ஆதார் அட்டைக்காக கைரேகை பதிவு செய்வதில் எவ்வித உரிமை மீறலும் இல்லை : மத்திய அரசு

May 2, 2017
ஆதார் அட்டைக்காக கைரேகை உள்ளிட்டவற்றை பதிவு செய்வது எவ்விதத்திலும் உரிமை மீறல் இல்ல என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி தெரிவித்துள்ளார். மேலும் மரபணு சோதனை மேற்கொண்டாலும் தவறில்லை என்றும் முகுல் ரோத்தகி கூறியுள்ளார். பிறநாடுகளில் அடையாள அட்டை வழங்க மரபணு சோதனை மேற்கொள்ளபடுவதாகவும், சமுதாயத்தை ஒழுங்குபடுத்த ஆதார் அவசியமானது என்றும் தெரிவித்தார். விமான பயணத்திற்கு கூட சோதனைக்கு பின்னரே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர் என்றும் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி தெரிவித்துள்ளார்.
