பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 16 அமர்நாத் திருப்பயணிகள் பலி

Jul 16, 2017

ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள ராம்பன் மாவட்டத்தில், ஜம்மு – ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பஸ் ஒன்று பள்ளத்தில் விழுந்ததில் 16 அமர்நாத் திருப்பயணிகள் இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 25 பேரு படுகாயம் அடைந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இது குறித்து அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், ரம்பன் மாவட்டத்தில் பானிஹால் பகுதியில் உள்ள நச்சிலா பகுதியில் உள்ள ஒரு இராணுவ முகாமுக்கு அருகே இச்சம்பவம் நடைபெற்றது என்றார். மேலும், ஸ்ரீநகரில் பதிவு செய்யப்பட்டுள்ள, பதிவு எண் JK02Y 0594 ஐ கொண்ட பேருந்து பள்ளத்தில் விழுந்தது என்றார்.
ஜம்முவிற்கு சிறப்பு சிகிச்சைக்காக படுகாயமடைந்த பத்தொன்பது பேர் ஹெலிகாப்டரில் கொண்டு செல்லப்பட்டதாக அவர் கூறினார்.
