Categories
உலகம் தலைப்புச் செய்திகள் துபாய் மத்திய கிழக்கு நாடுகள் யூ.ஏ.இ.

86 மாடிகளை கொண்ட துபாய் டார்ச் டவரில் தீ விபத்து

துபாய் நகரிலுள்ள 86 மாடிகளை கொண்ட  பிரபல டார்ச் டவரில் தீ விபத்து ஏற்பட்டு சேதப்படுத்தியுள்ளது.

இது கடந்த இரண்டு ஆண்டுகளில் இக்கட்டிடத்தில் ஏற்பட்டுள்ள இரண்டாவது தீ விபத்து ஆகும்.  சிவில் பாதுகாப்புப் பணியாளர்கள் கட்டடத்திலுள்ள 676 அபார்ட்மெண்ட்களில் வசித்திருந்தவர்களை  பத்திரமாக அப்புறப்படுத்தியதாகவும், தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் பின்னர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீ விபத்து நிகழ்ந்ததற்கான காரணம் என்னவென்று இன்னும் தெளிவாக தெரியவில்லை.

உலகின் மிக உயரமான கட்டிடங்களில் ஒன்றான துபாய் டார்ச் டவர், 337 மீட்டர் (1105 அடி) உயரமானது.

Share

One reply on “86 மாடிகளை கொண்ட துபாய் டார்ச் டவரில் தீ விபத்து”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *