Categories
இந்தியா கொல்கத்தா தலைப்புச் செய்திகள் திரிணாமுல் காங்கிரஸ் மேற்கு வங்காளம்

மாபெரும் ஊழல்களில் ஈடுபட்டுள்ள பாஜக அரசு 2019-ல் ஆட்சியை இழக்கும்: மம்தா பானர்ஜி

பல மாநிலங்களில் மாபெரும் ஊழல்களில் ஈடுபட்டு வரும் பாஜக அரசு 2019-ல் ஆட்சியை இழக்கும் என்று மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.

இந்தியா விட்டு பா.ஜ.வை வெளியேற்றும் புதிய இயக்கத்தை ஆக.9 -ம் தேதி மாநிலம் முழுவதும் துவங்கப்போவதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சூளுரைத்துள்ளார்.

நேற்று, கோல்கட்டாவில் திரிணாமுல் காங். கட்சி சார்பில் தியாகிகள் தின பேரணி நடந்தது. இதில் கலந்து கொண்டு முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது :

 

ராஜஸ்தானில் ஆயிரம் கோடிக் கணக்கான ரூபாய்கள் மதிப்புள்ள ஊழல் புகார் எழுந்துள்ளது, சிபிஐ எங்கு சென்றது. என்ன தூங்கிக் கொண்டிருக்கிறார்களா? கர்நாடகாவில் ரெட்டி சகோதரர்கள் ஈடுபட்டுள்ள ஊழலின் அளவு எத்தனை பெரியது அவர்கள் பாஜகவின் நண்பர்களோ?

மத்தியப் பிரதேசத்தில் நாட்டையே உலுக்கிய வியாபம் ஊழல், இதில் பலர் ஏற்கெனவே கொல்லப்பட்டுள்ளனர். எங்கே சிபிஐ? குஜராத் பெட்ரோலியம் ஊழல் ரூ.20,000 கோடிபெறும் எங்கு அரசு விசாரணை முகமைகளான சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை?

பாஜகவை எதிர்ப்பதில் வேறு எந்தக் கட்சியை விடவும் அதிகக் குரல் எழுப்புவது நாங்களே. சிபிஐ மூலம் எங்கள் வாயை அடைக்க முடியாது.

நாங்கள் நல்லவர்களா கெட்டவர்களா என்பதற்கு பாஜகவின் சான்றிதழ் தேவையில்லை.  மக்கள் கொடுக்கும் நற்சான்றிதழ்தான் எங்களுக்கு முக்கியம்.

யார் பணமதிப்பு நீக்கத்துக்கும், ஜிஎஸ்டிக்கும் எதிராக குரல் எழுப்புகிறார்களோ அங்கெல்லாம் சிபிஐ கட்டவிழ்த்து விடப்படுகிறது.

2019 லோக்சபா தேர்தலுக்குப் பின் மோடி பிரதமர் அலுவலகத்தைக் காலி செய்து கொண்டு போக வேண்டியதுதான்.

ஆனால் அடுத்த ஆண்டே நாடாளுமன்றத் தேர்தலை வைக்கப்போவதாக பேச்சு அடிபடுகிறது. சாரதா, நாரதா என்று நீங்கள் சொல்லுங்கள். ஆனால் 2019-ல் பார்தாக்கள் அதிகாரத்தை விட்டு போய்விடுவார்கள், இது அவர்களுக்கு நான் விடுக்கும் சவால், இந்தத் தியாகிகள் தினத்தில் இந்தச் சவாலை முன்வைக்கிறேன்.

சாரதா சிட்பண்ட் மோசடி, நாதரா ஸ்டிங் ஆபரேசன் போன்ற வழக்குகளில் எனது கட்சியினரை சிக்க வைக்க பார்க்கிறது. இதற்காக சி.பி.ஐ.யை கைப்பாவையாக பயன்படுத்துகிறது பா.ஜ., இதற்கெல்லாம் நான் ஒரு போதும் அஞ்ச மாட்டேன்.

யார் என்ன சாப்பிட வேண்டும், யார் என்ன உடை அணிய வேண்டும் என்று உத்தரவிட இவர்கள் யார்? சிலர் இறைச்சி சாப்பிடமுடியவில்லை என்றும் கர்ப்பிணிப் பெண்கல் முட்டை சாப்பிட முடியவில்லை என்றும் புகார் அளிக்கின்றனர். பின் எதைத்தான் உண்பார்கள்?

தங்கள் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றனவா என்பதே சாமானிய மக்களுக்கு தெரியவில்லை, தலித்துகளும், சிறுபான்மையினரும் கவுரவமாக வாழ முடியுமா என்று ஐயம் கொண்டுள்ளனர். இந்துக்களே கூட சில போலி இந்துக்களால் அச்சமடைந்துள்ளனர்.

பெங்கால் தவிர டெல்லியிலும் கூட யாருக்கும் பாதுகாப்பில்லை. பாஜக தலைவர்களில் சிலரை விமர்சிக்கும் நோபல் பரிசு வென்ற அமர்த்யா சென்னுக்கே நாட்டில் பாதுகாப்பில்லை.

நாடு சுதந்திரம் பெற ஆங்கிலேயர்களை இந்தியாவை விட்டு வெளியேற்ற மகாத்மா காந்தி 1942-ம் ஆண்டு ஆக. 9-ம் தேதி “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தை துவக்கினார். அதே போன்று பா.ஜ. வை இந்தியாவை விட்டு வெளியேற்ற வரும் ஆக. 9-ம் தேதி புதிய இயக்கத்தை துவக்க உள்ளேன். இந்த இயக்க போராட்டம் ஒவ்வொரு பார்லி. லோக்சபா தொகுதியிலும் நடக்கும். எனது கட்சி எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள், எம்.பி.க்கள் பங்கேற்று பிரசாரம் செய்வார்கள். பா.ஜ.வை எதிர்க்கும் கட்சிகள் இந்த இயக்கத்திற்கு ஆதரவு தர வேண்டும் என்று மம்தா கூறினார்.

 

Share

One reply on “மாபெரும் ஊழல்களில் ஈடுபட்டுள்ள பாஜக அரசு 2019-ல் ஆட்சியை இழக்கும்: மம்தா பானர்ஜி”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *