அமெரிக்க முன்னாள் அரசு வழக்கறிஞர் பிரீட் பாராரா டிரம்ப் மீது குற்றச்சாட்டு

அமெரிக்க முன்னாள் அரசு வழக்கறிஞர் பிரீட் பாராரா டிரம்ப் மீது குற்றச்சாட்டு
Jun 13, 2017

அமெரிக்க முன்னாள் முன்னிலை பெடரல் அரசு வழக்கறிஞரான பிரீட் பாராரா, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் இருந்து பல தொலைபேசி அழைப்புகளை பெற்றதாகவும், மூன்றாவது தொலைபேசி அழைப்பு ஒன்றை எடுக்காத பிறகு, தான் பதவி நீக்கம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். இது குறித்து வெள்ளை மாளிகை இன்னும் பதிலளிக்கவில்லை.

நிர்வாக கிளையையும், சுயாதீன குற்றவியல் ஆய்வாளர்களையும் பிரிக்கிற வழக்கமான எல்லைகளை டிரம்ப் தாண்டி விட்டதாக பிரீட் பாராரா தெரிவித்தார்.

பிரீட் பாராரா நியுயார்க்  தெற்கு மாவட்ட முன்னிலை பெடரல் அரசு வழக்கறிஞராக 2009-லிருந்து 2016 வரை பணியாற்றினார்.

இந்தியாவில் பிறந்த பிரீட் பாராரா, 1970-ல் அவரது பெற்றோருடன் அமெரிக்காவில் குடிபெயர்ந்தவர். வழக்கறிஞராக பணியாற்றிய இவர் ஜனநாயக கட்சியின் செனட்டர் சக் ஷூமரின் ஆலோசகராகவும் சிலகால பணியாற்றினார்.

பல்வேறு புகழ்பெற்ற நிறுவனங்களையும் கோர்ட்டுக்கு இழுத்து தண்டனை வாங்கிக் கொடுப்பதில் பேர்பெற்றவர்.

பாராராவால் தண்டனையும் தண்டப்பணம் செலுத்தவும் வைக்கப்பட்டவர்கள் சிலர் :