Categories
ஃபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் : 10வது முறையாக ரபேல் நடால் சாம்பியன்

பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் 10வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று மகத்தான சாதனை படைத்தார்.

விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் சுவிஸ் வீரர் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரிங்காவுடன் (3வது ரேங்க்) நேற்று மோதிய நடால், அதிரடியாக விளையாடி 6-2, 6-3, 6-1 என்ற நேர் செட்களில் வென்று கோப்பையை கைப்பற்றினார். களிமண் தரை மைதானத்தில் நடக்கும் பிரெஞ்ச் ஓபனில் அசைக்க முடியாத சக்தியாக ஆதிக்கம் செலுத்தி வரும் நடால் 10வது முறையாக சாம்பியன் பட்டம் ((2005 -08, 2010-14, 2017) வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இது அவர் பெறும் 15வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *