Categories
உலகம் தலைப்புச் செய்திகள் மியான்மர்

மியான்மரில் 104 பேருடன் காணாமல்போன ராணுவ விமானம் கடலில் விழுந்ததாக தகவல்

மியான்மரில் 104 பேருடன் காணாமல் போனதாக கூறப்பட்ட ராணுவ விமானம் தற்போது கடலில் விழுந்து நொறுங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் பயணம் செய்த அனைவரும் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

இன்று காலை 90 வீரர்கள் மற்றும் 14 விமான ஊழியர்களையும் ஏற்றிக் கொண்டு மியான்மர் நாட்டின் ராணுவ விமானம் ஒன்று தெற்கில் உள்ள மியெய்க் நகரத்தில் இருந்து யாங்கூன் நகருக்கு சென்று கொண்டிருந்தது.

அப்போது, சர்வதேச நேரத்தின்படி இன்று காலை 7.05 மணிக்கு அந்த விமானம், விமானக் கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்தது. தவேய் நகருக்கு 20 கி.மீ மேற்கில் இந்த விமானம் மாயமானது.

தற்போது இந்த விமானத்தை தேடி வருவதாக ராணுவ தளபதி தெரிவித்திருந்தார். இதற்கிடையே மாயமான இந்த விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அந்த விமானத்தில் பயணம் செய்த 104 பேர் உயிரிழந்துள்ளனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *