Categories
காவல் துறை தமிழகம்

சென்னை: புதிய காவல் ஆணையராக ஏ.கே.விஸ்வநாதன் நியமனம்

சென்னை மாநகர காவல் ஆணையராக டாக்டர் ஏ.கே. விஸ்வநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். காவல் ஆணையராக இருந்த கரண் சின்கா தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினராக நியமிக்கப்படுகிறார். தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினராக இருந்த சுனில்குமார் சிங் ஊர்க்காவல் படை ஏ.டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரை போக்குவரத்து காவல் துணை ஆணையராக மணிவண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். காவல் தலைமை அலுவலக துணை ஆணையராக எஸ்.சரவணன் நியமனம். மெட்ரோ ரெயில் தலைமை பாதுகாப்பு அதிகாரியாக ஜெயகவுரி நியமனம். ஊர்க்காவல் படை ஏடிஜிபியாக சுனில்குமார் சிங் மாற்றப்பட்டுள்ளார். காவல் தலைமை அலுவலக ஏடிஜிபியாக எம்.ரவி நியமனம்.

இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *