வட கொரியா: நாளை மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை

வட கொரியா: நாளை மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை
Jul 26, 2017

நாளை மீண்டும் வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஒன்றை பரிசோதிக்க உள்ளதாக அமெரிக்க மற்றும் தென் கொரிய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

தென்கொரியாவுடன் சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டதை ராணுவ தினமாக வடகொரியா நாளை கொண்டாடுகிறது. அச்சமயத்தில்,  வடகொரியாவின் பியோங்கன் மாகாணத்தில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை ஏவுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன என செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே வடகொரியாவின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து வருவதாக தென் கொரியா பாதுகாப்புத் துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.