அமெரிக்க முன்னாள் உளவு இயக்குனர் சாட்சியத்தில் வெளியான 6 விஷயங்கள்

அமெரிக்க முன்னாள் உளவு இயக்குனர் சாட்சியத்தில் வெளியான 6 விஷயங்கள்
Jun 9, 2017

அமெரிக்க மத்தியப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் இயக்குநர் ஜேம்ஸ் கோமி, செனட் புலனாய்வுக் குழுவிடம் சாட்சியமளித்தார்.

சுமார் 3 மணிநேரம் நீடித்த சாட்சியத்தில், வெள்ளை மாளிகை விருந்து ஒன்றில், தமக்கு விசுவாசமாக நடந்துகொள்ளுமாறு அதிபர் கேட்டுக்கொண்டதாக அவர் சொன்னார்.

மேலும் அவரது சாட்சியத்திலிருந்து வெளியாகும் 6 விஷயங்கள் :

1) டிரம்ப் மத்தியப் புலனாய்வுப் பிரிவின் விசாரணையில் இல்லை

செனட்டர் மார்கோ ரூபியோவின் கேள்வியொன்றுக்கு, கோமி அளித்த பதிலில் ‘டிரம்ப் மத்தியப் புலனாய்வுப் பிரிவின் விசாரணையில் இல்லை’ என்று கூறியிருக்கிறார்.

2) ஜேம்ஸ் கோமி விசாரணையின் ஆவணங்களை ஊடகங்களில் கசியவிட்டார்

ஜேம்ஸ் கோமி அவரது நண்பர்களின் வழியாக விசாரணையின் ஆவணங்களை ஊடகங்களில் கசியவிட்டதை ஏற்றுக்கொண்டார்.

3) டிரம்ப் நீதிக்குத் தடை ஏற்படுத்தினார் என்ற வாதம் இனி எடுபடாது

குடியரசு கட்சியின் செனட்டர் ஜேம்ஸ் ரிஷ், கோமியிடம் எழுப்பிய கேள்விகளின் அடிப்படையில் பார்த்தால், டிரம்ப் கோமியிடம் இப்படித்தான் செய்யவேண்டும் என்று கூறவில்லை என்பதை கோமி  ஒத்துக்கொண்டார்.

4) நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகை பொய்ச்செய்தி வெளியிட்டது என்று கோமி கூறினார்

ஒரு கேள்விக்குப் பதிலளிக்கையில், கோமி சொல்வது :  “நான் ரகசிய செய்திகளைப் பற்றி எழுதும் நிருபர்களைக் குறை சொல்லவில்லை.. பிரச்சனை என்னவென்றால், இவைகளைப் பற்றி எழுதுபவர்களுக்கு உண்மையில் என்ன நடக்கிறது என்று தெரிவதில்லை.. தெரிந்தவர்கள் அவைகளைப் பற்றி பேசுவதில்லை..”

5) அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவின் அரசு வழக்கறிஞர் லொரேட்டா லின்ச், ஹிலாரியின் மீதான விசாரணையில் குறுக்கிட்டார்

6) கோமியின் குற்றச்சாட்டுகள் பொதுவாக அதிருப்தியடைந்த முன்னாள் ஊழியர்கள் சொல்வதைப் போலவே உள்ளது