பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்ட 78 இந்திய மீனவர்களை விடுவிக்கப்பட்டனர்
Jul 10, 2017
பாகிஸ்தான் எல்லையில் அரபிக்கடலில் அத்துமீறி புகுந்து மீன்பிடித்ததாக பாகிஸ்தான் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய மீனவர்கள் 78 பேரை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் நேற்று அறிவித்தது. பாகிஸ்தானின் கராச்சியின் லான்டிகி ஜெயிலில் உள்ள 78 இந்திய மீனவர்கள் விடுதலையாகி உள்ளனர்.
இதுகுறித்து சிந்துமாகாண உள்துறை செயலாளர் நசீம் சித்திக் கூறுகையில் ‘பாகிஸ்தான் சிறையில் உள்ள 78 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் இன்று(திங்கட்கிழமை) இந்திய கடற்படையினரிடம் ஒப்படைக்கப்படுவார்கள். இன்னும் 298 இந்திய மீனவர்கள் பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் இந்தியாவை சேர்ந்தவர்களா? என்பதை உறுதி செய்யும் பணி நடக்கிறது. அதன்பின்னர் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள்’ என்றார்.
