Categories
இந்திய வம்சாவளி இந்தியா உலகம் கனடா தலைப்புச் செய்திகள்

கனேடிய இந்திய வம்சாவளியினரான லில்லி சிங் யுனிசெஃப் நல்லெண்ணத் தூதுவராக நியமனம்

கனேடிய இந்திய வம்சாவளியினரான லில்லி சிங் யுனிசெஃப் நல்லெண்ணத் தூதுவராக நியமிக்கப் பட்டார்.

யூ டியூப் வட்டாரத்தில் ‘சூப்பர் உமன்’ என்ற பெயரில் பிரபல நட்சத்திரமான இவர் ஹிந்தியில் சில காணொலிகளை வெளியிட்டும், அதே போல ஆங்கில காணொலிகளில் ஹிந்தி சப்-டைட்டில்களை இடுவதன் மூலம் தனது வலைப்பதிவும், சேனலும் ஏராளமானவர்களை சென்றடைய செய்யப்போவதாக கூறினார்.

யூ டியூப்பில் 11.9 மில்லியன் சந்தாதாரர்களை வைத்துள்ள இவர் இந்த ஐநா அமைப்பின் பணிகளை விளக்கி தன்னைப் பின் தொடர்பவர்களை குழந்தைகளின் நலனுக்கு வேலை செய்ய வலியுறுத்தவுள்ளார்.  ஓரு புதிய முயற்சியாக சமூக வலைதளங்களில் #பெண் குழந்தைகளின் மீது அன்பு எனும் ஹேஷ்டேக்கில் பெண் குழந்தைகளின் மீதான வெறுப்பை தடுத்து நிறுத்தும் நோக்கோடு பிரச்சாரத்தை துவங்கியிருக்கிறார். இவர் டெல்லியில் முகாமிட்டு யுனிசெஃப்பின் யூத் ஃபார் சேஞ்ச் எனும் முயற்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.  இம்முயற்சி உடல்நலம், சுகாதாரம், சிறார் தொழிலாளர் மற்றும் பாலியல் சமத்துவம் ஆகியவற்றின் தொடர்பில் இயங்கி வருகிறது. “குழந்தைகளின் நலனுக்கு  ஆதரவளிக்க எனது குரலை அளிக்க கிடைத்த வாய்ப்பினால் கௌரவிக்கப்படுகிறேன். சமூகத்திற்காக அல்லாமல் சிறார்களுக்காக குரல் கொடுப்பதற்கான நேரம்” என்றார் லில்லி.
Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *