Categories
தமிழகம் தலைப்புச் செய்திகள் தேமுதிக

ஜனாதிபதி தேர்தல் முடிந்ததும் அதிமுக ஆட்சி கவிழும் : பிரேமலதா

ஜனாதிபதி தேர்தல் முடிந்ததும் அதிமுக ஆட்சி தானாக கவிழும் என்று தேமுதிக தலைவர் விஜய்காந்தின் மனைவி  பிரேமலதா, தனியார் தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தில் பங்கு பெற்றுப் பேசும்போது தெரிவித்தார்.

அவர் கூறியதாவது : “கடந்த சட்டசபைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியோடு இணைந்து போட்டியிட்டோம். மக்கள் நலக் கூட்டணியை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால்தான் தோற்றுப் போனோம். ஆனால், இந்த தோல்வி என்பது மிகவும் தற்காலிகமானது. அதே போன்று தேர்தலில் தோல்வி அடைவது என்பது சகஜமானது. அடுத்து வரும் தேர்தலில் தேமுதிக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்”, என்றார்.

மேலும் அவர், “நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைத்து 3 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை மோடி எந்த சாதனையையும் இந்தியாவில் நிகழ்த்தவில்லை”, என்றும் கூறினார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *