Categories
இந்தியா தமிழகம் தலைப்புச் செய்திகள்

சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை நீர்வழி போக்குவரத்து ?

பல்வேறு கடலோர நகரங்களை இணைத்து நீர்வழி போக்குவரத்தை தொடங்க தனி நிறுவனம் அமைக்க மத்தியக் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சகம் தமிழக அரசுடன் கைக்கோர்த்துள்ளது.

இந்த நிறுவனம் சென்னை முதல் கன்னியாக்குமரி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய நகரங்களை இணைக்கும் என கூறப்பட்டுள்ளது. சென்னை காமராஜர் துறைமுகத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளை துவங்கி வைத்த பின் மத்திய கப்பல் மற்றும் சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், நீர்வழி போக்குவரத்துக்காக மாநில அரசுடன் மத்திய அரசு கூட்டு முயற்சியை மேற்கொண்டுள்ளது. சுமார் ரூ.200 கோடி முதலீட்டுடன், சென்னை-கன்னியாகுமரி, கன்னியாகுமரி-திருவனந்தபுரம் உள்ளிட்ட நீர்வழித்தடங்களை துவங்க கூட்டு நிறுவனத்தை வடிவமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

நீர்வழி போக்குவரத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதே இத்திட்டத்தின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *