உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.என்.பகவதி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 95. மும்பையில் பிறந்து வளர்ந்த பகவதி, வழக்கறிஞராக மும்பை ஐகோர்ட்டில் பணியாற்றியிருந்தார். 1973-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகவும், பின்னர் சுப்ரீம் கோர்ட்டின் 17-வது தலைமை நீதிபதியாக கடந்த 1985-86-ம் ஆண்டுகளிலும் திறம்பட பணியாற்றினார். வயது முதுமை காரணமாக கடந்த சில நாட்களாக உடல் நலகுறைவால் சிகிச்சை பெற்றுவந்த நிலையில். நேற்று காலமானார். இவருக்கு மனைவியும், முன்று மகள்களும் உள்ளனர். பகவதி இறுதி சடங்கு நாளை(ஜூன்17) நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Categories
உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.என்.பகவதி காலமானார்

