ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிரோபி: இன்று இறுதிப் போட்டியில் இந்தியா சொதப்பல் தோல்வி

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிரோபி: இன்று இறுதிப் போட்டியில் இந்தியா சொதப்பல் தோல்வி
Jun 18, 2017

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் இந்தியா தோல்வியைத் தழுவியது.

பாகிஸ்தான் – 338 ரன்கள் (4 விக்கட்)

இந்தியா – 158 ரன்களுடன் ஆல் அவுட்


ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. பாகிஸ்தான் 41.5 ஓவர்களில் 3 விக்கெட் இழந்து 265 ரன்கள் பெற்றுள்ளது.


எல்லோரும் ஆவலுடன் எதிர்பாத்துக் கொண்டிருக்கும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிரோபியின் இறுதிப் போட்டி இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடக்கிறது.

இதில் கோப்பையை வென்று ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய இரு அணி  வீரர்களும் முழு திறமையையும் வெளிப்படுத்த உள்ளனர். இந்நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெறப் போவது யார் என்பதை வைத்து  சூதாட்டமும் கொடி கட்டிப் பறக்கிறது. இங்கிலாந்தில் ஆன்லைன் சூதாட்டம் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதால், பெட் கட்டுவதற்காக ரசிகர்கள்  பணத்தை அள்ளி வீசுகின்றனர்.