காஷ்மீரில் லஷ்கர் - இ - தொய்பா தீவிரவாதிகள் 6 போலிஸாரை கொன்றனர்

காஷ்மீரில் லஷ்கர் - இ - தொய்பா தீவிரவாதிகள் 6 போலிஸாரை கொன்றனர்
Jun 17, 2017

முன்னெப்போதும் இல்லாத கொடூரத்துடன் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் காஷ்மீரில் 6 போலிஸாரை கொன்று அவர்களது முகங்களை துப்பாக்கிக் குண்டுகளால் சிதைத்திருக்கின்றனர்.

ஆனந்த்நாக் மவட்டத்தில் அசாபால் பகுதி தாஜிவாரா என்ற இடத்தில்  நேற்று மாலை, போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவர்கள் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில், சப் இன்ஸ்பெக்டர் பெரோஷ் உள்ளிட்ட 6 போலீசார் பலியானதாக போலீஸ் டிஜிபி வைத் கூறி உள்ளார். பலியான பெரோஷ் புல்வாமா மாவட்டத்தை சேர்ந்தவர். அவருடன் சென்ற டிரைவர் மற்றும் 4 காவலர்கள் பலியாகி உள்ளனர்.

இச்சம்பவம் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி ஜுனைத் மாட்டூ என்பவனை பாதுகாப்புப் படையினர் கொன்ற சில மணி நேரங்களில் நடந்துள்ளது. ஆகவே இது லஷ்கரின் வஞ்சம் தீர்க்கும் நடவடிக்கையாக கருதப்படுகிறது.