Categories
அமெரிக்கா டெக்ஸாஸ் தலைப்புச் செய்திகள் மாநிலங்கள்

சான் ஆண்டோனியோ வால்மார்ட்டில் நின்ற லாரியில் 9 பேர் இறந்த நிலையில் மீட்பு

அமெரிக்காவின் சான் ஆண்டோனியோ நகரத்திலுள்ள வால்மார்ட் சூப்பர்மார்க்கெட் வாகன நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த லாரியில் இருந்து ஞாயிறு காலை நிலவரப்படி 9 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

வால்மார்ட் வாகன நிறுத்தத்தில் இருந்த கன்டெய்னர் லாரியிலிருந்து உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. கன்டெய்னர் லாரியில் 2 பள்ளிக் குழந்தைகள் உட்பட 38 பேர் இருந்துள்ளனர். கன்டெய்னருக்குள் இருந்தவர்கள் வால்மார்ட் ஊழியரிடம் தண்ணீர் கேட்டுள்ளனர். சரக்கு ஏற்றும் கன்டெய்னரில் மனிதர்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் போலீசுக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து கன்டெய்னரில் இருந்த 38 பேரில் 8 பேர் உயிரிழப்பு, 20 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். கன்டெய்னரில் அடைத்து மனிதர்களை கடத்தி வந்திருக்கலாம் என்று காவல் துறையினர் கூறியுள்ளனர்.

இச்சம்பவம் நிகழ்ந்த இடத்திலிருந்து மெக்ஸிகோ எல்லை 130 மைல் தொலைவில் உள்ளது. இதில் சம்பந்தப்பட்ட லாரியானது அயோவா மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டது. இருப்பினும், அந்த லாரி எங்கிருந்து வால்மார்ட் வாகன நிறுத்தத்திற்கு வந்தது என்றோ, எவ்வளவு நேரமாக அங்கு நின்று கொண்டிருந்தது என்றோ இன்னும் தெளிவாகவில்லை. காவல்துறை ஆய்வாளர்கள் இன்னும் இதனைக் குறித்து விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

Share

One reply on “சான் ஆண்டோனியோ வால்மார்ட்டில் நின்ற லாரியில் 9 பேர் இறந்த நிலையில் மீட்பு”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *