான நிலையில் இல்லாமல் இருப்பது முகப்பரு உருவாவதன் முக்கியமான காரணங்களில் ஒன்று.  ஆறுமணிப்பூவிலுள்ள ஒமேகா-6 கொழுப்புக்கள்  ஹார்மோன்களை சீராக்குவதால் முகப்பருக்களை குணமாக்க முடியும்.
  3. முடி கொட்டுவதை குறைக்க உதவுகிறது.
  4. தோல் நோய்களான தோல் அழற்சி, சோரியாஸிஸ் போன்றவற்றைக் குணப்படுத்த உதவுகிறது.
  5. முடக்கு வாதத்தைக் குணப்படுத்தவும் பயன்படுகிறது.

4) ஃபிவர்ஃபியூ (Feverfew)

ஃபிவர்ஃபியூ (Feverfew) என்பது ஐரோப்பாவில் வளரும் சிறிய பூ வகையாகும். இதன் பூக்களும் இலைகளும் மூலிகை மருத்துவத்தில் பயன்படுகின்றன.

இச்செடியின் புதிய இலைகளை எடுத்து உண்பதால் ஒற்றைத் தலைவலியை குறைக்க முடியும்.

காய்ச்சல் மற்றும் மாதவிடாய்  ஆகியவற்றால் உண்டாகும் வலியைக் குறைக்கவும் ஃபிவர்ஃபியூவைப் பயன்படுத்தப்படலாம். ஆனால், சிலசமயம் இது குமட்டல் மற்றும் வாந்தியை உண்டாக்கலாம். கர்ப்பிணி பெண்கள் இதனை உட்கொள்ளக் கூடாது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *